Wednesday, November 28, 2007

vselv.....@gmail.com>
reply-to muthth...@googlegroups.com,
to muthth.....@googlegroups.com,
date Nov 28, 2007 12:29 PM
subject [muththamiz] Re: ஆங்கிலம் தெரியாத மாணவர் தற்கொலை
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com

hide details 12:29 PM (2 hours ago)



Reply


ரிஷி அண்ணா,,

முத்தமிழ் குடும்பத்தின் சார்பிலேயே வாழ்த்துகின்றேன்...

நம்பிக்கை நம்பிக்கை தன் மேல் நம்பிக்கை விடா முயற்சி இதுவே நமக்கு வேண்டும்..

மிகப் பயனுள்ள கட்டுரை....எப்போதும் போலவே எழுதிய நடையும் உள்வாங்கிக் கொள்ளும் படி எளிமையாக இருக்கு அண்ணா...

வா...ழ்...த்...து....க....ள்!


- Hide quoted text -
On 11/27/07, Raveendran Krishnasamy wrote:

- Hide quoted text -
அந்த மாணவனை மட்டுமே குறை சொல்லிவிடமுடியாது....

நானும் தமிழ் வழிக் கல்விதான். கல்லூரியில் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்ததும் ஒரு மிரட்சி; பயம்....

நகர்ப்புற மாணவ மாணவிகளைக் கண்டு அஞ்சி விலகி ஓடினேன். எல்லாப் பய புள்ளைகளும் ஒரே ஒங்கிலீபிசுலேயே பேசி டார்ச்சர் பண்ணிட்டானுங்க. பயத்துனால சுத்தமா படிப்பே வர்லே....

ஆனா வீட்லயம் ஊர்லயும் திட்ரதை நான் அவ்வளவா சட்டை பண்ணல..டேக் இட் ஈஸியா எடுத்துட்டேன்.

அப்ப எனக்குள் நான் சொல்லிக்கொண்ட சமாதானம் இதுதான்...

ஆனானப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை பாலிடெக்னிக் எண்ட்ரன்ஸ்ல ரெண்டு தடவை ஃபெயிலாகித்தான் சீட்டு பிடிச்சார்... படிக்றப்ப அவர் ஒரு மக்கு ன்னு வாத்தியார் சொன்னார்....

எடிசனை சரியான மக்குன்னு சொல்லி ஸ்கூல்ல சேத்துக்கவே இல்லை...

டைனமோ கண்டுபிடிச்ச மைக்கேல் ஃபாரடே அவ்வளவா படிக்க வசதியில்லாததால் புத்தகம் பைண்டிங் பண்ணிட்ருந்தார்...

அதனால் நானும் அவங்கள மாதிரி மேலே வருவேன்....

இப்ப நான் இருக்ற நிலை...வாத்தியார்கள் மற்றும் யுனிவர்சிடியின் அபிப்ராயம். அது அவர்களின் கருத்து; ஆனால் என்னோட நிஜம் வேறு. பரீட்சையில் கூட 35 மார்க் வாங்கினால் பாஸ் னு ஒரு அளவுகோல் வச்சி என்னை எடைபோடுறாங்க.... அவங்க அளவுகோல் வேற; என்னோட அளவுகோல் வேற...

நான் ப்ளாட்ஃபாரத்துல இருந்தாலும் வாழ முடியும்...கோபுரத்து மேலேயும் ஏற முடியும்...

அப்டீன்னு ஒரு 1000 தடவை என்னை நானே சமாதானப்படுத்தியிருந்தேன்.

Physics Associationல் எல்லாரும் ஆங்கிலத்தில் பேச... நான் தைரியமாய் தமிழில் என்னோட கண்டுபிடிப்புக்களை அள்ளிவிட....

எல்லார் பார்வையும் என் மீது பட்டது....

அட.... இந்த அழுக்கு மஞ்சப் பைக்காரன் ட்ட எதோ ஒரு சரக்கு இருக்குடோய் னு ஒரு அபிப்ராயம் வந்துச்சி....

அப்றம் எல்லா மேடையிலயும் எல்லா துறையிலயும் வெளாசி வாங்கினேன்....

கவிதையரங்கம், பட்டிமன்றம். மேடைப் பேச்சு... நாடகம்...அப்டீன்னு... சில நாடகங்கள் ("வேதம் புதுமை செய்..." யுனிவர்சிடி அவார்ட் வாங்கிச்சி...) எல்லாராலயும் நல்லா கவனிக்கப்பட்டது. (இப்போ குறும்பட இயக்குனரா இருக்ற பாலாஜி கிருஷ்ணகுமார் ... தமுஎச வில் என்னோட நாடகங்கள்...)

நடைபாதை நாடகக்குழு ஆரம்பிச்சி ஊர் ஊரா கிராமம் கிராமமா போட முடிஞ்சது...

அப்றந்தான் தெரிஞ்சது இங்கிலீபீசு ஒன்னும் ஒரு பெரிய விஷயமே இல்லை... பொறக்றப்ப நமக்கு என்ன மொழி தெரிஞ்சது....? னு ஒரு ஞானம் வந்துச்சி....

அந்த பயபுள்ளைகளுக்கு இங்கிலிபீஷ் ல படிக்க ஒரு வாய்ப்பு இருந்துச்சி... நான் கிராமத்துல விவசாயம் பண்றதால அந்த வாய்ப்பு எனக்குக் கெடைக்காம போயிருச்சி... அதனாலென்ன...? படிப்பு ஒன்னுதானா வாழ்க்கை...?

ஜீடி நாயுடு எந்த யுனிவர்சிடியில படிச்சி விஞ்ஞானியானார்...?
மைக்கேல் ஃபாரடே என்ன படிச்சவரா,...?
ஐன்ஸ்டீனே பாலிடெக்னிக் எண்ட்ரன்ஸ் ல கோட்டடிச்சவர்... அப்றம் பாலிடெக்னிக்ல நிறைய அரியர்ஸ் வச்சிருந்தார்... அவர் பெரியாள் ஆகலையா...?

எடிசன் எங்கன படிச்சார்...?

அப்பத்தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது...

படிச்சவங்களால முன்னேற முடியாதுன்னு...!

ஏன்னா அவங்க முன்னேற்றம் னு நினைக்கிறது... வேளாவேளைக்கு சோறு; ஒரு ஃப்ளாட் ஒரு குடும்பம்; நல்ல அந்தஸ்து; பென்ஷன் நகர்ப்புற வாழ்க்கை... இதுக்கு மேலே அவங்களால உயரமுடியாது...னு பட்டுச்சி..

நீ யார்...? அந்த மாதிரி சராசரி மனிதனாகவா வாழ விரும்புகின்றாய்..?

தாண்டனும்.... தாண்டனும்.... தடைகளைத் தாண்டனும்....

இப்ப வேணா முடியாம இருக்கலாம்...

ஒரு காலத்துல நடக்க முடியாம தவழ்ந்துட்டு இருந்தோம்...
நடக்க முயற்சிக்றப்ப எத்தனை தடவை கீழே விழுந்துருப்போம்...? இப்ப எவ்ளோ ஓட்டமா ஓட முடியுது...? பி.டி. உஷா கூட சின்ன வயசுல முதன் முதலா நடக்கக் கத்துக்கிட்ட பொழுது எத்தனை தடவை விழுந்து அழுதிருப்பாங்க...? பிறகு ஓட்டத்துல தங்கப்பதக்கம் வாங்கலியா...?

ஒரு காலத்துல சைக்கிள் ஓட்றவங்களைப் பாத்தா ரொம்ப அதிசயமா இருந்துச்சி...

கத்துக்கிட்டதக்கப்பறம்...? சைக்கிள் யாத்ரா போகலியா....?

நீச்சலடிக்றவங்களைப்பாத்தா பொறாமையா இருந்துச்சி...அப்றம் தண்ண்மேலே மிதக்ற கலைய கத்துக்கலயா....?

தலைகீழா நின்னு சிரசானம் கத்துக்கலயா...? வெட்டவெளித் தரையில் நட்டநடுவில் பிடிமானமின்றி தலைகீழாய் நிற்கவில்லையா...?

எல்லாம் பழக்கம்; பழக்கம் வர பயிற்சி செய்யவேண்டும்....ஆயிரம் முறை முயன்று தோல்விகண்டாலும் 1001 வது முறை முயலுங்கள் னு விவேகாந்தர் சொன்னத வேதவாக்கா எடுத்துக்கிட்டோம்னா புரியும்...

1000 முறை பயிற்சி எடுங்கள்.... வெற்றி நிச்சயம்....

ஆங்கிலம் மட்டுமல்ல; கடினமான ஜப்பான் மொழி கூட கற்கலாம்...
ரஷ்யன் மொழியும் சரி; ஜப்பான் மொழியும் சரி முதன் முதலில் வகுப்பறையில் அமரும்பொழுது மிகவும் கடினமாகவே இருந்தது...(அது ரொம்ப வருஷத்துக்கு முந்தி படிச்சதுங்கோ...இப்ப சுத்தமா மறந்து போச்சு..!)

அவ்ளோதாங்க....

ச்யாவ்ஸ்... (குட்பை ன்னு ஜெர்மனில ...)







On Nov 27, 2007 8:22 PM, Kamesh wrote:

// என்னதான் இருந்தாலும் தற்கொலை தான் இதற்கு முடிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை!.கவலையாகத்தான் இருக்கிறது//

ஆமாங்க.. தற்கொலைக்கு தூண்டிய சூழலையும் கவனிக்க வேண்டும்..
அவனுக்கு Pressure இல்லையென்றால் ஏன் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும்.
10 அல்லது 12 வகுப்பு வரை எல்லா பாடங்களிலும் சிறந்து விளங்க்கிய
மாணவன் கல்லூரியில் பெயில் ஆவதை அவனால் தாங்க்கிக் கொள்ளவே
முடியாது..
அதனால் தான் மாணவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்ச்சியை
ஏற்படுத்த வேண்டுமென்பது எனது ஆசை..
அதை ஒரு பாடமாக கூட நடத்தலாம்.. அல்லது விளையாட்டு போன்றும்
நேரம் ஒதுக்கலாம்..

நான் படிக்கும் போது காலை முதல் Period நல்லொழுக்கத்துக்காக
ஒதுக்கப்பட்டது..அதில் எல்லா பெரியவர்க்ளின், மதங்களின்
கதைகள் மட்டுமே கற்றுத்தரப்படும்.. இப்பொழுது இருக்கிறாதா என தெரியவில்லை...


மாணவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது..
என் பள்ளி தோழர்கள் ஆங்கில வழி கல்விக்கு பயந்துக் கொண்டு
படிப்பை தொடரவில்லை.. இது உண்மை.
என்னுடன் தொடங்கியவர்கள்
சிலர் பாதியிலேயே நிறுத்தி விட்டனர்.
சிலர் தமிழ் புத்தங்க்களைப் படித்து பரிட்ச்சை மட்டும் எழுதினார்கள்.
அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை

இது மிகவும் வேதனைக்குரியது..











--------------------------------------------------------------
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்

www.rishiraveendran.com
www.rishiraveendran.tk

"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."


Remind Me My Lord Who I Am
I Am Om, I Am Om, Eternal Om
Through this Life of Distraction and of Illusion, Remind Me My Lord, Who I Am
I AM Truth, I Am Peace, Divine Bliss
Ananda Svaroopa, Hey Prema Svaroopa, Remind Me MY Lord Who I Am
I AM Love, I Am Love, Pure Love


--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

Wednesday, November 21, 2007

ஆண்கள் அழகாய் இருக்க....

ஆண்கள் அழகாய் இருக்க ....

1. தினமும் ஒரு முறை யோகா அல்லது எளியமுறை உடற்பயிற்சி செய்யவே ண்டும்.
2. காலை, மாலை காயகற்பம், தவம் செய்யவேண்டும்.
3. வாரம் ஒரு நாள் மெளன விரதம் இருத்தல் நல்லது.
4. சத்துள்ள இயற்கை நல்லுணவுகளை மேற்கொள்ளவேண்டும்.
5. உடலிலும் மனதிலும் மாசு களையவேண்டும்.
6. 6 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் வேண்டும்.
7. உடலுழைப்பு கண்டிப்பாக வேண்டும்.
8. நல்ல பழக்க ஒழுக்கங்களை மட்டுமே கடைபிடிக்கவேண்டும்
9. புகையிலை,மது, மங்கை, மாமிசம் கூடாது.
10. சத்திய தர்ம நெறிகளைக் கைக்கொள்ளவேண்டும்.
11. அளவான எளிதில் செறிக்கக்கூடிய சத்துள்ள உணவு உட்கொள்ளவேண்டும்.
12. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பசிக்கும்படி குறைவாக உணவு உட்கொள்ளவேண்டும்.
13. முகத்தில் தேஜஸ் குடியிருக்கவேண்டும்.
14. சுத்த சைவ உணவுகளையே உட்கொள்ளவேண்டும்.
15. எப்பொழுதும் அன்பாகவே இருக்கவேண்டும்.
16. கருணையுடன் நோக்கவோ அணுகவோ வேண்டும்.
17. எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கவேண்டும்.
18. எப்பொழுதும் மனதினை சமநிலையில் (எந்த உணர்வுகளுக்கும் ஆட்படாது) வைத்திருக்கவேண்டும்.

இதை மட்டும் ஒரு 6 மாசத்துக்கு கடைபிடிச்சிப் பாருங்க....
அப்பறமா வந்து சொல்லுங்க....ரிசல்ட் என்னான்னு...

Sunday, September 30, 2007

யார் குரு...?

On 8/11/07, Sankar Kumar wrote:

//எவர் ஒருவர் கடவுளை உணர்ந்திருக்கிறாரோ, அவரே குருநாதராவார்//

இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?


அதை நாம் அறிவதெப்படி?

ரிஷியின் பதில்....

>>>>>>>>. தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ எக்காலத்திலும் எண்ணம் சொல் செயலில் யாரொருவர் துன்பம் இல்லாமல் பார்த்துக்கொள்கின்றனரோ அவர் குருவிற்குரிய தகுதியினை அடைந்தவராவார். அசையாத நடுநிலை, அளவற்ற பொறுமை, நிஷ்காம்ய கர்மம் ஆகிய குணங்கள் அடிப்படையாய் அவரிடம் இருப்பவர் எவரோ அவர் குரு..


====================================================================================

Raveendran Krishnasamy hide details Sep 28 (2 days ago)
to nambikkai@googlegroups.com
date Sep 28, 2007 3:38 AM
subject Re: [NAMBIKKAI] Re: Today's Thought
mailed-by gmail.com


On 9/27/07, Tthamizth Tthenee wrote:

திரு ரவீந்த்ரன் கிருஷ்ணஸ்வாமி அவர்களே

அப்படியானால் கணிதம் ,அல்லது தமிழ், அல்லது ஆங்கிலம்
அல்லது வேறு ஏதாவது கற்றுக் கொடுக்கும் அறிஞ்ஞர்கள்
குருஸ்தானத்தை அடையமுடியாதா,அல்லது
குரு என்று அழைக்கப்படக் கூடாதவரா.....?


>>>>>...ரிஷியின் பதில்... >.>>>>>>>

எந்தப் பாடத்தினை போதிப்பவரானாலும் இதைக் கடைபிடிப்பவரே குருவாக இருக்க முடியும்.... அவ்விதம் இல்லாத பட்சத்தில் அது ஊதியத்திற்கான ஒரு வேலையாக மட்டுமே இருக்க முடியும்.... கடவுளை அறியத் தேவையில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லா குணங்கள் இன்றியமையாதவை ஒரு குருவிற்கு...

உதாரணமாக எனக்கு எட்டாம் வகுப்பில் கணிதம் சொல்லிக் கொடுத்த பால்ராஜ் என்ற வாத்தியார். அவருக்கு கடவுள் நம்பிக்கை அறவே இல்லை. ஆனால் நேர்மைவாதி. தன் கடமையைச் செவ்வனே செய்தார். தன் வேலையை பிடித்தமானதாக்கிக் கொண்டதனால் என்னைப் போன்ற மக்கு மாணவர்களெல்லாம் கணிதத்தில் 100 மார்க்குகள் வாங்க முடிந்தது. 8 ஆம் வகுப்பு வரை கணிதம் என்றாலே எனக்கு அலர்ஜி. அதுவும் எங்க அம்மா ஒரு கணித ஆசிரியராக இருந்தும் எனக்கு கணிதம் அலர்ஜி....

இத்தனைக்கும் அவர் பாடம் நடத்தும் விதம் ஒன்றும் இதமாக இருக்காது. எப்பொழுது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவருடைய வகுப்பு மிகவும் உற்சாகமாக செல்லும். நேரம் போவதே தெரியாது. கணக்கைச் சொன்னதும் இங்கே நோட்டில் போட்டு விடை சொல்லும் வேகம் அவர் ஏற்படுத்திட்டார்.

"நீ உருப்பட மாட்டாய்.... ஃபெயிலாகிவிடுவாய்...." என்று ஒரு மக்கு மாணவனை சபிப்பார். அந்த மாணவன்தான் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் 72 மார்க்குகள் வாங்கி கடைசி மாணவனாய் பாசானான் கணிதத்தில்...! நாங்கள் படித்ததோ அரசாங்க உயர்நிலைப் பள்ளி. அதுவும் ஒரு குக் கிராமத்தில்.... கணிதத்தில் மட்டுமே எங்களால் ஒழுங்காய் படிக்க முடிந்தது...

எங்காவது வரலாறு & புவியியலில் ஃபெயில் ஆன சரிதம் உண்டா...? எங்கள் பாடசாலையில் நடந்தது... நானும் வெறும் 39 மார்க்குகள் வாங்கி ஜஸ்ட் பாஸ்.... அவ்ளோ தான்.... ஒரே பாடசாலை... பெரும்பாலும் கணக்கில்தான் விழுவார்கள்... ஆனால் நாங்களோ வரலாறு & புவியியலில் சறுக்கினோம்.

இதில் கடவுள் நம்பிக்கையே இல்லாத அந்த கணக்கு வாத்தியார் தான் என்னைப் பொறுத்தவரை குரு....தன் கடமையை தெளிவாய் செய்தார்.... அநீதி கண்டு கொதிக்கும் அந்த குணம்.... சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லா அந்த நிலை.... தன் ஒவ்வொரு மாணவனும் கணக்கில் புலியாக வேண்டும் என்ற அந்த சுயநலமில்லா எண்ணம்.... மாணவர்களின் நலன் கருதி ஆசரியர்களுடன் எங்களுக்காக விவாதித்த அந்த மாமனிதரை இந்தக் கணத்திலும் நினைவு கூர்கின்றேன்...

வெறும் SSLC மட்டுமே முடித்துவிட்டு secondary Grade டீச்சராகவே தன் பணியினைத் தொடர்ந்தார், தன் முயற்சியால் B.Sc BT முடித்தார்... அப்படியே M.Sc தபாலில் முடித்தார்.... அக்கால கட்டத்தில் இவையெல்லாம் எட்ட முடியா உயரத்திலிருந்தன... 8 டூ 10 வரை... அவரிடம் பயின்ற கணிதமே System Simulation வரை கை கொடுக்க அடிப்படையாக அமைந்தது....

அவரிடம் ஆங்கிலமும் 9 B ல் பயின்றேன். ஆங்கில இலக்கணத்திற்கும் ஆங்கில பாடத்திற்கும் அவரே இன்சார்ஜ். ஏனெனில் யார் கிளாஸ் வாத்தியாரோ அவரே ஆங்கிலம் எடுக்கவேண்டும் என்ற எழுதப்படாத ஒரு சட்டம் அந்த ஸ்கூலில், அதுவும் Excellent ஆய் அமைந்தது.... குறிப்பாக ஆங்கிலக் கட்டுரையை மனப்பாடம் செய்தே எழுதுவது வழக்கம்... ஆனால் அவர் ஒருவரே சொந்தமாக ஆங்கிலத்தில் எழுத எங்களை ஊக்குவித்தார். அதிலும் அனைவரும் நல்லவிதமாய் வெளியேறினோம். பிரச்சினை வரலாறு & புவியியல், அறிவியல்...

குரு என்பவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராயும் இருக்கலாம். ஆனால் நேர்மையானவராகத் தான் சொல்வதிலும் செய்வதிலும் தெளிவுள்ளவராக இருக்கவேண்டும்....

இவர் எங்களுக்கும் தனக்கும் தீங்கு செய்யவில்லை, நன்மை செய்தார், ஆக நான் முதலில் சொன்ன விதி இங்கே பொருந்துகின்றது...

>>>>>>>>>>>>>>>>

கடவுளை அறிந்தவர் மட்டும் தான் குரு என்றால்
இவர்களெல்லாம் குரு இல்லையா?

தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ எக்காலத்திலும் எண்ணம் சொல் செயலில் யாரொருவர் துன்பம் இல்லாமல் பார்த்துக்கொள்கின்றனரோ அவர் குருவிற்குரிய தகுதியினை அடைந்தவராவார். அசையாத நடுநிலை, அளவற்ற பொறுமை, நிஷ்காம்ய கர்மம் ஆகிய குணங்கள் அடிப்படையாய் அவரிடம் இருப்பவர் எவரோ அவர் குரு....

//எவர் ஒருவர் கடவுளை உணர்ந்திருக்கிறாரோ, அவரே குருநாதராவார்//

இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

நீங்கள் சொல்லிய இந்த தகுதிகளில் எதுவுமே
இல்லாத பலர் பாடங்கள் போதிப்பதில்லையா?
பள்ளிகளில் குருவாக இருப்பதில்லையா?


>>>>>>>>>>>

அதன்பின் அவர்கள் நம் வாழ்வில் வருவதில்லை... ஆனால் எனக்கு அந்த பழைய கணக்கு வாத்தியார் (10 ஆம் வகுப்பிற்குப் பின் அவரை பார்க்கவில்லை...) இந்த நொடி வரை என் வாழ்வோடு இணைந்திருக்கின்றாரே...? எப்படி...? எல்லோரும் போதித்தார்கள்... ஆனால் எங்கள் மாணவர்களின் மனதினில் உயரமாய் இன்றும் இவர் இருக்கின்றாரே....?

இவர் ஒரு குரு....

மற்ற பாடங்களைப் போதித்தவர்கள் 10 வருட வினாத்தாட்களை மனப்பாடம் பண்ணி எழுதி பாஸ் பண்ண வைக்க உதவியதால் அவர்கள் சம்பளம் பெற்ற கூலிகள்....அவ்வளவே...!

கூலி வேறு; குரு வேறு, குழப்பம் வேண்டாம்.

நான் சொன்ன இந்த கணக்கு வாத்தியாரின் உதாரணத்தில் நான் சொன்ன எல்லா குணங்களும் அடங்கிவிட்டன. என் அனுபவத்திலிருந்தே குருவின் வரையறையை எழுத முடிந்தது்....

====================================================================================

Tthamizth Tthenee hide details Sep 28 (2 days ago)
reply-to nambikkai@googlegroups.com
to nambikkai@googlegroups.com
date Sep 28, 2007 3:48 AM
subject [NAMBIKKAI] Re: Today's Thought
mailed-by googlegroups.com
மிக அருமை நண்பரே நான் உங்களைப் புண்படுத்த
அந்தக் கேள்வியைக் கேட்க்கவில்லை
என்னுடைய வாதமே
நமக்கு கற்றுக் கொடுப்பவர்கள் யாராயினும்
அவர் நம்மைவிட அறிவில்,வயதில், அனுபவத்தில்
குறைந்தவராக இருப்பினும்
நமக்கு கற்றுக் கொடுக்கும்போது அவர் குருவாகிறார்

பொதுவாக ரிஷி மூலம் ,நதி மூலம்
பார்க்கக் கூடாது என்று பெரியோர் சொல்வர்

குருவுக்கு என்ன தகுதி என்று நாம் பார்க்க வேண்டாம்
நமக்கு அவருடைய மாணாக்கனாக
இருக்கும் தகுதியை வளர்த்துக் கொள்வோம்

கற்றுக் கொள்ள அசைப்படுபவனுக்கு
உலகில் அனைவருமே குருதான்

அப்பனுக்கே பாடம் சொன்ன முருகன்
சிவனுக்கே குருவானான்


அன்புடன்
தமிழ்த்தேனீ

Monday, September 3, 2007

உன்னால் முடியும் தம்பி...

உன்னால் முடியும் தம்பி...

On 6/30/07, Siva Sankar wrote:

> இந்த இழையை நான் இன்றுதான் பார்க்கின்றேன்
> என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள், நான் எழுத நினைத்திருந்தேன், இதே தலைப்பில்,
> ஆனால் எனக்கும் முன்பே முரளி எழுதி இருக்கின்றார், ஆனால் நான் இழந்தவை பட்டியல்
> வேறு , அவை என் முனைவர் பட்டப்படிப்பிற்காக, பட்டத்திற்காக நான் இழந்தவை,
> அவற்றில் ஒரு சில , பார்ப்பவர்களுக்கு மிகவும் சாதாரணமாக தோன்றலாம், ஆனால்
> எனக்கு அவை மிகப்பெரியவையே...முதலாவதாக

> 1) நாளை 01-07-2007 அன்று கோவையில் நடக்க இருக்கும், முத்தமிழ் சந்திப்பு.
> மஞ்சூர் அண்ணன் மற்றும் அனைத்து நண்பர்களையும் சந்திக்கும் சந்தோசத்தில் இருந்த
> என் சந்தோசத்தில் விழுந்த இடி, நேற்று என் மேற்பார்வையாளர் (வழிகாட்டி என்று
> சொல்லப்பிடிக்க வில்லை, ஏனெனில் அவருக்கு நான் தான்
> வழிகாட்டிக்கொண்டிருக்கின்றேன் :( ) அனுப்பிய மின்னஞ்சல், இன்னும் ஒரு
> வாரத்திற்கு வேலையை கொடுத்து , இன்று புறப்படலாம் என்று பயணச்சீட்டு பதிவதற்கு
> அவரிடம் அனுமதி கேட்டு போட்ட மின்னஞ்சலுக்கான பதிலில் வெடிகுண்டாக வந்தது, ஒரு
> வாரம் கழித்து போ என்று, தற்போதைய சுட சுட வந்த இழப்பு இது.

> 2) என் அம்மாவைப்பெற்ற பாட்டி (ஆயம்மா)யின் மரணம். தகவல் வந்தது ராத்திரி 11
> மணி, இங்கிருந்து மறுநாள் காலை 11 மணிக்கு விமானம் பிடித்தால் கூட, அதற்கு
> அடுத்த நாள் காலைதான் போய் சேரமுடியும் ஊருக்கு :( , என் அன்னையை விட அதிகமாக
> என்னை நேசித்தவர், அவரின் ஒரே மகன் இறந்த சமயத்தில் பிறந்ததால் என்னை தன்
> மகனாகவே நினைத்து வளர்த்தவர், அவர் இறந்தால் அவருக்கு கொள்ளி நான் தான்
> போடவேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தார், செய்ய முடியவில்லை,
> 10ஆம் நாள் காரியத்திற்கே செல்ல முடிந்தது . :(

> 3) என் அப்பாவைப்பெற்ற பாட்டி, அவரின் மரணத்திற்கும் செல்லமுடியவில்லை, 95
> வயது வரை எங்கள் வீட்டிலேயே , கன்றுக்குட்டி போல் சுற்றி சுற்றி வந்தவர், காசு
> வேண்டுமென்றால் ஓடிப்போய் அவரிடம் நிற்பேன், ஒரு 10 ரூபாய் எடுத்து, என்
> அம்மாவிற்கு தெரியாமல் கொடுப்பார், ஓடிப்போய் ஏதேனும் வாங்கி சாப்பிட எடுத்து
> வந்து அவருக்கும் அம்மாவிற்குமே கொடுத்துவிட்டு நானும் சாப்பிடுவேன், அவரின்
> மரணத்திற்கு செல்லமுடியவில்லை.

> 4) பெரியம்மா, புற்று நோயால் இறந்தார், அவரின் மரணத்திற்கும்
> செல்லமுடியவில்லை

> 5) சித்தப்பா மகன் , திடீரென்று வந்த மஞ்சள் காமாலையில் இறந்தான், அந்த
> மரணத்திற்கும் போகமுடியவில்லை, அதற்கு 6 மாசம் முன்னால்தான் கல்யாணம்
> செய்தானாம், அதுவும் எனக்கு தெரியப்படுத்தவில்லை ( 2 வருசம் வீட்டுப்பக்கமே
> போகாததால் வந்த இழப்புகள் இவை :(( )

> 6) பெரியப்பா பையன் ( தம்பி) கல்யாணம், தொடர்ந்து அவன் குழந்தை பிறப்பு, (
> இன்றுவரை அந்த குழந்தை முகத்தை கூட பார்க்கவில்லை )

> 7) அத்தை மகன் திருமணம், கூட மாட இருந்து செய்திருக்கவேண்டியவன் நான்,
> சின்னவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள், என்னைவிட ஒரு வயதே பெரியவன், சொந்த
> சகோதரன் போல் பழகியவன், ( திருமணத்திற்கு நான் வரவில்லை என்று இன்றுவரை அவனிடம்
> பேச்சுவார்த்தை இல்லை :(( )

> 8) கலிடோனியன் காலேஜ் ஆப் எஞ்சினியரிங், ஓமன், மஸ்கட் ல் உதவிப்பேராசிரியர்
> பணி, ஒன்றேகால் லட்சம் மாத சம்பளத்தோடு கிடைத்தும் சேரமுடியாத சூழல்.

> 9) இப்போ கையில் கிடைத்த விப்ரோ வேலை பறிபோகும் சூழல்.

> 10) அண்ணனாக வீட்டில் இருந்து தங்கைக்கு வரன் தேடுவதில் அப்பாவிற்கு உதவி
> செய்யமுடியாத சூழல்....:(

> 11) எல்லாவற்றிற்கும் மேல், எல்லோரின் வாழ்விலும் வரும்.......அந்த
> காதல்.....
> 12 வருடங்கள் ஒருத்திக்காக காத்திருந்து, இங்கு வந்துவிட்ட ஒரே காரணத்தால்,
> இருவருக்கும் மனசுக்கு பிடித்திருந்தும், அங்கிருந்தால் அவசியம்
> முடிந்திருக்கவேண்டிய கல்யாணம், இன்று வேறொருவருடன் அவர், கையில் ஒரு
> குழந்தையுடன், போனமுறை வீட்டிற்கு சென்றபோது, ஒரு அழகிய பரிசுப்பொருள்
> வாங்கிச்சென்று கொடுத்து விட்டு வாழ்த்திவிட்டு வந்தேன், ( என்ன சொல்லி
> வாழ்த்த???? கல்யாண புகைப்பட தொகுப்பை என் கையில் கொடுத்து, அதற்கு முன்
> குழந்தையை கையில் கொடுத்துவிட்டு கண் கலங்க என்னைப்பார்த்த அவள் பார்வை , என்
> வாழ்வின் இறுதி வரை என்னை சுட்டுக்கொண்டே இருக்கும்).

> ஒரு முறை தான் , ஒரு முறை தான், ஒரு சில தவறுகள் ஒரு முறைதான்....

> தவமாய் தவமிருந்து ...படப்பாடல் ஷியாம் ரேடியோவில் சமயோசிதமாக
> ஓடிக்கொண்டிருக்கின்றது.....என்னவென்று சொல்ல??????? இவ்வளவு விசயங்களை இழந்து
> பெறும், இந்த பட்டம் , எனக்கு தேவைதானா? இந்த பட்டம்? அவ்வளவு தகுதி வாய்ந்ததா?
> நாளை நான் ஒரு முனைவன், இடுப்பெலும்பு ஆராய்ச்சியில் இந்தியாவிலேயே, இந்த
> வருடம் ஆராய்ச்சி முடிக்கும் ஒரே ஆராய்ச்சியாளன் நான் மட்டுமே....என்ன
> லாபம்???? விண்ணப்பிக்கும் அனைத்து வேலைகளும் அழைப்பு வருகின்றது...ஆனாலும்
> நான் இழந்தவை????????? யாரேனும் தங்கள் கருத்தினை இதற்கு கூறினால்
> மகிழ்வேன்....:((

> சிவா...செங்கம்.....

> --
> M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
> web: http://biosankar.4t.com
> blog for tamil articles: http://srishiv.blogspot.com

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



இந்த இழைக்கு, ரிஷியின் பதில்....

அன்புள்ள சிவ சங்கர்,

உங்கள் மடல் படித்தேன்.

அதிலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் புரிகின்றது. நீங்கள் வாழ்க்கையில் பெரிதாக
எதுவும் அடி வாங்கவில்லை என்று.

ஒரு மத்திமக் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளெல்லாம் ஒரு பெரிய சோதனையா
என்ன...?

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எத்தனை அவமானங்கள்...? எத்தனை அடி...? எத்தனை
ஏளனப் பேச்சு...? இப்பொழுது ஒரு 10 வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் அது
அத்தனையும் ஒரு நகைச்சுவையாகவே இருக்கும்.

உங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைவரின் வாழ்விலும் நிகழும்
ஒரு சாதாரண நிகழ்வே...

ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவிற்குப் பயணித்தாரே... அப்பொழுது அந்த நிலவில்
அவர்கள் பட்ட சிரமத்தினைவிடவா....? மனித நடமாட்டமே ஏன் ஆக்ஸிஜனே
இல்லாத சூழல்..ஈர்ப்பு விசை இல்லாத சூழல்...உலகைவிட்டு எங்கோ இன்னொரு கோளில்
அந்த இருள்... இதையெல்லாம் நினனத்துப் பாருங்கள்...உங்களின் துன்பம் பெரிதான
ஒன்றா...?

ஆரோக்கியமாக இருக்கும்பொழுது உடல் நலனின்
அருமை தெரிவதில்லை. குணப்படுத்த முடியாத நோய் வரும்பொழுதுதான் நாம் நம்
உடல் நலனை எண்ணிப்பார்க்கின்றோம்.
இதற்கு சர்க்கரை நோய் வந்தாலே நான் நிம்மதியாய் இருந்திருப்பேன் என ஒரு ஒப்பீடு
செய்வோம் அப்பொழுது.

துன்பத்தினைத் துன்பப்படுத்துங்கள். துன்பத்திற்கு ஒரு சவால் விடுங்கள்.

நாம் நம் குறிக்கோளில் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம். இரண்டில் எது
நிகழ்ந்தாலும் தவறில்லை. நன்மைக்கே. ஆனால் எதுவும் நிகழாமல் இருப்பதே தவறு.

எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் மனம் சலனமின்றி நம் குறிக்கோளை நோக்கிப்
பயணித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

Continously Move towards your goal with detached attachment like a wheel.

எனக்கு என் நுரையீரல் பிடிக்கவில்லை; என் கணையம் எனக்குப் பிடிக்கவில்லை
என்றெல்லாம் நாம் வருத்தப்பட முடியுமா...? அடுத்து என்ன என்று எண்ணி அடுத்த
நிகழ்வினை நோக்கிப் பயணிப்போம்.

எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் எந்த உணர்வுகளுக்கும் அடிமையாகிட வேண்டாம்.
அதற்காக மனம் இரும்பாக இருக்க வேண்டும் என்ற அர்த்தமல்ல.

இக்கட்டான சூழ்நிலையில் புத்திசாலித்தனமாகச் செயல்படவேண்டும்.இங்கே மிஸ்டர்
எக்ஸ் , மிஸ்டர் வொய் எப்படி கீழிருக்கும் சம்பவத்தினை எதிர்கொள்கின்றனர் எனப்
பார்க்கலாம்.

உதாரணமாக நாம் எதிர்பாராவிதமாக ஒரு விபத்தினைச் சந்திக்கின்றோம். நல்ல பலத்த
அடி. உடன் வந்தவர் உங்கள் உயிர் காதலி.

இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்...?

*மிஸ்டர் எக்ஸ் சின் நிலைப்பாடு:*

ஐயோ என் காதலிக்கு இப்படி ஆகிவிட்டதே...? ஐயகோ இனி நான் என் செய்வேன்...?
எனக்கு மட்டும் ஏன் இப்படி வருகின்றது...? என ஒரு ஆர்ட் ஃபிலிம் ரேஞ்சுக்கு
கண்ணீர் சிந்துகின்றான். மேலும் சூழலையும் நிகழ்வுகளையும் மோசமடையச்
செய்கின்றான்.

மாறாக *மிஸ்டர் வொய்:*,

ஆல்ரைட்.. இப்பொழுது ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது. அடுத்து என்ன செய்வது...?

தன்னால் முடிந்த முதலுதவி. உடனே ஒரு ஆம்புலன்சுக்கு எமர்ஜென்சி கால்.

சுற்றுப்புறத்தை உதவிக்கு அழைக்கின்றான்.

சூழல் மாறுகின்றது.

காதலி தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் விரைவில்
காப்பாற்றப்படுகின்றார்.

அன்பான அரவணைப்பில் விரைவில் குணமடைகின்றார்.

மிஸ்டர் வொய்யே தன் காதலியின் மீது உண்மையான காதல் வைத்திருப்பதாய் உள்ளது...
செயல் செயல்....

ஆனால் நாம் அழவில்லையென்றால் அவள் நம்மைத் தப்பாக நினைப்பாளே என்றுதான் நம்மில்
அநேகர் உணர்ச்சிகளுக்கு முதலிடம் தருகின்றோம்.

சில நிகழ்வுகள் நம் கையிலில்லை.

அதை நாம் பக்குவத்டன் ஏற்றுக்கொள்ளும் மனோநிலை வரப்பெற்றவராய் இருக்கவேண்டும்.

நான் குள்ளம். புல்லப்ஸ் சிரசானம் மருத்துவம் என எல்லாம் முயன்றும் பலன்
பூஜ்ஜியம். என்னை மட்டும் ஏன் இறைவன் அமிதாப் மாதிரி உயரமாகப் படைக்கவில்லை
எனப் புலம்புவது எப்படி நியாயம்...?

இது பாரம்பரியம். ஓகே இதுதான் என்னியல்பு என்று ஏற்றுக்கொள்ளும் அந்த மனோபாவம்
இருக்கின்றதே... அப்பொழுது மனம் இலேசாகின்றது....

அதற்கு பரிகாரம் என்ன...? அடுத்த ஜெனரேஷனை உயரமாக வளர்க்க ஜப்பானில் ஒரு
ஆராய்ச்சி. புரதத்தினை ஒரு சரியான விகிதத்திலே பயன்படுத்தி உயரத்தினை மாற்ற
முயற்சிக்கின்றனர். இன்னும் ஒரு ஐந்தாறு தலைமுறையில் ஜப்பானியர்களின் உயரம்
உயரும்.

இப்படியெல்லாம் சொல்வதற்காக, "நீங்கள் என்னிடத்தில் இருந்து பார்த்தால்
புரியும்...உங்களுக்கு இது மாதிரியான கஷ்டம் வந்ததில்லை.. அதனால்தான் நீங்கள்
அட்வைஸ் செய்கின்றீர்கள்...." எனக் கேட்கலாம்.

நானும் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் கடந்துதான் வந்தேன். ஒரே ஒரு வித்தியாசம்
என் வாழ்வில் துரதிர்ஷ்டவசமாய் காதல் மட்டும் வரவில்லை...

மற்றபடி இதேபோல் ப்ரபசர் டார்ச்சர்... இழுத்தடித்தல்... மார்க் குறைத்தல் என்ற
எல்லா அனுபவமும் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

பல்கலையில் ஒரு பாடவேளையில் ஆழ்ந்து லயித்துக்கொண்டிருந்த பொழுது என்னை வளர்த்த
என் பெரியம்மா அவர்களின் மரணச்செய்தி... இதே போல் கொள்ளி போட முடியா சூழல்...
அவருக்கு நான் மட்டுமே ஒரே வளர்ப்பு மகன்... அவருடைய இறுதி ஆசையே நான் கொள்ளி
வைக்கவேண்டுமென்ற சிவாவின் பாட்டி போன்ற அதே ஆசை...

வருத்தம் இருந்தது . ஆனாலும் நான் அழவில்லையே...! ஆல் ரைட் அவரது பயணம்
முடிவடைந்தது. அப்பொழுதுதான் என்னுள் ஏற்கெனவே இருந்த அந்த சகபயணி என்ற
தத்துவம் இன்னும் ஆழமாய் வேரூன்றியது.

நாமனைவரும் யார்...? ஒரே இரயிலில் ஒரே கூபேயில் பயணிக்கும் சகபயனிகள்
அவ்வளவே...

என் நிறுத்தம் வந்தால் நான் இறங்கிவிடுவேன், உங்கள் நிறுத்தம் வந்தால் நீங்கள்
இறங்கி விடுவீர்கள். அது அம்மாவாயினும் சரி மனைவியாயினும்
சரி...குழந்தையாயினும் சரி...நாமனைவரும் சக பயணிகள்தான். பயணம் முடியும்வரை
அனைவருடன் இணக்கமாய் நட்புடன் பிறருக்கு உதவிக்கொண்டு மகிழ்ச்சியாய் நம்
பயணத்தினைத் தொடர்வோம்...

Saturday, July 7, 2007

ராவணன்

அன்புள்ள ஷைலஜாக்கா அவர்களுக்கு,

நான் காலையில் உடனே உங்களுக்கு பதில் எழுத முடியா பளுயிருந்ததால் இப்பொழுது பதிகின்றேன்.

சுந்தர காண்டத்தில் முதல் ஸர்க்கமே இப்படித்தான் இருக்கின்றது...

"ததோ ராவண நீதாயா: ஸீதாயா: ஸத்ருகர்ஸந:|
இயேஷ பத*மந்வேஷ்டும் சாரணாசரிதே பதி2 ||"

பகவான் யாவற்றைக் காட்டிலும் மேலானவர் என்பதற்கு அடையாளமான எண்ணிறந்த கல்யாண குனங்கள் அவரிடத்தில் விளங்குகின்றன என்று கிஷ்கிந்தா காண்டத்தில் சொல்லப்பட்டது.

பதினைந்தாவது ஸர்க்கத்தில் "ராமனை விரோதித்துக்கொண்டவனை, ராமனால் கொல்லத் தகுந்தவனை, பிரஹ்மா, ருத்திரன், இந்திரன் முதலியவர்களும் காப்பாற்ற முடியாது" என்பதால் இது நன்றாக விளங்குகின்றது.

கிஷ்கிந்தா காண்டத்தில் மித்திரர்களை எப்படியாவது ரட்சிக்க வேண்டும் என்ற தர்மமும், இந்தக் காண்டத்தில் தூதனும் பதிவிரதையும் நடந்துகொள்ளவேண்டிய தர்மமும் சொல்லப்படுகின்றப.

முன் காண்டத்தில் ஸகல லோகங்களையும் ரட்சிக்க அவதரித்த மஹாவிஷ்ணுவுக்கு, ஆசாரியன் என்ற புருஷகாரம்(மத்தியசஸ்தம்) கிடைத்த தென்பதையும், இந்தக் காண்டத்தில் ஆசாரியன் செய்யவேண்டிய காரியத்தையும் வால்மீகி தெரிவிக்கிறார். அதில் முதல் ஸர்க்கத்தில் உபதேசம் பெறத் தகுந்த சிஷ்யனை குரு தேடிப் போவது சொல்லப்படுகின்றது.(கோவிந்த ராஜீயம்.)

ராவண நீதாய: (ராவணனால் கொண்டுபோகப்பட்ட ) என்ற விசேஷணத்தால் ஸீதையின் ஸாத்விகஸ்வரூபம் அக்னி குண்டத்திலும், ராஜஸ்வரூபம் பகவானுடைய வலது புஜத்திலும் என்றும் பிரியாமலிருந்தனவென்றும், தாமஸ் ரூபத்தையே ராவணன் எடுத்துப் போனானென்றும் உட்கருத்து குறிப்பிடப்படுகிறது.

ஆனாலும் தேவனாகட்டும் மனிதனாகட்டும் இதெல்லாம் முதலிலேயே எழுதப்பட்ட Pre Written Codes. These codes are triggered at the right place at the right time. இதைத் தான் விதி என்கின்றோம்.

ராமாயணத்தில் கூட Law of Cause and Effect டே பெரும்பாலும் விளக்கப்பட்டிருக்கின்றது.

இங்கே ராமர் தன் சின்ன வய்தில் பம்பரம் விளையாடியபொழுது பம்பரம் ஒரு வயதான பாட்டி சுமந்து வந்த கஞ்சி களயத்தின் மீது விழுந்து அந்த களயத்தினைத் துளைத்து அதிலிருந்த கஞ்சி சிந்தும்படி ஆகிவிட்டது.

அப்பொழுது அந்த பாட்டி எதிர்பார்த்தது ஒரே ஒரு ஸாரி.... ஆனால் அது கிடைக்காதது மட்டுமின்றி ராமரும் தன் சகாக்களும் சிரித்ததினால் மனதினில் ஒரு அவமானத்தினை உணர்ந்தார்.

ராமருக்கு ராஜ்ஜியம் தரக்கூடாது என்ற ஒரு முடிவு. பதவி ஏற்கும் முன்பு கைகேயியிடம் சென்று பரதனுக்கு முடிசூட்டுவிழா நடத்துமாறும் ராமரை 14 வருடங்கள் காட்டிற்குச் செல்லவேண்டுமென்றும் சாவி கொடுத்தார்.

அன்று(பம்பரம்) நிகழ்ந்தது காரணம். இன்று (முடிசூட்டுவிழா) நிகழ்ந்தது காரியம்.

சூர்ப்பணகையின் மூக்கை அறுத்திருக்க வேண்டியதில்லை. இது வன்முறைதானே....?

இதுதான் விதி என்பது....

இதுதான் Law of Cause and Effect என்பது... அது இறைவனே ஆனாலும் யாரும் இதிலிருந்து தப்ப முடியாது என்பது விதி...கர்மவிதிகள் மிகவும் வலிமையானவை. இறைவனாகவே இருந்தாலும் அதை அனுபவித்தே ஆகவேண்டும் என்பது நியம விதி.

இந்த விதியை மாற்ற முயலுமா என்ற ஆராய்ச்சியில் விளைந்த விளைவே இறை வழிபாடு...

கோயில் ஒரு எளிமையான கருவியே....நம் குறிக்கோள்களை அடைவதற்கு....

அந்தக் குறிக்கோள்கள் நாளை நடக்கப் போகும் ஒரு நேர்முகத்தேர்வாயினும் சரி; அல்லது வீடு பேறு பெறும் குறிக்கோளாகட்டும் எல்லாவற்றிற்கும் பக்தியோ அல்லது தவமோ உதவுகின்றது.

நாம் உருவ வழிபாட்டினை உருவாக்கியது நமது எளிமைக்காகவே....

ராமாயணமும் மகாபாரதமும் ஒரு கற்பனைக் கதை என்பது என் கருத்து.
என்னையும் ராமாயணமும் மகாபாரதமும் செம்மை படுத்தின என்பதினை மறக்க முடியாது என்றாலும் கூட வேதாத்திரி மகரிஷி சொன்னது போல் இவைகள் கட்டுக்கதை என்பதில் நானும் உடன்படுகின்றேன்.

மனிதனை செம்மைப் படுத்த இவைகள் உதவுகின்றன. நான் இப்பொழுதும் கூட அதே சுந்தர காண்டமும் ஏகாதசி விரதமும் கடைபிடிக்கின்றேன். ஏனெனில் அதில் எனக்கு நம்பிக்கையும் இறைத் தன்மையும் இருப்பது என் சின்ன வயதிலேயே பதிக்கப்பட்டது,

என்னுடைய நம்பிக்கை வேறு; உண்மை வேறு;

இன்றிருக்கும் ஹாரிபாட்டர் கதைகள் இனியொரு 300 ஆண்டுகளுக்குப் பிறகு வளரும் சந்ததியினர் இதெல்லாம் நிஜமாகவே நடந்தன என நம்ப நிறைய வாய்ப்பிருக்கின்றன.

அறிஞர் அண்ணாவையும் எம்ஜிஆரையும் அவர்களின் காலத்திற்குப்பின்னால் நாம் அவர்களை ஏறக்குறைய கடவுளாக்கவில்லையா....?

ராவணன் தவத்தில் தலைசிறந்த ஒரு தவயோகி என புராணங்கள் சொல்கின்றன; கம்ப ராமாயணத்தில் இராவணன் தன் நகவிரல் கூட சீதையின் மீது படாமல் கண்ணியமாகவே நடத்தியதாக கம்பன் சொல்கின்றார். சீதை வேறு யாரோ அல்ல; ராவணனின் புத்திரிதானே...?;(இது ஒரு தனிக்கதை..... )

எந்த ஒரு யோகியும் யோகி என்ற நிலையை எட்டியபின் தன்னிலை இழப்பதில்லை. மேலே மேலே என்ற தேடலும் உலக வாழ்க்கையில் பற்றில்லா தன்மையுமே கொண்டவர்களாவர். தவற்றினை உடனே ஒப்புக்கொள்ளும் மனோபாவமும் இவர்களிடத்திலிருக்கும்.

எனவே இந்தக் கதையை யாராவது தமிழறிஞர்களும் தவத்தில் சிறந்த யோகியரும் விளக்கினால் அனைவரும் எளிமையாகப் புரிந்து கொள்ளமுடியும்.

நான் இப்படிச் சொல்வதால் ராமனிடம் எனக்கு ப்ரேமை இல்லை என்ற அர்த்தமல்ல்;

தனிப்பட்ட முறையில் ராமனும் ஆஞ்சநேயரும் எனக்கு நிறைய உதவிகள் இன்றளவும் செய்து கொண்டுதானிருக்கின்றனர்... இவர்கள் என் உன்னதமான கடவுளர்கள்....அதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

நான் கேட்பது அதில் ஆழ்ந்த புலமை கொண்ட தமிழறிஞர்கள் விளக்கினால் இன்னும் நான் மகிழ்வேன்.

Saturday, June 30, 2007

பயணம்

sivas......iitg@gmail.com> hide details 10:14 am (8 hours ago)
reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Jun 30, 2007 10:14 AM
subject [muththamiz] Re: நான் ரொம்பவே இழந்தேன்
mailed-by googlegroups.com

இந்த இழையை நான் இன்றுதான் பார்க்கின்றேன்
என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள், நான் எழுத நினைத்திருந்தேன், இதே தலைப்பில், ஆனால் எனக்கும் முன்பே முரளி எழுதி இருக்கின்றார், ஆனால் நான் இழந்தவை பட்டியல் வேறு , அவை என் முனைவர் பட்டப்படிப்பிற்காக, பட்டத்திற்காக நான் இழந்தவை, அவற்றில் ஒரு சில , பார்ப்பவர்களுக்கு மிகவும் சாதாரணமாக தோன்றலாம், ஆனால் எனக்கு அவை மிகப்பெரியவையே...முதலாவதாக

1) நாளை 01-07-2007 அன்று கோவையில் நடக்க இருக்கும், முத்தமிழ் சந்திப்பு. மஞ்சூர் அண்ணன் மற்றும் அனைத்து நண்பர்களையும் சந்திக்கும் சந்தோசத்தில் இருந்த என் சந்தோசத்தில் விழுந்த இடி, நேற்று என் மேற்பார்வையாளர் (வழிகாட்டி என்று சொல்லப்பிடிக்க வில்லை, ஏனெனில் அவருக்கு நான் தான் வழிகாட்டிக்கொண்டிருக்கின்றேன் :( ) அனுப்பிய மின்னஞ்சல், இன்னும் ஒரு வாரத்திற்கு வேலையை கொடுத்து , இன்று புறப்படலாம் என்று பயணச்சீட்டு பதிவதற்கு அவரிடம் அனுமதி கேட்டு போட்ட மின்னஞ்சலுக்கான பதிலில் வெடிகுண்டாக வந்தது, ஒரு வாரம் கழித்து போ என்று, தற்போதைய சுட சுட வந்த இழப்பு இது.

2) என் அம்மாவைப்பெற்ற பாட்டி (ஆயம்மா)யின் மரணம். தகவல் வந்தது ராத்திரி 11 மணி, இங்கிருந்து மறுநாள் காலை 11 மணிக்கு விமானம் பிடித்தால் கூட, அதற்கு அடுத்த நாள் காலைதான் போய் சேரமுடியும் ஊருக்கு :( , என் அன்னையை விட அதிகமாக என்னை நேசித்தவர், அவரின் ஒரே மகன் இறந்த சமயத்தில் பிறந்ததால் என்னை தன் மகனாகவே நினைத்து வளர்த்தவர், அவர் இறந்தால் அவருக்கு கொள்ளி நான் தான் போடவேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தார், செய்ய முடியவில்லை, 10ஆம் நாள் காரியத்திற்கே செல்ல முடிந்தது . :(

3) என் அப்பாவைப்பெற்ற பாட்டி, அவரின் மரணத்திற்கும் செல்லமுடியவில்லை, 95 வயது வரை எங்கள் வீட்டிலேயே , கன்றுக்குட்டி போல் சுற்றி சுற்றி வந்தவர், காசு வேண்டுமென்றால் ஓடிப்போய் அவரிடம் நிற்பேன், ஒரு 10 ரூபாய் எடுத்து, என் அம்மாவிற்கு தெரியாமல் கொடுப்பார், ஓடிப்போய் ஏதேனும் வாங்கி சாப்பிட எடுத்து வந்து அவருக்கும் அம்மாவிற்குமே கொடுத்துவிட்டு நானும் சாப்பிடுவேன், அவரின் மரணத்திற்கு செல்லமுடியவில்லை.

4) பெரியம்மா, புற்று நோயால் இறந்தார், அவரின் மரணத்திற்கும் செல்லமுடியவில்லை

5) சித்தப்பா மகன் , திடீரென்று வந்த மஞ்சள் காமாலையில் இறந்தான், அந்த மரணத்திற்கும் போகமுடியவில்லை, அதற்கு 6 மாசம் முன்னால்தான் கல்யாணம் செய்தானாம், அதுவும் எனக்கு தெரியப்படுத்தவில்லை ( 2 வருசம் வீட்டுப்பக்கமே போகாததால் வந்த இழப்புகள் இவை :(( )

6) பெரியப்பா பையன் ( தம்பி) கல்யாணம், தொடர்ந்து அவன் குழந்தை பிறப்பு, ( இன்றுவரை அந்த குழந்தை முகத்தை கூட பார்க்கவில்லை )

7) அத்தை மகன் திருமணம், கூட மாட இருந்து செய்திருக்கவேண்டியவன் நான், சின்னவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள், என்னைவிட ஒரு வயதே பெரியவன், சொந்த சகோதரன் போல் பழகியவன், ( திருமணத்திற்கு நான் வரவில்லை என்று இன்றுவரை அவனிடம் பேச்சுவார்த்தை இல்லை :(( )

8) கலிடோனியன் காலேஜ் ஆப் எஞ்சினியரிங், ஓமன், மஸ்கட் ல் உதவிப்பேராசிரியர் பணி, ஒன்றேகால் லட்சம் மாத சம்பளத்தோடு கிடைத்தும் சேரமுடியாத சூழல்.

9) இப்போ கையில் கிடைத்த விப்ரோ வேலை பறிபோகும் சூழல்.

10) அண்ணனாக வீட்டில் இருந்து தங்கைக்கு வரன் தேடுவதில் அப்பாவிற்கு உதவி செய்யமுடியாத சூழல்....:(

11) எல்லாவற்றிற்கும் மேல், எல்லோரின் வாழ்விலும் வரும்.......அந்த காதல்.....
12 வருடங்கள் ஒருத்திக்காக காத்திருந்து, இங்கு வந்துவிட்ட ஒரே காரணத்தால், இருவருக்கும் மனசுக்கு பிடித்திருந்தும், அங்கிருந்தால் அவசியம் முடிந்திருக்கவேண்டிய கல்யாணம், இன்று வேறொருவருடன் அவர், கையில் ஒரு குழந்தையுடன், போனமுறை வீட்டிற்கு சென்றபோது, ஒரு அழகிய பரிசுப்பொருள் வாங்கிச்சென்று கொடுத்து விட்டு வாழ்த்திவிட்டு வந்தேன், ( என்ன சொல்லி வாழ்த்த???? கல்யாண புகைப்பட தொகுப்பை என் கையில் கொடுத்து, அதற்கு முன் குழந்தையை கையில் கொடுத்துவிட்டு கண் கலங்க என்னைப்பார்த்த அவள் பார்வை , என் வாழ்வின் இறுதி வரை என்னை சுட்டுக்கொண்டே இருக்கும்).

ஒரு முறை தான் , ஒரு முறை தான், ஒரு சில தவறுகள் ஒரு முறைதான்....

தவமாய் தவமிருந்து ...படப்பாடல் ஷியாம் ரேடியோவில் சமயோசிதமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.....என்னவென்று சொல்ல??????? இவ்வளவு விசயங்களை இழந்து பெறும், இந்த பட்டம் , எனக்கு தேவைதானா? இந்த பட்டம்? அவ்வளவு தகுதி வாய்ந்ததா? நாளை நான் ஒரு முனைவன், இடுப்பெலும்பு ஆராய்ச்சியில் இந்தியாவிலேயே, இந்த வருடம் ஆராய்ச்சி முடிக்கும் ஒரே ஆராய்ச்சியாளன் நான் மட்டுமே....என்ன லாபம்???? விண்ணப்பிக்கும் அனைத்து வேலைகளும் அழைப்பு வருகின்றது...ஆனாலும் நான் இழந்தவை????????? யாரேனும் தங்கள் கருத்தினை இதற்கு கூறினால் மகிழ்வேன்....:((

சிவா...செங்கம்.....

M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com



===
அன்புள்ள சிவ சங்கர்,

உங்கள் மடல் படித்தேன்.

அதிலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் புரிகின்றது. நீங்கள் வாழ்க்கையில் பெரிதாக எதுவும் அடி வாங்கவில்லை என்று.

ஒரு மத்திமக் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளெல்லாம் ஒரு பெரிய சோதனையா என்ன...?

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எத்தனை அவமானங்கள்...? எத்தனை அடி...? எத்தனை ஏளனப் பேச்சு...? இப்பொழுது ஒரு 10 வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் அது அத்தனையும் ஒரு நகைச்சுவையாகவே இருக்கும்.

உங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைவரின் வாழ்விலும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வே...

ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவிற்குப் பயணித்தாரே... அப்பொழுது அந்த நிலவில் அவர்கள் பட்ட சிரமத்தினைவிடவா....? மனித நடமாட்டமே ஏன் ஆக்ஸிஜனே இல்லாத சூழல்..ஈர்ப்பு விசை இல்லாத சூழல்...உலகைவிட்டு எங்கோ இன்னொரு கோளில் அந்த இருள்... இதையெல்லாம் நினனத்துப் பாருங்கள்...உங்களின் துன்பம் பெரிதான ஒன்றா...?

ஆரோக்கியமாக இருக்கும்பொழுது உடல் நலனின் அருமை தெரிவதில்லை. குணப்படுத்த முடியாத நோய் வரும்பொழுதுதான் நாம் நம் உடல் நலனை எண்ணிப்பார்க்கின்றோம். இதற்கு சர்க்கரை நோய் வந்தாலே நான் நிம்மதியாய் இருந்திருப்பேன் என ஒரு ஒப்பீடு செய்வோம் அப்பொழுது.

துன்பத்தினைத் துன்பப்படுத்துங்கள். துன்பத்திற்கு ஒரு சவால் விடுங்கள்.

நாம் நம் குறிக்கோளில் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம். இரண்டில் எது நிகழ்ந்தாலும் தவறில்லை. நன்மைக்கே. ஆனால் எதுவும் நிகழாமல் இருப்பதே தவறு.

எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் மனம் சலனமின்றி நம் குறிக்கோளை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

Continously Move towards your goal with detached attachment like a wheel.

எனக்கு என் நுரையீரல் பிடிக்கவில்லை; என் கணையம் எனக்குப் பிடிக்கவில்லை என்றெல்லாம் நாம் வருத்தப்பட முடியுமா...? அடுத்து என்ன என்று எண்ணி அடுத்த நிகழ்வினை நோக்கிப் பயணிப்போம்.

எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் எந்த உணர்வுகளுக்கும் அடிமையாகிட வேண்டாம். அதற்காக மனம் இரும்பாக இருக்க வேண்டும் என்ற அர்த்தமல்ல.

இக்கட்டான சூழ்நிலையில் புத்திசாலித்தனமாகச் செயல்படவேண்டும்.இங்கே மிஸ்டர் எக்ஸ் , மிஸ்டர் வொய் எப்படி கீழிருக்கும் சம்பவத்தினை எதிர்கொள்கின்றனர் எனப் பார்க்கலாம்.

உதாரணமாக நாம் எதிர்பாராவிதமாக ஒரு விபத்தினைச் சந்திக்கின்றோம். நல்ல பலத்த அடி. உடன் வந்தவர் உங்கள் உயிர் காதலி.

இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்...?

மிஸ்டர் எக்ஸ் சின் நிலைப்பாடு:

ஐயோ என் காதலிக்கு இப்படி ஆகிவிட்டதே...? ஐயகோ இனி நான் என் செய்வேன்...? எனக்கு மட்டும் ஏன் இப்படி வருகின்றது...? என ஒரு ஆர்ட் ஃபிலிம் ரேஞ்சுக்கு கண்ணீர் சிந்துகின்றான். மேலும் சூழலையும் நிகழ்வுகளையும் மோசமடையச் செய்கின்றான்.

மாறாக மிஸ்டர் வொய்:,

ஆல்ரைட்.. இப்பொழுது ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது. அடுத்து என்ன செய்வது...?

தன்னால் முடிந்த முதலுதவி. உடனே ஒரு ஆம்புலன்சுக்கு எமர்ஜென்சி கால்.

சுற்றுப்புறத்தை உதவிக்கு அழைக்கின்றான்.

சூழல் மாறுகின்றது.

காதலி தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் விரைவில் காப்பாற்றப்படுகின்றார்.

அன்பான அரவணைப்பில் விரைவில் குணமடைகின்றார்.

மிஸ்டர் வொய்யே தன் காதலியின் மீது உண்மையான காதல் வைத்திருப்பதாய் உள்ளது... செயல் செயல்....

ஆனால் நாம் அழவில்லையென்றால் அவள் நம்மைத் தப்பாக நினைப்பாளே என்றுதான் நம்மில் அநேகர் உணர்ச்சிகளுக்கு முதலிடம் தருகின்றோம்.


சில நிகழ்வுகள் நம் கையிலில்லை.

அதை நாம் பக்குவத்டன் ஏற்றுக்கொள்ளும் மனோநிலை வரப்பெற்றவராய் இருக்கவேண்டும்.

நான் குள்ளம். புல்லப்ஸ் சிரசானம் மருத்துவம் என எல்லாம் முயன்றும் பலன் பூஜ்ஜியம். என்னை மட்டும் ஏன் இறைவன் அமிதாப் மாதிரி உயரமாகப் படைக்கவில்லை எனப் புலம்புவது எப்படி நியாயம்...?

இது பாரம்பரியம். ஓகே இதுதான் என்னியல்பு என்று ஏற்றுக்கொள்ளும் அந்த மனோபாவம் இருக்கின்றதே... அப்பொழுது மனம் இலேசாகின்றது....

அதற்கு பரிகாரம் என்ன...? அடுத்த ஜெனரேஷனை உயரமாக வளர்க்க ஜப்பானில் ஒரு ஆராய்ச்சி. புரதத்தினை ஒரு சரியான விகிதத்திலே பயன்படுத்தி உயரத்தினை மாற்ற முயற்சிக்கின்றனர். இன்னும் ஒரு ஐந்தாறு தலைமுறையில் ஜப்பானியர்களின் உயரம் உயரும்.

இப்படியெல்லாம் சொல்வதற்காக, "நீங்கள் என்னிடத்தில் இருந்து பார்த்தால் புரியும்...உங்களுக்கு இது மாதிரியான கஷ்டம் வந்ததில்லை.. அதனால்தான் நீங்கள் அட்வைஸ் செய்கின்றீர்கள்...." எனக் கேட்கலாம்.

நானும் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் கடந்துதான் வந்தேன். ஒரே ஒரு வித்தியாசம் என் வாழ்வில் துரதிர்ஷ்டவசமாய் காதல் மட்டும் வரவில்லை...

மற்றபடி இதேபோல் ப்ரபசர் டார்ச்சர்... இழுத்தடித்தல்... மார்க் குறைத்தல் என்ற எல்லா அனுபவமும் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

பல்கலையில் ஒரு பாடவேளையில் ஆழ்ந்து லயித்துக்கொண்டிருந்த பொழுது என்னை வளர்த்த என் பெரியம்மா அவர்களின் மரணச்செய்தி... இதே போல் கொள்ளி போட முடியா சூழல்... அவருக்கு நான் மட்டுமே ஒரே வளர்ப்பு மகன்... அவருடைய இறுதி ஆசையே நான் கொள்ளி வைக்கவேண்டுமென்ற சிவாவின் பாட்டி போன்ற அதே ஆசை...

வருத்தம் இருந்தது . ஆனாலும் நான் அழவில்லையே...! ஆல் ரைட் அவரது பயணம் முடிவடைந்தது. அப்பொழுதுதான் என்னுள் ஏற்கெனவே இருந்த அந்த சகபயணி என்ற தத்துவம் இன்னும் ஆழமாய் வேரூன்றியது.


நாமனைவரும் யார்...? ஒரே இரயிலில் ஒரே கூபேயில் பயணிக்கும் சகபயனிகள் அவ்வளவே...

என் நிறுத்தம் வந்தால் நான் இறங்கிவிடுவேன், உங்கள் நிறுத்தம் வந்தால் நீங்கள் இறங்கி விடுவீர்கள். அது அம்மாவாயினும் சரி மனைவியாயினும் சரி...குழந்தையாயினும் சரி...நாமனைவரும் சக பயணிகள்தான். பயணம் முடியும்வரை அனைவருடன் இணக்கமாய் நட்புடன் பிறருக்கு உதவிக்கொண்டு மகிழ்ச்சியாய் நம் பயணத்தினைத் தொடர்வோம்...

Saturday, June 23, 2007

கடவுள் ஒரு சந்தேகம் by தியாகு

அன்புள்ள தியாகு,

கடவுள் உருவமற்றவர்.

ஆனால் மனிதனின் மனம் எதையுமே படமாகப் பார்க்கப் பழக்கப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக நான் ஃபேன் என்றால் உங்கள் மனதில் F A N என்ற எழுத்துக்கள் வருவதில்லை. மாறாக ஒரு காற்றாடி விட்டத்தில் சுழல்வதே உங்கள் மனதினில் வரும்.

டைப் மெஷின் என்றவுடன் உங்கள் மனதில் டைப் மெஷின் மட்டும் வருவதில்லை. அத்துடன் டேபிள் நாற்காலியும் மனதில் வரும். சிலருக்கு டைப் அடிக்கும் மங்கையே நினைவிற்கு வரலாம்....! :) :) :)

மனம் படங்களாய் பார்ப்பதால், கடவுளையும் நம் வசதிக்கேற்ப உருவங்களாய் படைத்தோம். கல்விக்கு ஒரு சரஸ்வதி, ஹயக்ரீவர்; செல்வத்திற்கு ஒரு திருப்பதி, லஷ்மி; வீரத்திற்கு ஒரு முருகன்; விவேகத்திற்கு ஒரு கிருஷ்ணன் என அவரவர் தேவைக்கேற்ப கடவுளர்கள் உருவாக்கப்பட்டனர்.

சரஸ்வதியை எண்ணி சரஸ்வதி காயத்திரி உச்சரிக்கும் பொழுது மனம் அறிவை நோக்கி Tune செய்யப் பழக்கப்படுத்தப்படுகின்றது. பணம் வேண்டுமா...? லஷ்மியை வணங்கு.... வீரமா முருகன்... இப்படி நம் மனதினை அந்தந்த லட்சியத்திற்கேற்ப இணைக்கும் ஒரு எளிதான அருமையான உபாயமே கோவிலும் பக்தியும்.

நம் மனதில் எதை ஊறப்போடுகின்றோமோ நாம் நம்மையறியாமலேயே அதை நோக்கி நகர ஆரம்பிக்கின்றோம்.

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது சுத்தவெளியே. அதாவது எதுவுமற்ற ஒரு Empty Space; Absolute Free Space; Even there is no mue meson particles....But Free Space contains Planum,Power and Wisdom.

ஐன்ஸ்டீனின் ஆற்றல் நிறை சமன்பாட்டின்படி E=MC^2 ஆற்றலை நிறையாகவோ நிறையை ஆற்றலாகவோ மாற்ற இயலும். முதலிலிருந்த ஆதி நிலையானது(Empty Space) சூழ்ந்தழுத்தம் ஆற்றலால் (Self Compressive Force) வெற்றிடம் குழிந்து சுழல ஆரம்பிக்கின்றது. அது ஒரு பருப்பொருளாகக் காட்சியளிக்கின்றது. இதுவே Fundamental Particle. இதன் கூட்டே பஞ்ச பூதங்கள்.

இந்த துகளின் ஆரம் 10 ^ - 47 mm கொண்ட ஒரு நுண்துகள்,ஆற்றலானது இப்படி 10 ^ -57 விநாடிகளில் வெடித்து நிறையாக மாற்றப்படுகின்றது என Big Bang Thoery யில் படிக்கின்றோம். அப்படியே பல பருப்பொருட்கள் உருவாகி ஆற்றலின் காரணமாக இயங்க ஆரம்பிக்கின்றது. (Planum, Power, Wisdom என்ற 3 திறன்கள் இயற்கை கொண்டது என ஏற்கெனவே பார்த்திருக்கின்றோம்.)

நியூட்டனின் Law of Attraction/Repulsion Theory யின் படி F = GMm / R ^ 2 தன்னையொத்த பருப்பொருட்களை ஈர்த்தும் விலக்கியும் கொண்டு மிகப்பெரிய பருப்பொருட்களை உருவாக்குகின்றன. அவைகளுக்கிடையேயுள்ள கவர்ச்சி மற்றும் விலக்கு விசையால் ஒரு ஒழுங்கில் இயங்க ஆரம்பிக்கின்றன. அதாவது சுழல ஆரம்பிக்கின்றன.

இந்த இயக்கத்திற்கு விஷ்ணு என்று பெயரிடுகின்றனர். அந்த அமைதியான ஆதி நிலைக்கு சிவன் என பெயரிட்டனர். நீங்கள் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள்,, " செவனே னு இருக்றேனே.... என்னை ஏம்ப்பா வம்புக்கு இழுக்கிறே..." சிவன் ஆதி நிலை; அமைதிநிலை. மரணத்தில் அமைதியடைவதால் சிவன் அந்தப் பொறுப்பை வகிப்பதாய் சொல்கின்றனர்.

உருவாகுதல் என்று எதுவும் இல்லை; ஒன்று இன்னொன்றாகப் பரிணமிக்கின்றது. இன்னொன்றாக மாற்றமடைகின்றது. கார்ல் மார்க்ஸ் தன்னுடைய தாஸ் காபிடலில் முதல் பக்கத்தில், " இந்தப் பிரபஞ்சத்தில் மாற்றத்தைத் தவிர எல்லாமே மாறுதலுக்குட்பட்டது...." என்று சொல்கின்றார்.

ஆனால் அவர் மட்டும் Physics படித்திருந்தால், Change is also subjected into Change by means of accleration என்று புரிந்திருப்பார்.

திருவள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற குரலில் அழகாய் விளக்கியிருக்கின்றார் ஆதிநிலையைப் பற்றி... இருப்பு நிலையைப் பற்றி; சிவகலத்தைப் பற்றி...

ஆனால் அதற்கு உரை எழுதிய பரிமேழலகரோ அல்லது மு.வா வோ எல்லாவற்றிற்கும் முதற்பொருள் இறைவனே எனவே அவனை வணங்குவோம் ...என சுருக்கமாக சொல்லிவிட்டனர். சரியான உட்பொருளைச் சொல்லவில்லை.

ஆனாலும் இந்தக் கடவுள் விஷயத்தில் யாருக்கும் எதுவும் முழுதுமாகத் தெரியாது என்பதே நிஜம். எனவே இதைப் பற்றியெல்லாம் அதிகமாய் கவலைப்படாமல் எப்பொழுதும் போல் இருக்கவும்...

இல்லையென்றால் நீங்களே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துக் கொள்ளவும். யார் விளக்கம் சொன்னாலும் அது சரியாக இருக்காது. எனவே இந்த விஷயத்தில் அவரவர்களே இறைவன் என்பது யார்,...? என வினாவினை எழுப்பி ஆராய்ச்சி செய்துகொள்ளவும்...அதுதான் சரியாக இருக்கும்...

இராவணனுக்கு 10 தலைகள் என்பது 10 கெட்ட குணங்கள் என உருவகப்படுத்துவது அந்த சொல்லும் நபருக்கு எவை எவை கெட்ட குணங்கள் என நினனத்தாரோ அதில் ஒரு 10 கெட்ட குணங்களை Prioritise செய்திருப்பார்.

மூலஸ்தானம் இருட்டாகத்தான் இருக்கவேண்டும். சிவநிலைத் தத்துவத்தை விளக்க. ஆனால் இன்று ஒளிர்வது மெர்க்குரி லேம்ப் நண்பா...மெர்க்குரி லேம்ப் நண்பா....! காலப்போக்கில் நாம் தவறாகப் புரிந்துகொள்கின்றோம்.

ஆனால் என்னைப்பொறுத்தவரை கோயில் ஒரு அருமையான நம்மை நல்வழிப்படுத்தும் ஒரு நல்ல சாதனமே... எனக்கும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறையவே இந்த விரதங்களும் மந்திரங்களும் என் சின்ன வயதில் நல்ல பலன்களைக் கொடுத்தது. பின்னர் யோகாவிற்கு மாறியபின் பக்தியோகத்தில் ஏனோ அவ்வளவு மனம் லயிக்கவில்லை....

ஆனாலும் நான் என் சின்ன வயதில் கடவுளர்களைப் பயத்தாலோ அல்லது மரியாதையாலோ வணங்கவில்லை... ஒரு நண்பனைப் போல்தான் பார்க்கமுடிந்தது....வேண்டுதலுக்கும் பலன் இருந்தது...

என்னுடைய ஆறாம் வகுப்பு வரை இருந்தத் திக்குவாய் பக்தி வழிபாட்டில்(வைணவம்) தொடர்ந்த பிரார்த்தனையின் காரணமாக திக்குவாய் முழுதுமாகக் குணமான அதிசயமும், சின்னவயதினில் என்னால் படிக்கவே இயலாத நிலையிலிருந்த நிலையும் மாறி நிறைய ஞாபக சக்தியும்
வேகமாகக் கிரகிக்கும் திறனும் வரப்பெற்ற அதிசயங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அதன்பின்னர் மேடையில் பேசி பரிசுகள் வாங்கியதெல்லாம் என்னாலேயே நினைத்துப் பார்க்கமுடியவில்லை...!

இதெல்லாம் மனோவியலின் விதிகளில் பொருத்திப்பார்த்தால் நம்பிக்கை என்ற விடை கிடைக்கின்றது.

கோயிலும் அதன் கான்செப்ட்டும் மூட நம்பிக்கையாகவே இருக்கட்டும். அதனால் நன்மைகள் நிகழ்ந்தால் சரிதான். நிகழாவிட்டாலும் அதனால் ஒன்றும் நட்டமில்லை.

மூடநம்பிக்கையாய் இருக்கும் பலியிடல் போன்றவைகளைத் தவிர்க்கலாம்.

இவையெல்லாம் என் நம்பிக்கைகளே...இவையெல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.

ஒருவனுக்கு சரியாக இருப்பது இன்னொருவருக்கு சரியாக இருப்பதில்லை. எல்லாம் Frame of reference... சமுதாயத்திற்கு தீங்கு செய்யும் ஒரு மிகப்பெரிய கொடியவனை நான் கொன்றால் அது கொலை என்று சட்டம் எனக்குத் தண்டனை அளிக்கும்; இதே இரவீந்திரன் இராணுவத்தில் சேர்ந்து போரில் எதிரிநாட்டைச் சார்ந்த முகம் தெரியாத எதிரிகளை 1000 பேர்களைக் கொன்றால் வீரன் என்று கெளரவிக்கின்றது...

மொத்தத்தில் கொலை கொலைதான். ஒரு உயிரைக் கொன்றால் தூக்கு; 1000 பேரைக்கொன்றால் பதக்கம்....எல்லாம் Frame of Reference...! மனிதன் இந்த மாயையில் சிக்குண்டதால் அவனால் உண்மையான மெய்ப்பொருளைக் காண முடிவதில்லை....

எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்போம்...