அன்புள்ள ஷைலஜாக்கா அவர்களுக்கு,
நான் காலையில் உடனே உங்களுக்கு பதில் எழுத முடியா பளுயிருந்ததால் இப்பொழுது பதிகின்றேன்.
சுந்தர காண்டத்தில் முதல் ஸர்க்கமே இப்படித்தான் இருக்கின்றது...
"ததோ ராவண நீதாயா: ஸீதாயா: ஸத்ருகர்ஸந:|
இயேஷ பத*மந்வேஷ்டும் சாரணாசரிதே பதி2 ||"
பகவான் யாவற்றைக் காட்டிலும் மேலானவர் என்பதற்கு அடையாளமான எண்ணிறந்த கல்யாண குனங்கள் அவரிடத்தில் விளங்குகின்றன என்று கிஷ்கிந்தா காண்டத்தில் சொல்லப்பட்டது.
பதினைந்தாவது ஸர்க்கத்தில் "ராமனை விரோதித்துக்கொண்டவனை, ராமனால் கொல்லத் தகுந்தவனை, பிரஹ்மா, ருத்திரன், இந்திரன் முதலியவர்களும் காப்பாற்ற முடியாது" என்பதால் இது நன்றாக விளங்குகின்றது.
கிஷ்கிந்தா காண்டத்தில் மித்திரர்களை எப்படியாவது ரட்சிக்க வேண்டும் என்ற தர்மமும், இந்தக் காண்டத்தில் தூதனும் பதிவிரதையும் நடந்துகொள்ளவேண்டிய தர்மமும் சொல்லப்படுகின்றப.
முன் காண்டத்தில் ஸகல லோகங்களையும் ரட்சிக்க அவதரித்த மஹாவிஷ்ணுவுக்கு, ஆசாரியன் என்ற புருஷகாரம்(மத்தியசஸ்தம்) கிடைத்த தென்பதையும், இந்தக் காண்டத்தில் ஆசாரியன் செய்யவேண்டிய காரியத்தையும் வால்மீகி தெரிவிக்கிறார். அதில் முதல் ஸர்க்கத்தில் உபதேசம் பெறத் தகுந்த சிஷ்யனை குரு தேடிப் போவது சொல்லப்படுகின்றது.(கோவிந்த ராஜீயம்.)
ராவண நீதாய: (ராவணனால் கொண்டுபோகப்பட்ட ) என்ற விசேஷணத்தால் ஸீதையின் ஸாத்விகஸ்வரூபம் அக்னி குண்டத்திலும், ராஜஸ்வரூபம் பகவானுடைய வலது புஜத்திலும் என்றும் பிரியாமலிருந்தனவென்றும், தாமஸ் ரூபத்தையே ராவணன் எடுத்துப் போனானென்றும் உட்கருத்து குறிப்பிடப்படுகிறது.
ஆனாலும் தேவனாகட்டும் மனிதனாகட்டும் இதெல்லாம் முதலிலேயே எழுதப்பட்ட Pre Written Codes. These codes are triggered at the right place at the right time. இதைத் தான் விதி என்கின்றோம்.
ராமாயணத்தில் கூட Law of Cause and Effect டே பெரும்பாலும் விளக்கப்பட்டிருக்கின்றது.
இங்கே ராமர் தன் சின்ன வய்தில் பம்பரம் விளையாடியபொழுது பம்பரம் ஒரு வயதான பாட்டி சுமந்து வந்த கஞ்சி களயத்தின் மீது விழுந்து அந்த களயத்தினைத் துளைத்து அதிலிருந்த கஞ்சி சிந்தும்படி ஆகிவிட்டது.
அப்பொழுது அந்த பாட்டி எதிர்பார்த்தது ஒரே ஒரு ஸாரி.... ஆனால் அது கிடைக்காதது மட்டுமின்றி ராமரும் தன் சகாக்களும் சிரித்ததினால் மனதினில் ஒரு அவமானத்தினை உணர்ந்தார்.
ராமருக்கு ராஜ்ஜியம் தரக்கூடாது என்ற ஒரு முடிவு. பதவி ஏற்கும் முன்பு கைகேயியிடம் சென்று பரதனுக்கு முடிசூட்டுவிழா நடத்துமாறும் ராமரை 14 வருடங்கள் காட்டிற்குச் செல்லவேண்டுமென்றும் சாவி கொடுத்தார்.
அன்று(பம்பரம்) நிகழ்ந்தது காரணம். இன்று (முடிசூட்டுவிழா) நிகழ்ந்தது காரியம்.
சூர்ப்பணகையின் மூக்கை அறுத்திருக்க வேண்டியதில்லை. இது வன்முறைதானே....?
இதுதான் விதி என்பது....
இதுதான் Law of Cause and Effect என்பது... அது இறைவனே ஆனாலும் யாரும் இதிலிருந்து தப்ப முடியாது என்பது விதி...கர்மவிதிகள் மிகவும் வலிமையானவை. இறைவனாகவே இருந்தாலும் அதை அனுபவித்தே ஆகவேண்டும் என்பது நியம விதி.
இந்த விதியை மாற்ற முயலுமா என்ற ஆராய்ச்சியில் விளைந்த விளைவே இறை வழிபாடு...
கோயில் ஒரு எளிமையான கருவியே....நம் குறிக்கோள்களை அடைவதற்கு....
அந்தக் குறிக்கோள்கள் நாளை நடக்கப் போகும் ஒரு நேர்முகத்தேர்வாயினும் சரி; அல்லது வீடு பேறு பெறும் குறிக்கோளாகட்டும் எல்லாவற்றிற்கும் பக்தியோ அல்லது தவமோ உதவுகின்றது.
நாம் உருவ வழிபாட்டினை உருவாக்கியது நமது எளிமைக்காகவே....
ராமாயணமும் மகாபாரதமும் ஒரு கற்பனைக் கதை என்பது என் கருத்து.
என்னையும் ராமாயணமும் மகாபாரதமும் செம்மை படுத்தின என்பதினை மறக்க முடியாது என்றாலும் கூட வேதாத்திரி மகரிஷி சொன்னது போல் இவைகள் கட்டுக்கதை என்பதில் நானும் உடன்படுகின்றேன்.
மனிதனை செம்மைப் படுத்த இவைகள் உதவுகின்றன. நான் இப்பொழுதும் கூட அதே சுந்தர காண்டமும் ஏகாதசி விரதமும் கடைபிடிக்கின்றேன். ஏனெனில் அதில் எனக்கு நம்பிக்கையும் இறைத் தன்மையும் இருப்பது என் சின்ன வயதிலேயே பதிக்கப்பட்டது,
என்னுடைய நம்பிக்கை வேறு; உண்மை வேறு;
இன்றிருக்கும் ஹாரிபாட்டர் கதைகள் இனியொரு 300 ஆண்டுகளுக்குப் பிறகு வளரும் சந்ததியினர் இதெல்லாம் நிஜமாகவே நடந்தன என நம்ப நிறைய வாய்ப்பிருக்கின்றன.
அறிஞர் அண்ணாவையும் எம்ஜிஆரையும் அவர்களின் காலத்திற்குப்பின்னால் நாம் அவர்களை ஏறக்குறைய கடவுளாக்கவில்லையா....?
ராவணன் தவத்தில் தலைசிறந்த ஒரு தவயோகி என புராணங்கள் சொல்கின்றன; கம்ப ராமாயணத்தில் இராவணன் தன் நகவிரல் கூட சீதையின் மீது படாமல் கண்ணியமாகவே நடத்தியதாக கம்பன் சொல்கின்றார். சீதை வேறு யாரோ அல்ல; ராவணனின் புத்திரிதானே...?;(இது ஒரு தனிக்கதை..... )
எந்த ஒரு யோகியும் யோகி என்ற நிலையை எட்டியபின் தன்னிலை இழப்பதில்லை. மேலே மேலே என்ற தேடலும் உலக வாழ்க்கையில் பற்றில்லா தன்மையுமே கொண்டவர்களாவர். தவற்றினை உடனே ஒப்புக்கொள்ளும் மனோபாவமும் இவர்களிடத்திலிருக்கும்.
எனவே இந்தக் கதையை யாராவது தமிழறிஞர்களும் தவத்தில் சிறந்த யோகியரும் விளக்கினால் அனைவரும் எளிமையாகப் புரிந்து கொள்ளமுடியும்.
நான் இப்படிச் சொல்வதால் ராமனிடம் எனக்கு ப்ரேமை இல்லை என்ற அர்த்தமல்ல்;
தனிப்பட்ட முறையில் ராமனும் ஆஞ்சநேயரும் எனக்கு நிறைய உதவிகள் இன்றளவும் செய்து கொண்டுதானிருக்கின்றனர்... இவர்கள் என் உன்னதமான கடவுளர்கள்....அதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.
நான் கேட்பது அதில் ஆழ்ந்த புலமை கொண்ட தமிழறிஞர்கள் விளக்கினால் இன்னும் நான் மகிழ்வேன்.
Saturday, July 7, 2007
Saturday, June 30, 2007
பயணம்
sivas......iitg@gmail.com> hide details 10:14 am (8 hours ago)
reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Jun 30, 2007 10:14 AM
subject [muththamiz] Re: நான் ரொம்பவே இழந்தேன்
mailed-by googlegroups.com
இந்த இழையை நான் இன்றுதான் பார்க்கின்றேன்
என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள், நான் எழுத நினைத்திருந்தேன், இதே தலைப்பில், ஆனால் எனக்கும் முன்பே முரளி எழுதி இருக்கின்றார், ஆனால் நான் இழந்தவை பட்டியல் வேறு , அவை என் முனைவர் பட்டப்படிப்பிற்காக, பட்டத்திற்காக நான் இழந்தவை, அவற்றில் ஒரு சில , பார்ப்பவர்களுக்கு மிகவும் சாதாரணமாக தோன்றலாம், ஆனால் எனக்கு அவை மிகப்பெரியவையே...முதலாவதாக
1) நாளை 01-07-2007 அன்று கோவையில் நடக்க இருக்கும், முத்தமிழ் சந்திப்பு. மஞ்சூர் அண்ணன் மற்றும் அனைத்து நண்பர்களையும் சந்திக்கும் சந்தோசத்தில் இருந்த என் சந்தோசத்தில் விழுந்த இடி, நேற்று என் மேற்பார்வையாளர் (வழிகாட்டி என்று சொல்லப்பிடிக்க வில்லை, ஏனெனில் அவருக்கு நான் தான் வழிகாட்டிக்கொண்டிருக்கின்றேன் :( ) அனுப்பிய மின்னஞ்சல், இன்னும் ஒரு வாரத்திற்கு வேலையை கொடுத்து , இன்று புறப்படலாம் என்று பயணச்சீட்டு பதிவதற்கு அவரிடம் அனுமதி கேட்டு போட்ட மின்னஞ்சலுக்கான பதிலில் வெடிகுண்டாக வந்தது, ஒரு வாரம் கழித்து போ என்று, தற்போதைய சுட சுட வந்த இழப்பு இது.
2) என் அம்மாவைப்பெற்ற பாட்டி (ஆயம்மா)யின் மரணம். தகவல் வந்தது ராத்திரி 11 மணி, இங்கிருந்து மறுநாள் காலை 11 மணிக்கு விமானம் பிடித்தால் கூட, அதற்கு அடுத்த நாள் காலைதான் போய் சேரமுடியும் ஊருக்கு :( , என் அன்னையை விட அதிகமாக என்னை நேசித்தவர், அவரின் ஒரே மகன் இறந்த சமயத்தில் பிறந்ததால் என்னை தன் மகனாகவே நினைத்து வளர்த்தவர், அவர் இறந்தால் அவருக்கு கொள்ளி நான் தான் போடவேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தார், செய்ய முடியவில்லை, 10ஆம் நாள் காரியத்திற்கே செல்ல முடிந்தது . :(
3) என் அப்பாவைப்பெற்ற பாட்டி, அவரின் மரணத்திற்கும் செல்லமுடியவில்லை, 95 வயது வரை எங்கள் வீட்டிலேயே , கன்றுக்குட்டி போல் சுற்றி சுற்றி வந்தவர், காசு வேண்டுமென்றால் ஓடிப்போய் அவரிடம் நிற்பேன், ஒரு 10 ரூபாய் எடுத்து, என் அம்மாவிற்கு தெரியாமல் கொடுப்பார், ஓடிப்போய் ஏதேனும் வாங்கி சாப்பிட எடுத்து வந்து அவருக்கும் அம்மாவிற்குமே கொடுத்துவிட்டு நானும் சாப்பிடுவேன், அவரின் மரணத்திற்கு செல்லமுடியவில்லை.
4) பெரியம்மா, புற்று நோயால் இறந்தார், அவரின் மரணத்திற்கும் செல்லமுடியவில்லை
5) சித்தப்பா மகன் , திடீரென்று வந்த மஞ்சள் காமாலையில் இறந்தான், அந்த மரணத்திற்கும் போகமுடியவில்லை, அதற்கு 6 மாசம் முன்னால்தான் கல்யாணம் செய்தானாம், அதுவும் எனக்கு தெரியப்படுத்தவில்லை ( 2 வருசம் வீட்டுப்பக்கமே போகாததால் வந்த இழப்புகள் இவை :(( )
6) பெரியப்பா பையன் ( தம்பி) கல்யாணம், தொடர்ந்து அவன் குழந்தை பிறப்பு, ( இன்றுவரை அந்த குழந்தை முகத்தை கூட பார்க்கவில்லை )
7) அத்தை மகன் திருமணம், கூட மாட இருந்து செய்திருக்கவேண்டியவன் நான், சின்னவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள், என்னைவிட ஒரு வயதே பெரியவன், சொந்த சகோதரன் போல் பழகியவன், ( திருமணத்திற்கு நான் வரவில்லை என்று இன்றுவரை அவனிடம் பேச்சுவார்த்தை இல்லை :(( )
8) கலிடோனியன் காலேஜ் ஆப் எஞ்சினியரிங், ஓமன், மஸ்கட் ல் உதவிப்பேராசிரியர் பணி, ஒன்றேகால் லட்சம் மாத சம்பளத்தோடு கிடைத்தும் சேரமுடியாத சூழல்.
9) இப்போ கையில் கிடைத்த விப்ரோ வேலை பறிபோகும் சூழல்.
10) அண்ணனாக வீட்டில் இருந்து தங்கைக்கு வரன் தேடுவதில் அப்பாவிற்கு உதவி செய்யமுடியாத சூழல்....:(
11) எல்லாவற்றிற்கும் மேல், எல்லோரின் வாழ்விலும் வரும்.......அந்த காதல்.....
12 வருடங்கள் ஒருத்திக்காக காத்திருந்து, இங்கு வந்துவிட்ட ஒரே காரணத்தால், இருவருக்கும் மனசுக்கு பிடித்திருந்தும், அங்கிருந்தால் அவசியம் முடிந்திருக்கவேண்டிய கல்யாணம், இன்று வேறொருவருடன் அவர், கையில் ஒரு குழந்தையுடன், போனமுறை வீட்டிற்கு சென்றபோது, ஒரு அழகிய பரிசுப்பொருள் வாங்கிச்சென்று கொடுத்து விட்டு வாழ்த்திவிட்டு வந்தேன், ( என்ன சொல்லி வாழ்த்த???? கல்யாண புகைப்பட தொகுப்பை என் கையில் கொடுத்து, அதற்கு முன் குழந்தையை கையில் கொடுத்துவிட்டு கண் கலங்க என்னைப்பார்த்த அவள் பார்வை , என் வாழ்வின் இறுதி வரை என்னை சுட்டுக்கொண்டே இருக்கும்).
ஒரு முறை தான் , ஒரு முறை தான், ஒரு சில தவறுகள் ஒரு முறைதான்....
தவமாய் தவமிருந்து ...படப்பாடல் ஷியாம் ரேடியோவில் சமயோசிதமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.....என்னவென்று சொல்ல??????? இவ்வளவு விசயங்களை இழந்து பெறும், இந்த பட்டம் , எனக்கு தேவைதானா? இந்த பட்டம்? அவ்வளவு தகுதி வாய்ந்ததா? நாளை நான் ஒரு முனைவன், இடுப்பெலும்பு ஆராய்ச்சியில் இந்தியாவிலேயே, இந்த வருடம் ஆராய்ச்சி முடிக்கும் ஒரே ஆராய்ச்சியாளன் நான் மட்டுமே....என்ன லாபம்???? விண்ணப்பிக்கும் அனைத்து வேலைகளும் அழைப்பு வருகின்றது...ஆனாலும் நான் இழந்தவை????????? யாரேனும் தங்கள் கருத்தினை இதற்கு கூறினால் மகிழ்வேன்....:((
சிவா...செங்கம்.....
M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com
===
அன்புள்ள சிவ சங்கர்,
உங்கள் மடல் படித்தேன்.
அதிலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் புரிகின்றது. நீங்கள் வாழ்க்கையில் பெரிதாக எதுவும் அடி வாங்கவில்லை என்று.
ஒரு மத்திமக் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளெல்லாம் ஒரு பெரிய சோதனையா என்ன...?
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எத்தனை அவமானங்கள்...? எத்தனை அடி...? எத்தனை ஏளனப் பேச்சு...? இப்பொழுது ஒரு 10 வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் அது அத்தனையும் ஒரு நகைச்சுவையாகவே இருக்கும்.
உங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைவரின் வாழ்விலும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வே...
ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவிற்குப் பயணித்தாரே... அப்பொழுது அந்த நிலவில் அவர்கள் பட்ட சிரமத்தினைவிடவா....? மனித நடமாட்டமே ஏன் ஆக்ஸிஜனே இல்லாத சூழல்..ஈர்ப்பு விசை இல்லாத சூழல்...உலகைவிட்டு எங்கோ இன்னொரு கோளில் அந்த இருள்... இதையெல்லாம் நினனத்துப் பாருங்கள்...உங்களின் துன்பம் பெரிதான ஒன்றா...?
ஆரோக்கியமாக இருக்கும்பொழுது உடல் நலனின் அருமை தெரிவதில்லை. குணப்படுத்த முடியாத நோய் வரும்பொழுதுதான் நாம் நம் உடல் நலனை எண்ணிப்பார்க்கின்றோம். இதற்கு சர்க்கரை நோய் வந்தாலே நான் நிம்மதியாய் இருந்திருப்பேன் என ஒரு ஒப்பீடு செய்வோம் அப்பொழுது.
துன்பத்தினைத் துன்பப்படுத்துங்கள். துன்பத்திற்கு ஒரு சவால் விடுங்கள்.
நாம் நம் குறிக்கோளில் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம். இரண்டில் எது நிகழ்ந்தாலும் தவறில்லை. நன்மைக்கே. ஆனால் எதுவும் நிகழாமல் இருப்பதே தவறு.
எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் மனம் சலனமின்றி நம் குறிக்கோளை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
Continously Move towards your goal with detached attachment like a wheel.
எனக்கு என் நுரையீரல் பிடிக்கவில்லை; என் கணையம் எனக்குப் பிடிக்கவில்லை என்றெல்லாம் நாம் வருத்தப்பட முடியுமா...? அடுத்து என்ன என்று எண்ணி அடுத்த நிகழ்வினை நோக்கிப் பயணிப்போம்.
எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் எந்த உணர்வுகளுக்கும் அடிமையாகிட வேண்டாம். அதற்காக மனம் இரும்பாக இருக்க வேண்டும் என்ற அர்த்தமல்ல.
இக்கட்டான சூழ்நிலையில் புத்திசாலித்தனமாகச் செயல்படவேண்டும்.இங்கே மிஸ்டர் எக்ஸ் , மிஸ்டர் வொய் எப்படி கீழிருக்கும் சம்பவத்தினை எதிர்கொள்கின்றனர் எனப் பார்க்கலாம்.
உதாரணமாக நாம் எதிர்பாராவிதமாக ஒரு விபத்தினைச் சந்திக்கின்றோம். நல்ல பலத்த அடி. உடன் வந்தவர் உங்கள் உயிர் காதலி.
இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்...?
மிஸ்டர் எக்ஸ் சின் நிலைப்பாடு:
ஐயோ என் காதலிக்கு இப்படி ஆகிவிட்டதே...? ஐயகோ இனி நான் என் செய்வேன்...? எனக்கு மட்டும் ஏன் இப்படி வருகின்றது...? என ஒரு ஆர்ட் ஃபிலிம் ரேஞ்சுக்கு கண்ணீர் சிந்துகின்றான். மேலும் சூழலையும் நிகழ்வுகளையும் மோசமடையச் செய்கின்றான்.
மாறாக மிஸ்டர் வொய்:,
ஆல்ரைட்.. இப்பொழுது ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது. அடுத்து என்ன செய்வது...?
தன்னால் முடிந்த முதலுதவி. உடனே ஒரு ஆம்புலன்சுக்கு எமர்ஜென்சி கால்.
சுற்றுப்புறத்தை உதவிக்கு அழைக்கின்றான்.
சூழல் மாறுகின்றது.
காதலி தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் விரைவில் காப்பாற்றப்படுகின்றார்.
அன்பான அரவணைப்பில் விரைவில் குணமடைகின்றார்.
மிஸ்டர் வொய்யே தன் காதலியின் மீது உண்மையான காதல் வைத்திருப்பதாய் உள்ளது... செயல் செயல்....
ஆனால் நாம் அழவில்லையென்றால் அவள் நம்மைத் தப்பாக நினைப்பாளே என்றுதான் நம்மில் அநேகர் உணர்ச்சிகளுக்கு முதலிடம் தருகின்றோம்.
சில நிகழ்வுகள் நம் கையிலில்லை.
அதை நாம் பக்குவத்டன் ஏற்றுக்கொள்ளும் மனோநிலை வரப்பெற்றவராய் இருக்கவேண்டும்.
நான் குள்ளம். புல்லப்ஸ் சிரசானம் மருத்துவம் என எல்லாம் முயன்றும் பலன் பூஜ்ஜியம். என்னை மட்டும் ஏன் இறைவன் அமிதாப் மாதிரி உயரமாகப் படைக்கவில்லை எனப் புலம்புவது எப்படி நியாயம்...?
இது பாரம்பரியம். ஓகே இதுதான் என்னியல்பு என்று ஏற்றுக்கொள்ளும் அந்த மனோபாவம் இருக்கின்றதே... அப்பொழுது மனம் இலேசாகின்றது....
அதற்கு பரிகாரம் என்ன...? அடுத்த ஜெனரேஷனை உயரமாக வளர்க்க ஜப்பானில் ஒரு ஆராய்ச்சி. புரதத்தினை ஒரு சரியான விகிதத்திலே பயன்படுத்தி உயரத்தினை மாற்ற முயற்சிக்கின்றனர். இன்னும் ஒரு ஐந்தாறு தலைமுறையில் ஜப்பானியர்களின் உயரம் உயரும்.
இப்படியெல்லாம் சொல்வதற்காக, "நீங்கள் என்னிடத்தில் இருந்து பார்த்தால் புரியும்...உங்களுக்கு இது மாதிரியான கஷ்டம் வந்ததில்லை.. அதனால்தான் நீங்கள் அட்வைஸ் செய்கின்றீர்கள்...." எனக் கேட்கலாம்.
நானும் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் கடந்துதான் வந்தேன். ஒரே ஒரு வித்தியாசம் என் வாழ்வில் துரதிர்ஷ்டவசமாய் காதல் மட்டும் வரவில்லை...
மற்றபடி இதேபோல் ப்ரபசர் டார்ச்சர்... இழுத்தடித்தல்... மார்க் குறைத்தல் என்ற எல்லா அனுபவமும் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
பல்கலையில் ஒரு பாடவேளையில் ஆழ்ந்து லயித்துக்கொண்டிருந்த பொழுது என்னை வளர்த்த என் பெரியம்மா அவர்களின் மரணச்செய்தி... இதே போல் கொள்ளி போட முடியா சூழல்... அவருக்கு நான் மட்டுமே ஒரே வளர்ப்பு மகன்... அவருடைய இறுதி ஆசையே நான் கொள்ளி வைக்கவேண்டுமென்ற சிவாவின் பாட்டி போன்ற அதே ஆசை...
வருத்தம் இருந்தது . ஆனாலும் நான் அழவில்லையே...! ஆல் ரைட் அவரது பயணம் முடிவடைந்தது. அப்பொழுதுதான் என்னுள் ஏற்கெனவே இருந்த அந்த சகபயணி என்ற தத்துவம் இன்னும் ஆழமாய் வேரூன்றியது.
நாமனைவரும் யார்...? ஒரே இரயிலில் ஒரே கூபேயில் பயணிக்கும் சகபயனிகள் அவ்வளவே...
என் நிறுத்தம் வந்தால் நான் இறங்கிவிடுவேன், உங்கள் நிறுத்தம் வந்தால் நீங்கள் இறங்கி விடுவீர்கள். அது அம்மாவாயினும் சரி மனைவியாயினும் சரி...குழந்தையாயினும் சரி...நாமனைவரும் சக பயணிகள்தான். பயணம் முடியும்வரை அனைவருடன் இணக்கமாய் நட்புடன் பிறருக்கு உதவிக்கொண்டு மகிழ்ச்சியாய் நம் பயணத்தினைத் தொடர்வோம்...
reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Jun 30, 2007 10:14 AM
subject [muththamiz] Re: நான் ரொம்பவே இழந்தேன்
mailed-by googlegroups.com
இந்த இழையை நான் இன்றுதான் பார்க்கின்றேன்
என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள், நான் எழுத நினைத்திருந்தேன், இதே தலைப்பில், ஆனால் எனக்கும் முன்பே முரளி எழுதி இருக்கின்றார், ஆனால் நான் இழந்தவை பட்டியல் வேறு , அவை என் முனைவர் பட்டப்படிப்பிற்காக, பட்டத்திற்காக நான் இழந்தவை, அவற்றில் ஒரு சில , பார்ப்பவர்களுக்கு மிகவும் சாதாரணமாக தோன்றலாம், ஆனால் எனக்கு அவை மிகப்பெரியவையே...முதலாவதாக
1) நாளை 01-07-2007 அன்று கோவையில் நடக்க இருக்கும், முத்தமிழ் சந்திப்பு. மஞ்சூர் அண்ணன் மற்றும் அனைத்து நண்பர்களையும் சந்திக்கும் சந்தோசத்தில் இருந்த என் சந்தோசத்தில் விழுந்த இடி, நேற்று என் மேற்பார்வையாளர் (வழிகாட்டி என்று சொல்லப்பிடிக்க வில்லை, ஏனெனில் அவருக்கு நான் தான் வழிகாட்டிக்கொண்டிருக்கின்றேன் :( ) அனுப்பிய மின்னஞ்சல், இன்னும் ஒரு வாரத்திற்கு வேலையை கொடுத்து , இன்று புறப்படலாம் என்று பயணச்சீட்டு பதிவதற்கு அவரிடம் அனுமதி கேட்டு போட்ட மின்னஞ்சலுக்கான பதிலில் வெடிகுண்டாக வந்தது, ஒரு வாரம் கழித்து போ என்று, தற்போதைய சுட சுட வந்த இழப்பு இது.
2) என் அம்மாவைப்பெற்ற பாட்டி (ஆயம்மா)யின் மரணம். தகவல் வந்தது ராத்திரி 11 மணி, இங்கிருந்து மறுநாள் காலை 11 மணிக்கு விமானம் பிடித்தால் கூட, அதற்கு அடுத்த நாள் காலைதான் போய் சேரமுடியும் ஊருக்கு :( , என் அன்னையை விட அதிகமாக என்னை நேசித்தவர், அவரின் ஒரே மகன் இறந்த சமயத்தில் பிறந்ததால் என்னை தன் மகனாகவே நினைத்து வளர்த்தவர், அவர் இறந்தால் அவருக்கு கொள்ளி நான் தான் போடவேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தார், செய்ய முடியவில்லை, 10ஆம் நாள் காரியத்திற்கே செல்ல முடிந்தது . :(
3) என் அப்பாவைப்பெற்ற பாட்டி, அவரின் மரணத்திற்கும் செல்லமுடியவில்லை, 95 வயது வரை எங்கள் வீட்டிலேயே , கன்றுக்குட்டி போல் சுற்றி சுற்றி வந்தவர், காசு வேண்டுமென்றால் ஓடிப்போய் அவரிடம் நிற்பேன், ஒரு 10 ரூபாய் எடுத்து, என் அம்மாவிற்கு தெரியாமல் கொடுப்பார், ஓடிப்போய் ஏதேனும் வாங்கி சாப்பிட எடுத்து வந்து அவருக்கும் அம்மாவிற்குமே கொடுத்துவிட்டு நானும் சாப்பிடுவேன், அவரின் மரணத்திற்கு செல்லமுடியவில்லை.
4) பெரியம்மா, புற்று நோயால் இறந்தார், அவரின் மரணத்திற்கும் செல்லமுடியவில்லை
5) சித்தப்பா மகன் , திடீரென்று வந்த மஞ்சள் காமாலையில் இறந்தான், அந்த மரணத்திற்கும் போகமுடியவில்லை, அதற்கு 6 மாசம் முன்னால்தான் கல்யாணம் செய்தானாம், அதுவும் எனக்கு தெரியப்படுத்தவில்லை ( 2 வருசம் வீட்டுப்பக்கமே போகாததால் வந்த இழப்புகள் இவை :(( )
6) பெரியப்பா பையன் ( தம்பி) கல்யாணம், தொடர்ந்து அவன் குழந்தை பிறப்பு, ( இன்றுவரை அந்த குழந்தை முகத்தை கூட பார்க்கவில்லை )
7) அத்தை மகன் திருமணம், கூட மாட இருந்து செய்திருக்கவேண்டியவன் நான், சின்னவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள், என்னைவிட ஒரு வயதே பெரியவன், சொந்த சகோதரன் போல் பழகியவன், ( திருமணத்திற்கு நான் வரவில்லை என்று இன்றுவரை அவனிடம் பேச்சுவார்த்தை இல்லை :(( )
8) கலிடோனியன் காலேஜ் ஆப் எஞ்சினியரிங், ஓமன், மஸ்கட் ல் உதவிப்பேராசிரியர் பணி, ஒன்றேகால் லட்சம் மாத சம்பளத்தோடு கிடைத்தும் சேரமுடியாத சூழல்.
9) இப்போ கையில் கிடைத்த விப்ரோ வேலை பறிபோகும் சூழல்.
10) அண்ணனாக வீட்டில் இருந்து தங்கைக்கு வரன் தேடுவதில் அப்பாவிற்கு உதவி செய்யமுடியாத சூழல்....:(
11) எல்லாவற்றிற்கும் மேல், எல்லோரின் வாழ்விலும் வரும்.......அந்த காதல்.....
12 வருடங்கள் ஒருத்திக்காக காத்திருந்து, இங்கு வந்துவிட்ட ஒரே காரணத்தால், இருவருக்கும் மனசுக்கு பிடித்திருந்தும், அங்கிருந்தால் அவசியம் முடிந்திருக்கவேண்டிய கல்யாணம், இன்று வேறொருவருடன் அவர், கையில் ஒரு குழந்தையுடன், போனமுறை வீட்டிற்கு சென்றபோது, ஒரு அழகிய பரிசுப்பொருள் வாங்கிச்சென்று கொடுத்து விட்டு வாழ்த்திவிட்டு வந்தேன், ( என்ன சொல்லி வாழ்த்த???? கல்யாண புகைப்பட தொகுப்பை என் கையில் கொடுத்து, அதற்கு முன் குழந்தையை கையில் கொடுத்துவிட்டு கண் கலங்க என்னைப்பார்த்த அவள் பார்வை , என் வாழ்வின் இறுதி வரை என்னை சுட்டுக்கொண்டே இருக்கும்).
ஒரு முறை தான் , ஒரு முறை தான், ஒரு சில தவறுகள் ஒரு முறைதான்....
தவமாய் தவமிருந்து ...படப்பாடல் ஷியாம் ரேடியோவில் சமயோசிதமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.....என்னவென்று சொல்ல??????? இவ்வளவு விசயங்களை இழந்து பெறும், இந்த பட்டம் , எனக்கு தேவைதானா? இந்த பட்டம்? அவ்வளவு தகுதி வாய்ந்ததா? நாளை நான் ஒரு முனைவன், இடுப்பெலும்பு ஆராய்ச்சியில் இந்தியாவிலேயே, இந்த வருடம் ஆராய்ச்சி முடிக்கும் ஒரே ஆராய்ச்சியாளன் நான் மட்டுமே....என்ன லாபம்???? விண்ணப்பிக்கும் அனைத்து வேலைகளும் அழைப்பு வருகின்றது...ஆனாலும் நான் இழந்தவை????????? யாரேனும் தங்கள் கருத்தினை இதற்கு கூறினால் மகிழ்வேன்....:((
சிவா...செங்கம்.....
M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com
===
அன்புள்ள சிவ சங்கர்,
உங்கள் மடல் படித்தேன்.
அதிலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் புரிகின்றது. நீங்கள் வாழ்க்கையில் பெரிதாக எதுவும் அடி வாங்கவில்லை என்று.
ஒரு மத்திமக் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளெல்லாம் ஒரு பெரிய சோதனையா என்ன...?
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எத்தனை அவமானங்கள்...? எத்தனை அடி...? எத்தனை ஏளனப் பேச்சு...? இப்பொழுது ஒரு 10 வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் அது அத்தனையும் ஒரு நகைச்சுவையாகவே இருக்கும்.
உங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைவரின் வாழ்விலும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வே...
ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவிற்குப் பயணித்தாரே... அப்பொழுது அந்த நிலவில் அவர்கள் பட்ட சிரமத்தினைவிடவா....? மனித நடமாட்டமே ஏன் ஆக்ஸிஜனே இல்லாத சூழல்..ஈர்ப்பு விசை இல்லாத சூழல்...உலகைவிட்டு எங்கோ இன்னொரு கோளில் அந்த இருள்... இதையெல்லாம் நினனத்துப் பாருங்கள்...உங்களின் துன்பம் பெரிதான ஒன்றா...?
ஆரோக்கியமாக இருக்கும்பொழுது உடல் நலனின் அருமை தெரிவதில்லை. குணப்படுத்த முடியாத நோய் வரும்பொழுதுதான் நாம் நம் உடல் நலனை எண்ணிப்பார்க்கின்றோம். இதற்கு சர்க்கரை நோய் வந்தாலே நான் நிம்மதியாய் இருந்திருப்பேன் என ஒரு ஒப்பீடு செய்வோம் அப்பொழுது.
துன்பத்தினைத் துன்பப்படுத்துங்கள். துன்பத்திற்கு ஒரு சவால் விடுங்கள்.
நாம் நம் குறிக்கோளில் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம். இரண்டில் எது நிகழ்ந்தாலும் தவறில்லை. நன்மைக்கே. ஆனால் எதுவும் நிகழாமல் இருப்பதே தவறு.
எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் மனம் சலனமின்றி நம் குறிக்கோளை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
Continously Move towards your goal with detached attachment like a wheel.
எனக்கு என் நுரையீரல் பிடிக்கவில்லை; என் கணையம் எனக்குப் பிடிக்கவில்லை என்றெல்லாம் நாம் வருத்தப்பட முடியுமா...? அடுத்து என்ன என்று எண்ணி அடுத்த நிகழ்வினை நோக்கிப் பயணிப்போம்.
எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் எந்த உணர்வுகளுக்கும் அடிமையாகிட வேண்டாம். அதற்காக மனம் இரும்பாக இருக்க வேண்டும் என்ற அர்த்தமல்ல.
இக்கட்டான சூழ்நிலையில் புத்திசாலித்தனமாகச் செயல்படவேண்டும்.இங்கே மிஸ்டர் எக்ஸ் , மிஸ்டர் வொய் எப்படி கீழிருக்கும் சம்பவத்தினை எதிர்கொள்கின்றனர் எனப் பார்க்கலாம்.
உதாரணமாக நாம் எதிர்பாராவிதமாக ஒரு விபத்தினைச் சந்திக்கின்றோம். நல்ல பலத்த அடி. உடன் வந்தவர் உங்கள் உயிர் காதலி.
இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்...?
மிஸ்டர் எக்ஸ் சின் நிலைப்பாடு:
ஐயோ என் காதலிக்கு இப்படி ஆகிவிட்டதே...? ஐயகோ இனி நான் என் செய்வேன்...? எனக்கு மட்டும் ஏன் இப்படி வருகின்றது...? என ஒரு ஆர்ட் ஃபிலிம் ரேஞ்சுக்கு கண்ணீர் சிந்துகின்றான். மேலும் சூழலையும் நிகழ்வுகளையும் மோசமடையச் செய்கின்றான்.
மாறாக மிஸ்டர் வொய்:,
ஆல்ரைட்.. இப்பொழுது ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது. அடுத்து என்ன செய்வது...?
தன்னால் முடிந்த முதலுதவி. உடனே ஒரு ஆம்புலன்சுக்கு எமர்ஜென்சி கால்.
சுற்றுப்புறத்தை உதவிக்கு அழைக்கின்றான்.
சூழல் மாறுகின்றது.
காதலி தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் விரைவில் காப்பாற்றப்படுகின்றார்.
அன்பான அரவணைப்பில் விரைவில் குணமடைகின்றார்.
மிஸ்டர் வொய்யே தன் காதலியின் மீது உண்மையான காதல் வைத்திருப்பதாய் உள்ளது... செயல் செயல்....
ஆனால் நாம் அழவில்லையென்றால் அவள் நம்மைத் தப்பாக நினைப்பாளே என்றுதான் நம்மில் அநேகர் உணர்ச்சிகளுக்கு முதலிடம் தருகின்றோம்.
சில நிகழ்வுகள் நம் கையிலில்லை.
அதை நாம் பக்குவத்டன் ஏற்றுக்கொள்ளும் மனோநிலை வரப்பெற்றவராய் இருக்கவேண்டும்.
நான் குள்ளம். புல்லப்ஸ் சிரசானம் மருத்துவம் என எல்லாம் முயன்றும் பலன் பூஜ்ஜியம். என்னை மட்டும் ஏன் இறைவன் அமிதாப் மாதிரி உயரமாகப் படைக்கவில்லை எனப் புலம்புவது எப்படி நியாயம்...?
இது பாரம்பரியம். ஓகே இதுதான் என்னியல்பு என்று ஏற்றுக்கொள்ளும் அந்த மனோபாவம் இருக்கின்றதே... அப்பொழுது மனம் இலேசாகின்றது....
அதற்கு பரிகாரம் என்ன...? அடுத்த ஜெனரேஷனை உயரமாக வளர்க்க ஜப்பானில் ஒரு ஆராய்ச்சி. புரதத்தினை ஒரு சரியான விகிதத்திலே பயன்படுத்தி உயரத்தினை மாற்ற முயற்சிக்கின்றனர். இன்னும் ஒரு ஐந்தாறு தலைமுறையில் ஜப்பானியர்களின் உயரம் உயரும்.
இப்படியெல்லாம் சொல்வதற்காக, "நீங்கள் என்னிடத்தில் இருந்து பார்த்தால் புரியும்...உங்களுக்கு இது மாதிரியான கஷ்டம் வந்ததில்லை.. அதனால்தான் நீங்கள் அட்வைஸ் செய்கின்றீர்கள்...." எனக் கேட்கலாம்.
நானும் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் கடந்துதான் வந்தேன். ஒரே ஒரு வித்தியாசம் என் வாழ்வில் துரதிர்ஷ்டவசமாய் காதல் மட்டும் வரவில்லை...
மற்றபடி இதேபோல் ப்ரபசர் டார்ச்சர்... இழுத்தடித்தல்... மார்க் குறைத்தல் என்ற எல்லா அனுபவமும் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
பல்கலையில் ஒரு பாடவேளையில் ஆழ்ந்து லயித்துக்கொண்டிருந்த பொழுது என்னை வளர்த்த என் பெரியம்மா அவர்களின் மரணச்செய்தி... இதே போல் கொள்ளி போட முடியா சூழல்... அவருக்கு நான் மட்டுமே ஒரே வளர்ப்பு மகன்... அவருடைய இறுதி ஆசையே நான் கொள்ளி வைக்கவேண்டுமென்ற சிவாவின் பாட்டி போன்ற அதே ஆசை...
வருத்தம் இருந்தது . ஆனாலும் நான் அழவில்லையே...! ஆல் ரைட் அவரது பயணம் முடிவடைந்தது. அப்பொழுதுதான் என்னுள் ஏற்கெனவே இருந்த அந்த சகபயணி என்ற தத்துவம் இன்னும் ஆழமாய் வேரூன்றியது.
நாமனைவரும் யார்...? ஒரே இரயிலில் ஒரே கூபேயில் பயணிக்கும் சகபயனிகள் அவ்வளவே...
என் நிறுத்தம் வந்தால் நான் இறங்கிவிடுவேன், உங்கள் நிறுத்தம் வந்தால் நீங்கள் இறங்கி விடுவீர்கள். அது அம்மாவாயினும் சரி மனைவியாயினும் சரி...குழந்தையாயினும் சரி...நாமனைவரும் சக பயணிகள்தான். பயணம் முடியும்வரை அனைவருடன் இணக்கமாய் நட்புடன் பிறருக்கு உதவிக்கொண்டு மகிழ்ச்சியாய் நம் பயணத்தினைத் தொடர்வோம்...
Saturday, June 23, 2007
கடவுள் ஒரு சந்தேகம் by தியாகு
அன்புள்ள தியாகு,
கடவுள் உருவமற்றவர்.
ஆனால் மனிதனின் மனம் எதையுமே படமாகப் பார்க்கப் பழக்கப்பட்டிருக்கின்றது.
உதாரணமாக நான் ஃபேன் என்றால் உங்கள் மனதில் F A N என்ற எழுத்துக்கள் வருவதில்லை. மாறாக ஒரு காற்றாடி விட்டத்தில் சுழல்வதே உங்கள் மனதினில் வரும்.
டைப் மெஷின் என்றவுடன் உங்கள் மனதில் டைப் மெஷின் மட்டும் வருவதில்லை. அத்துடன் டேபிள் நாற்காலியும் மனதில் வரும். சிலருக்கு டைப் அடிக்கும் மங்கையே நினைவிற்கு வரலாம்....! :) :) :)
மனம் படங்களாய் பார்ப்பதால், கடவுளையும் நம் வசதிக்கேற்ப உருவங்களாய் படைத்தோம். கல்விக்கு ஒரு சரஸ்வதி, ஹயக்ரீவர்; செல்வத்திற்கு ஒரு திருப்பதி, லஷ்மி; வீரத்திற்கு ஒரு முருகன்; விவேகத்திற்கு ஒரு கிருஷ்ணன் என அவரவர் தேவைக்கேற்ப கடவுளர்கள் உருவாக்கப்பட்டனர்.
சரஸ்வதியை எண்ணி சரஸ்வதி காயத்திரி உச்சரிக்கும் பொழுது மனம் அறிவை நோக்கி Tune செய்யப் பழக்கப்படுத்தப்படுகின்றது. பணம் வேண்டுமா...? லஷ்மியை வணங்கு.... வீரமா முருகன்... இப்படி நம் மனதினை அந்தந்த லட்சியத்திற்கேற்ப இணைக்கும் ஒரு எளிதான அருமையான உபாயமே கோவிலும் பக்தியும்.
நம் மனதில் எதை ஊறப்போடுகின்றோமோ நாம் நம்மையறியாமலேயே அதை நோக்கி நகர ஆரம்பிக்கின்றோம்.
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது சுத்தவெளியே. அதாவது எதுவுமற்ற ஒரு Empty Space; Absolute Free Space; Even there is no mue meson particles....But Free Space contains Planum,Power and Wisdom.
ஐன்ஸ்டீனின் ஆற்றல் நிறை சமன்பாட்டின்படி E=MC^2 ஆற்றலை நிறையாகவோ நிறையை ஆற்றலாகவோ மாற்ற இயலும். முதலிலிருந்த ஆதி நிலையானது(Empty Space) சூழ்ந்தழுத்தம் ஆற்றலால் (Self Compressive Force) வெற்றிடம் குழிந்து சுழல ஆரம்பிக்கின்றது. அது ஒரு பருப்பொருளாகக் காட்சியளிக்கின்றது. இதுவே Fundamental Particle. இதன் கூட்டே பஞ்ச பூதங்கள்.
இந்த துகளின் ஆரம் 10 ^ - 47 mm கொண்ட ஒரு நுண்துகள்,ஆற்றலானது இப்படி 10 ^ -57 விநாடிகளில் வெடித்து நிறையாக மாற்றப்படுகின்றது என Big Bang Thoery யில் படிக்கின்றோம். அப்படியே பல பருப்பொருட்கள் உருவாகி ஆற்றலின் காரணமாக இயங்க ஆரம்பிக்கின்றது. (Planum, Power, Wisdom என்ற 3 திறன்கள் இயற்கை கொண்டது என ஏற்கெனவே பார்த்திருக்கின்றோம்.)
நியூட்டனின் Law of Attraction/Repulsion Theory யின் படி F = GMm / R ^ 2 தன்னையொத்த பருப்பொருட்களை ஈர்த்தும் விலக்கியும் கொண்டு மிகப்பெரிய பருப்பொருட்களை உருவாக்குகின்றன. அவைகளுக்கிடையேயுள்ள கவர்ச்சி மற்றும் விலக்கு விசையால் ஒரு ஒழுங்கில் இயங்க ஆரம்பிக்கின்றன. அதாவது சுழல ஆரம்பிக்கின்றன.
இந்த இயக்கத்திற்கு விஷ்ணு என்று பெயரிடுகின்றனர். அந்த அமைதியான ஆதி நிலைக்கு சிவன் என பெயரிட்டனர். நீங்கள் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள்,, " செவனே னு இருக்றேனே.... என்னை ஏம்ப்பா வம்புக்கு இழுக்கிறே..." சிவன் ஆதி நிலை; அமைதிநிலை. மரணத்தில் அமைதியடைவதால் சிவன் அந்தப் பொறுப்பை வகிப்பதாய் சொல்கின்றனர்.
உருவாகுதல் என்று எதுவும் இல்லை; ஒன்று இன்னொன்றாகப் பரிணமிக்கின்றது. இன்னொன்றாக மாற்றமடைகின்றது. கார்ல் மார்க்ஸ் தன்னுடைய தாஸ் காபிடலில் முதல் பக்கத்தில், " இந்தப் பிரபஞ்சத்தில் மாற்றத்தைத் தவிர எல்லாமே மாறுதலுக்குட்பட்டது...." என்று சொல்கின்றார்.
ஆனால் அவர் மட்டும் Physics படித்திருந்தால், Change is also subjected into Change by means of accleration என்று புரிந்திருப்பார்.
திருவள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற குரலில் அழகாய் விளக்கியிருக்கின்றார் ஆதிநிலையைப் பற்றி... இருப்பு நிலையைப் பற்றி; சிவகலத்தைப் பற்றி...
ஆனால் அதற்கு உரை எழுதிய பரிமேழலகரோ அல்லது மு.வா வோ எல்லாவற்றிற்கும் முதற்பொருள் இறைவனே எனவே அவனை வணங்குவோம் ...என சுருக்கமாக சொல்லிவிட்டனர். சரியான உட்பொருளைச் சொல்லவில்லை.
ஆனாலும் இந்தக் கடவுள் விஷயத்தில் யாருக்கும் எதுவும் முழுதுமாகத் தெரியாது என்பதே நிஜம். எனவே இதைப் பற்றியெல்லாம் அதிகமாய் கவலைப்படாமல் எப்பொழுதும் போல் இருக்கவும்...
இல்லையென்றால் நீங்களே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துக் கொள்ளவும். யார் விளக்கம் சொன்னாலும் அது சரியாக இருக்காது. எனவே இந்த விஷயத்தில் அவரவர்களே இறைவன் என்பது யார்,...? என வினாவினை எழுப்பி ஆராய்ச்சி செய்துகொள்ளவும்...அதுதான் சரியாக இருக்கும்...
இராவணனுக்கு 10 தலைகள் என்பது 10 கெட்ட குணங்கள் என உருவகப்படுத்துவது அந்த சொல்லும் நபருக்கு எவை எவை கெட்ட குணங்கள் என நினனத்தாரோ அதில் ஒரு 10 கெட்ட குணங்களை Prioritise செய்திருப்பார்.
மூலஸ்தானம் இருட்டாகத்தான் இருக்கவேண்டும். சிவநிலைத் தத்துவத்தை விளக்க. ஆனால் இன்று ஒளிர்வது மெர்க்குரி லேம்ப் நண்பா...மெர்க்குரி லேம்ப் நண்பா....! காலப்போக்கில் நாம் தவறாகப் புரிந்துகொள்கின்றோம்.
ஆனால் என்னைப்பொறுத்தவரை கோயில் ஒரு அருமையான நம்மை நல்வழிப்படுத்தும் ஒரு நல்ல சாதனமே... எனக்கும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறையவே இந்த விரதங்களும் மந்திரங்களும் என் சின்ன வயதில் நல்ல பலன்களைக் கொடுத்தது. பின்னர் யோகாவிற்கு மாறியபின் பக்தியோகத்தில் ஏனோ அவ்வளவு மனம் லயிக்கவில்லை....
ஆனாலும் நான் என் சின்ன வயதில் கடவுளர்களைப் பயத்தாலோ அல்லது மரியாதையாலோ வணங்கவில்லை... ஒரு நண்பனைப் போல்தான் பார்க்கமுடிந்தது....வேண்டுதலுக்கும் பலன் இருந்தது...
என்னுடைய ஆறாம் வகுப்பு வரை இருந்தத் திக்குவாய் பக்தி வழிபாட்டில்(வைணவம்) தொடர்ந்த பிரார்த்தனையின் காரணமாக திக்குவாய் முழுதுமாகக் குணமான அதிசயமும், சின்னவயதினில் என்னால் படிக்கவே இயலாத நிலையிலிருந்த நிலையும் மாறி நிறைய ஞாபக சக்தியும்
வேகமாகக் கிரகிக்கும் திறனும் வரப்பெற்ற அதிசயங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அதன்பின்னர் மேடையில் பேசி பரிசுகள் வாங்கியதெல்லாம் என்னாலேயே நினைத்துப் பார்க்கமுடியவில்லை...!
இதெல்லாம் மனோவியலின் விதிகளில் பொருத்திப்பார்த்தால் நம்பிக்கை என்ற விடை கிடைக்கின்றது.
கோயிலும் அதன் கான்செப்ட்டும் மூட நம்பிக்கையாகவே இருக்கட்டும். அதனால் நன்மைகள் நிகழ்ந்தால் சரிதான். நிகழாவிட்டாலும் அதனால் ஒன்றும் நட்டமில்லை.
மூடநம்பிக்கையாய் இருக்கும் பலியிடல் போன்றவைகளைத் தவிர்க்கலாம்.
இவையெல்லாம் என் நம்பிக்கைகளே...இவையெல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.
ஒருவனுக்கு சரியாக இருப்பது இன்னொருவருக்கு சரியாக இருப்பதில்லை. எல்லாம் Frame of reference... சமுதாயத்திற்கு தீங்கு செய்யும் ஒரு மிகப்பெரிய கொடியவனை நான் கொன்றால் அது கொலை என்று சட்டம் எனக்குத் தண்டனை அளிக்கும்; இதே இரவீந்திரன் இராணுவத்தில் சேர்ந்து போரில் எதிரிநாட்டைச் சார்ந்த முகம் தெரியாத எதிரிகளை 1000 பேர்களைக் கொன்றால் வீரன் என்று கெளரவிக்கின்றது...
மொத்தத்தில் கொலை கொலைதான். ஒரு உயிரைக் கொன்றால் தூக்கு; 1000 பேரைக்கொன்றால் பதக்கம்....எல்லாம் Frame of Reference...! மனிதன் இந்த மாயையில் சிக்குண்டதால் அவனால் உண்மையான மெய்ப்பொருளைக் காண முடிவதில்லை....
எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்போம்...
கடவுள் உருவமற்றவர்.
ஆனால் மனிதனின் மனம் எதையுமே படமாகப் பார்க்கப் பழக்கப்பட்டிருக்கின்றது.
உதாரணமாக நான் ஃபேன் என்றால் உங்கள் மனதில் F A N என்ற எழுத்துக்கள் வருவதில்லை. மாறாக ஒரு காற்றாடி விட்டத்தில் சுழல்வதே உங்கள் மனதினில் வரும்.
டைப் மெஷின் என்றவுடன் உங்கள் மனதில் டைப் மெஷின் மட்டும் வருவதில்லை. அத்துடன் டேபிள் நாற்காலியும் மனதில் வரும். சிலருக்கு டைப் அடிக்கும் மங்கையே நினைவிற்கு வரலாம்....! :) :) :)
மனம் படங்களாய் பார்ப்பதால், கடவுளையும் நம் வசதிக்கேற்ப உருவங்களாய் படைத்தோம். கல்விக்கு ஒரு சரஸ்வதி, ஹயக்ரீவர்; செல்வத்திற்கு ஒரு திருப்பதி, லஷ்மி; வீரத்திற்கு ஒரு முருகன்; விவேகத்திற்கு ஒரு கிருஷ்ணன் என அவரவர் தேவைக்கேற்ப கடவுளர்கள் உருவாக்கப்பட்டனர்.
சரஸ்வதியை எண்ணி சரஸ்வதி காயத்திரி உச்சரிக்கும் பொழுது மனம் அறிவை நோக்கி Tune செய்யப் பழக்கப்படுத்தப்படுகின்றது. பணம் வேண்டுமா...? லஷ்மியை வணங்கு.... வீரமா முருகன்... இப்படி நம் மனதினை அந்தந்த லட்சியத்திற்கேற்ப இணைக்கும் ஒரு எளிதான அருமையான உபாயமே கோவிலும் பக்தியும்.
நம் மனதில் எதை ஊறப்போடுகின்றோமோ நாம் நம்மையறியாமலேயே அதை நோக்கி நகர ஆரம்பிக்கின்றோம்.
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது சுத்தவெளியே. அதாவது எதுவுமற்ற ஒரு Empty Space; Absolute Free Space; Even there is no mue meson particles....But Free Space contains Planum,Power and Wisdom.
ஐன்ஸ்டீனின் ஆற்றல் நிறை சமன்பாட்டின்படி E=MC^2 ஆற்றலை நிறையாகவோ நிறையை ஆற்றலாகவோ மாற்ற இயலும். முதலிலிருந்த ஆதி நிலையானது(Empty Space) சூழ்ந்தழுத்தம் ஆற்றலால் (Self Compressive Force) வெற்றிடம் குழிந்து சுழல ஆரம்பிக்கின்றது. அது ஒரு பருப்பொருளாகக் காட்சியளிக்கின்றது. இதுவே Fundamental Particle. இதன் கூட்டே பஞ்ச பூதங்கள்.
இந்த துகளின் ஆரம் 10 ^ - 47 mm கொண்ட ஒரு நுண்துகள்,ஆற்றலானது இப்படி 10 ^ -57 விநாடிகளில் வெடித்து நிறையாக மாற்றப்படுகின்றது என Big Bang Thoery யில் படிக்கின்றோம். அப்படியே பல பருப்பொருட்கள் உருவாகி ஆற்றலின் காரணமாக இயங்க ஆரம்பிக்கின்றது. (Planum, Power, Wisdom என்ற 3 திறன்கள் இயற்கை கொண்டது என ஏற்கெனவே பார்த்திருக்கின்றோம்.)
நியூட்டனின் Law of Attraction/Repulsion Theory யின் படி F = GMm / R ^ 2 தன்னையொத்த பருப்பொருட்களை ஈர்த்தும் விலக்கியும் கொண்டு மிகப்பெரிய பருப்பொருட்களை உருவாக்குகின்றன. அவைகளுக்கிடையேயுள்ள கவர்ச்சி மற்றும் விலக்கு விசையால் ஒரு ஒழுங்கில் இயங்க ஆரம்பிக்கின்றன. அதாவது சுழல ஆரம்பிக்கின்றன.
இந்த இயக்கத்திற்கு விஷ்ணு என்று பெயரிடுகின்றனர். அந்த அமைதியான ஆதி நிலைக்கு சிவன் என பெயரிட்டனர். நீங்கள் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள்,, " செவனே னு இருக்றேனே.... என்னை ஏம்ப்பா வம்புக்கு இழுக்கிறே..." சிவன் ஆதி நிலை; அமைதிநிலை. மரணத்தில் அமைதியடைவதால் சிவன் அந்தப் பொறுப்பை வகிப்பதாய் சொல்கின்றனர்.
உருவாகுதல் என்று எதுவும் இல்லை; ஒன்று இன்னொன்றாகப் பரிணமிக்கின்றது. இன்னொன்றாக மாற்றமடைகின்றது. கார்ல் மார்க்ஸ் தன்னுடைய தாஸ் காபிடலில் முதல் பக்கத்தில், " இந்தப் பிரபஞ்சத்தில் மாற்றத்தைத் தவிர எல்லாமே மாறுதலுக்குட்பட்டது...." என்று சொல்கின்றார்.
ஆனால் அவர் மட்டும் Physics படித்திருந்தால், Change is also subjected into Change by means of accleration என்று புரிந்திருப்பார்.
திருவள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற குரலில் அழகாய் விளக்கியிருக்கின்றார் ஆதிநிலையைப் பற்றி... இருப்பு நிலையைப் பற்றி; சிவகலத்தைப் பற்றி...
ஆனால் அதற்கு உரை எழுதிய பரிமேழலகரோ அல்லது மு.வா வோ எல்லாவற்றிற்கும் முதற்பொருள் இறைவனே எனவே அவனை வணங்குவோம் ...என சுருக்கமாக சொல்லிவிட்டனர். சரியான உட்பொருளைச் சொல்லவில்லை.
ஆனாலும் இந்தக் கடவுள் விஷயத்தில் யாருக்கும் எதுவும் முழுதுமாகத் தெரியாது என்பதே நிஜம். எனவே இதைப் பற்றியெல்லாம் அதிகமாய் கவலைப்படாமல் எப்பொழுதும் போல் இருக்கவும்...
இல்லையென்றால் நீங்களே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துக் கொள்ளவும். யார் விளக்கம் சொன்னாலும் அது சரியாக இருக்காது. எனவே இந்த விஷயத்தில் அவரவர்களே இறைவன் என்பது யார்,...? என வினாவினை எழுப்பி ஆராய்ச்சி செய்துகொள்ளவும்...அதுதான் சரியாக இருக்கும்...
இராவணனுக்கு 10 தலைகள் என்பது 10 கெட்ட குணங்கள் என உருவகப்படுத்துவது அந்த சொல்லும் நபருக்கு எவை எவை கெட்ட குணங்கள் என நினனத்தாரோ அதில் ஒரு 10 கெட்ட குணங்களை Prioritise செய்திருப்பார்.
மூலஸ்தானம் இருட்டாகத்தான் இருக்கவேண்டும். சிவநிலைத் தத்துவத்தை விளக்க. ஆனால் இன்று ஒளிர்வது மெர்க்குரி லேம்ப் நண்பா...மெர்க்குரி லேம்ப் நண்பா....! காலப்போக்கில் நாம் தவறாகப் புரிந்துகொள்கின்றோம்.
ஆனால் என்னைப்பொறுத்தவரை கோயில் ஒரு அருமையான நம்மை நல்வழிப்படுத்தும் ஒரு நல்ல சாதனமே... எனக்கும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறையவே இந்த விரதங்களும் மந்திரங்களும் என் சின்ன வயதில் நல்ல பலன்களைக் கொடுத்தது. பின்னர் யோகாவிற்கு மாறியபின் பக்தியோகத்தில் ஏனோ அவ்வளவு மனம் லயிக்கவில்லை....
ஆனாலும் நான் என் சின்ன வயதில் கடவுளர்களைப் பயத்தாலோ அல்லது மரியாதையாலோ வணங்கவில்லை... ஒரு நண்பனைப் போல்தான் பார்க்கமுடிந்தது....வேண்டுதலுக்கும் பலன் இருந்தது...
என்னுடைய ஆறாம் வகுப்பு வரை இருந்தத் திக்குவாய் பக்தி வழிபாட்டில்(வைணவம்) தொடர்ந்த பிரார்த்தனையின் காரணமாக திக்குவாய் முழுதுமாகக் குணமான அதிசயமும், சின்னவயதினில் என்னால் படிக்கவே இயலாத நிலையிலிருந்த நிலையும் மாறி நிறைய ஞாபக சக்தியும்
வேகமாகக் கிரகிக்கும் திறனும் வரப்பெற்ற அதிசயங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அதன்பின்னர் மேடையில் பேசி பரிசுகள் வாங்கியதெல்லாம் என்னாலேயே நினைத்துப் பார்க்கமுடியவில்லை...!
இதெல்லாம் மனோவியலின் விதிகளில் பொருத்திப்பார்த்தால் நம்பிக்கை என்ற விடை கிடைக்கின்றது.
கோயிலும் அதன் கான்செப்ட்டும் மூட நம்பிக்கையாகவே இருக்கட்டும். அதனால் நன்மைகள் நிகழ்ந்தால் சரிதான். நிகழாவிட்டாலும் அதனால் ஒன்றும் நட்டமில்லை.
மூடநம்பிக்கையாய் இருக்கும் பலியிடல் போன்றவைகளைத் தவிர்க்கலாம்.
இவையெல்லாம் என் நம்பிக்கைகளே...இவையெல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.
ஒருவனுக்கு சரியாக இருப்பது இன்னொருவருக்கு சரியாக இருப்பதில்லை. எல்லாம் Frame of reference... சமுதாயத்திற்கு தீங்கு செய்யும் ஒரு மிகப்பெரிய கொடியவனை நான் கொன்றால் அது கொலை என்று சட்டம் எனக்குத் தண்டனை அளிக்கும்; இதே இரவீந்திரன் இராணுவத்தில் சேர்ந்து போரில் எதிரிநாட்டைச் சார்ந்த முகம் தெரியாத எதிரிகளை 1000 பேர்களைக் கொன்றால் வீரன் என்று கெளரவிக்கின்றது...
மொத்தத்தில் கொலை கொலைதான். ஒரு உயிரைக் கொன்றால் தூக்கு; 1000 பேரைக்கொன்றால் பதக்கம்....எல்லாம் Frame of Reference...! மனிதன் இந்த மாயையில் சிக்குண்டதால் அவனால் உண்மையான மெய்ப்பொருளைக் காண முடிவதில்லை....
எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்போம்...
Thursday, June 7, 2007
ஒரு ஆசிரியன்
செல்வன் <> hide details 6:16 pm (5 hours ago)
reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Jun 7, 2007 6:16 PM
subject [muththamiz] Re: ஒரு ஆசிரியன் கற்றது
mailed-by googlegroups.com
சுரேஷ்
கல்வித்துறையில் நிலவும் வருத்தமான நிலவரம் இதுதான்....ஆசிரியர் நிலவரம் இன்று மிக வேதனையான விசயம்.. மற்ற பலதுறைகளில் இதே போல்தான் நடக்கிறது. மனிதவளத்தை இப்படி துச்சமாக நினைத்தால் அவன் ஏன் வெளிநாட்டுக்கு ஓடமாட்டான்??
On 6/7/07, sweetsuresh <> wrote:
2003ல் கடுமையான வறட்சி வந்து வருமானத்துக்கே வழி இல்லாம நான்
பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைக்கு முயன்ற போது எனக்கு அவர்கள் தர
ஒப்புக் கொண்டது வெறும் 1500ரூ மட்டுமே. அதிலும் தினமும் 30 கிலோமீட்டர்
நான் சென்று வரவேண்டி இருந்தது.
நான் ஒரு 2000 மாவது கொடுங்கள் என்றபோது 1500க்கே நிறையபேர் தயாரா
இருக்காங்க. நீங்க நல்லா நடத்தறீங்கன்னுதான் உங்க தேர்வு
பண்ணியிருக்கிறோம் அப்படின்னாங்க.
-சுரேஷ்பாபு
On Jun 7, 9:47 am, "செல்வன்" wrote:
> தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கிடையாது. சம்பளமும் குறைவு.
--
செல்வன்
http://groups.google.com/group/muththamiz
தனிமடல் தொடர்புக்கு: holyape@gmail.com
--~--~---------~--~----~------------~-------~--~----~
- Show quoted text -
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---
Reply Forward Invite செல்வன் to chat
விஜி சுதன் செல்வன் அண்ணா, உங்க கதையைப்பார்த்தால் திரைப்படங்களில் எல்லாம் மிகைப்படக் காட்...
8:14 pm (3 hours ago)
Reply
Reply to all
Forward
Print
Add Raveendran to Contacts list
Delete this message
Report phishing
Show original
Message text garbled?
Raveendran Krishnasamy to muththamiz
show details 11:16 pm (4 minutes ago)
On 6/7/07, விஜி சுதன் <> wrote:
நானும் அப்படி அல்லவா நினைத்திருந்தேன்....உங்க கதையெல்லாம் கேட்கும் போது தப்பிச்சோம்டா சாமின்னு இருக்கு" ஏனெனில் ஆசிரியர் தொழில் நான் மிக நேசிக்கும் மதிக்கும் தொழில்...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆனால் நான் ஆசிரியர் தொழிலை துளித்துளியாய் ரசித்து அதுவே ஒரு ஜென் மெடிட்டேஷன் மாதிரி பண்ணினேன்... பாடம் நடத்துவதில் நேரம் போவதே தெரியாமல் மாணவர்களே லயித்துப் போயினர்.
எந்த மாணவ மாணவிகளாவது பெளதிகத்திற்கு ஸ்பெஷல் கிளாஸ் வைக்கச் சொல்லிக் கேட்டிருக்கின்றீர்களா....?
ஆனால் என் மாணவர்கள் அவ்வளவு ஆர்வமாய் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட பாடம் நடத்தும்படி மிகவும் ஆசையாய் கேட்டுக்கொண்டனர்.
பாடமே அவர்களுக்கு ஒரு சினிமா டைரக்டர் தன் படத்தை எப்படி டைரக்ட் பண்ணுவாரோ அது போல் முன்னிரவு நல்ல ஹோம் ஒர்க் பண்ணிவிட்டு நானே என் சொந்த செலவில் Teaching Aids மாதிரிகளை உருவாக்கி நடத்தியதில் நல்ல பலன்....
துறைத் தலைவர் இரத்தினசாமியின் உண்மையான ஆர்வமும் உற்சாகமும் பல்கலை ரேங்க்குகள் வரிசையாகக் குவிய காரணமாக அமைந்தது.
எம்.ஐ.டி.யில் B.Sc Physics/Maths/Chemistry முடித்தவர்களுக்கு மட்டுமே அப்பொழுது B.Tech admission அங்கே இருந்தது...
எங்கள் கல்லூரியில் பெளதிகத் துறைக்கு மட்டுமே அங்கே வருடா வருடம் தனியாக ஒரு கோட்டா உருவாக்கியது போல் எங்கள் மாணவர்கள் அங்கே எளிதாக சென்றைடவர்.
துறைத் தலைவரைவிட நான் பாடம் நடத்துவதில் மாணவர்கள் அதிகமாய் ஆர்வம் காட்டலானார்கள். எந்த வாத்தியாராவது வராவிட்டால் என்னை அழைத்துச் சென்று அறிவியலைப் பற்றி பேசச் சொல்வார்கள்.
நானும் இதுதான் சமயம் என பிரபஞ்ச இயக்கத்திலிருந்து எடுத்துவிடுவேன். ஆகாயம், விண்வெளி, கோள்கள், பால்வளி மண்டலம், ஆண்ட்ரமீடா கேலக்ஸி, எம்80, எ89 காலக்ஸி, இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கின்றோமா....? நாம் பிறப்பிற்கு முன்னால் எங்கிருந்தோம்...? மரணத்திற்குப் பின் நிலை என்ன...? உயிர் என்றால் என்ன...? இப்படி படிப்படியாக சுவாரஸ்யமாக யோகா தவம் என்று கொண்டு வந்துவிடுவேன்...
ஏறக்குறைய என் மாணவ மாணவிகள் என் தாக்கத்தின் காரணமாக சினம் கொள்வதைத் தவிர்த்தனர். நட்பு நலம் பாராட்டினர். வீட்டில் கூட அவர்களது பெற்றோர்கள் என்னைத் தனியாகத் தேடி வந்து, "என் பையன் இப்போ ரொம்ப நல்ல பையனா மாறிட்டான்... உங்களைத் தான் சொல்றான்" என்றோ அல்லது "என் பொண்ணு இப்போ அம்மாவுக்கு சொல்லாமலே ரொம்ப உதவி செய்றா...நல்ல மாற்றம்..." என்றோ சொல்லிப் பாராட்டிவிட்டுச் செல்லும்பொழுது, "அட நம்மால் கூட 4 பேருக்கு ப்ரயோஜனமா இருக்கும் போலிருக்கே.." ன்னு ஒரு நோபல் பரிசு கிடைச்ச சந்தோஷம் கிடைக்கும்...
Science Forum ஒன்னு ஆரம்பிச்சி மாணவ மாணவிகளை முழுமையாக ஆராய்ச்சி மனப்பான்மைக்கு மாறி ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எங்கள் ஊரில் எங்கள் பேராசிரியர்களின் உதவியால் தொடங்கி வெவ்வேறு துறையைச் சார்ந்த வெவ்வேறு கல்லூரி பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் என ஒரு பெரிய பரபரப்பே பண்ணினோம்...
சென்னையிலுள்ள சில Film Society யில் மெம்பராகி விஞ்ஞான ஆராய்ச்சி டாக்குமெண்டரிகளை Audio-Visual Education என்னும் துறையையும் கையெலெடுத்துக்கொண்டு அங்கே மாதத்திற்கு இரண்டு மூன்று படங்களைத் திரையிட்டோம்....
அது ஒரு கனாக் காலம்....!
அருப்புக்கோட்டை மாணவ மாணவிகளும் எனக்கு நல்விதமாய் ஒத்துழைத்தனர். ஆனால் சென்னையில் நேர் எதிரான அனுபவம் ஏற்பட்டது.
அதுவே என்னை மேலே மேல் படிப்புப் படிக்கத்தூண்டி எண்ட்ரன்ஸ் எக்ஸாமில் நல்ல ஸ்கோர் வாங்கி சீட் பிடிக்க தூண்டுகோலாய் அமைந்து கணணித் துறைக்கு இழுத்துச் சென்றது....
இப்பொழுதும் எனக்குக் கணிப்பானியலைவிட பெளதிகமே ஆழ்மனதில் அமர்ந்திருக்கின்றது... இப்படித்தான் நமக்கு எது பிடிக்கின்றதோ அதில் ஈடுபட முடியாமல் கேவலம் சமுதாய ரெக்ககனைசைனுக்காக நாம் தடம் புரள வேண்டியிருக்கின்றது.....!
பேராசானுக்குரிய ஒரு மதிப்பும் முழு ஊதியமும் வேலை நிரந்தரமும் இருந்திட்டால் நான் ஏன் சிலிக்கான் வேலிக்குப் பயணிக்கப்போகின்றேன்...?
சிவசிவா என்று
Properties of Matter by Raveendram Krishnasamy
Heat and Thermodynamics by Raveendran Krishansamy
Electro Magnetic Theory by Raveendran Krishansamy
ABC of Electronics by Raveendran Krishanasamy
Introduction to Micro Processor by Raveendran Krishnasamy
Computer Organisation and Assembly Language Programming by RK
Industrial Electronics by Raveendran Krishnasamy
Physics in Day to Day Life by Raveendran Krishnasamy
Plasma Physics by Raveendran Krishnasamy
என்று எத்தனையோ புத்தகங்கள் படைத்திருப்பேனே.... ! என்றாவதொரு நாள் படிப்படியாய் ஐன்ஸ்டீனாய் மாறி உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருப்பேனே...!
நாலு பேருக்காக நாம் தடம் புரள வேண்டியிருக்கின்றது....வீட்டிலோ அமெரிக்காவில் பணம் சம்பாதிப்பதையே பிறவிப்பயனாய் கருதும் சமுதாயம்... அவ்வளவு ஏன் கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும் போது கூட பையன், "அமெரிக்காவா....?"
என்ன உலகமடா இது... நான் நல்லவன்; குடி இல்லை; சிகரெட் இல்லை; சூதுவாது இல்லை; கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை; கெட்ட எண்ணங்கள் எதுவும் இல்லை என்றால் தரகன் கூட ,"இது தேறாத கேஸ்..." என கமெண்ட் அடிக்கின்றானே....?
அட நான் எதையோ ஆரம்பித்து எழுத்து கன்னாபின்னா வென எங்கெங்கோ கட்டுப்பாடின்றி செல்கின்றதே....?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..
On
--
என்றென்றும்
சுதனின் விஜி
--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---
- Hide quoted text -
--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன் www.rishiraveendran.tk
"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."
reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Jun 7, 2007 6:16 PM
subject [muththamiz] Re: ஒரு ஆசிரியன் கற்றது
mailed-by googlegroups.com
சுரேஷ்
கல்வித்துறையில் நிலவும் வருத்தமான நிலவரம் இதுதான்....ஆசிரியர் நிலவரம் இன்று மிக வேதனையான விசயம்.. மற்ற பலதுறைகளில் இதே போல்தான் நடக்கிறது. மனிதவளத்தை இப்படி துச்சமாக நினைத்தால் அவன் ஏன் வெளிநாட்டுக்கு ஓடமாட்டான்??
On 6/7/07, sweetsuresh <> wrote:
2003ல் கடுமையான வறட்சி வந்து வருமானத்துக்கே வழி இல்லாம நான்
பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைக்கு முயன்ற போது எனக்கு அவர்கள் தர
ஒப்புக் கொண்டது வெறும் 1500ரூ மட்டுமே. அதிலும் தினமும் 30 கிலோமீட்டர்
நான் சென்று வரவேண்டி இருந்தது.
நான் ஒரு 2000 மாவது கொடுங்கள் என்றபோது 1500க்கே நிறையபேர் தயாரா
இருக்காங்க. நீங்க நல்லா நடத்தறீங்கன்னுதான் உங்க தேர்வு
பண்ணியிருக்கிறோம் அப்படின்னாங்க.
-சுரேஷ்பாபு
On Jun 7, 9:47 am, "செல்வன்"
> தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கிடையாது. சம்பளமும் குறைவு.
--
செல்வன்
http://groups.google.com/group/muththamiz
தனிமடல் தொடர்புக்கு: holyape@gmail.com
--~--~---------~--~----~------------~-------~--~----~
- Show quoted text -
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---
Reply Forward Invite செல்வன் to chat
விஜி சுதன் செல்வன் அண்ணா, உங்க கதையைப்பார்த்தால் திரைப்படங்களில் எல்லாம் மிகைப்படக் காட்...
8:14 pm (3 hours ago)
Reply
Reply to all
Forward
Add Raveendran to Contacts list
Delete this message
Report phishing
Show original
Message text garbled?
Raveendran Krishnasamy to muththamiz
show details 11:16 pm (4 minutes ago)
On 6/7/07, விஜி சுதன் <> wrote:
நானும் அப்படி அல்லவா நினைத்திருந்தேன்....உங்க கதையெல்லாம் கேட்கும் போது தப்பிச்சோம்டா சாமின்னு இருக்கு" ஏனெனில் ஆசிரியர் தொழில் நான் மிக நேசிக்கும் மதிக்கும் தொழில்...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆனால் நான் ஆசிரியர் தொழிலை துளித்துளியாய் ரசித்து அதுவே ஒரு ஜென் மெடிட்டேஷன் மாதிரி பண்ணினேன்... பாடம் நடத்துவதில் நேரம் போவதே தெரியாமல் மாணவர்களே லயித்துப் போயினர்.
எந்த மாணவ மாணவிகளாவது பெளதிகத்திற்கு ஸ்பெஷல் கிளாஸ் வைக்கச் சொல்லிக் கேட்டிருக்கின்றீர்களா....?
ஆனால் என் மாணவர்கள் அவ்வளவு ஆர்வமாய் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட பாடம் நடத்தும்படி மிகவும் ஆசையாய் கேட்டுக்கொண்டனர்.
பாடமே அவர்களுக்கு ஒரு சினிமா டைரக்டர் தன் படத்தை எப்படி டைரக்ட் பண்ணுவாரோ அது போல் முன்னிரவு நல்ல ஹோம் ஒர்க் பண்ணிவிட்டு நானே என் சொந்த செலவில் Teaching Aids மாதிரிகளை உருவாக்கி நடத்தியதில் நல்ல பலன்....
துறைத் தலைவர் இரத்தினசாமியின் உண்மையான ஆர்வமும் உற்சாகமும் பல்கலை ரேங்க்குகள் வரிசையாகக் குவிய காரணமாக அமைந்தது.
எம்.ஐ.டி.யில் B.Sc Physics/Maths/Chemistry முடித்தவர்களுக்கு மட்டுமே அப்பொழுது B.Tech admission அங்கே இருந்தது...
எங்கள் கல்லூரியில் பெளதிகத் துறைக்கு மட்டுமே அங்கே வருடா வருடம் தனியாக ஒரு கோட்டா உருவாக்கியது போல் எங்கள் மாணவர்கள் அங்கே எளிதாக சென்றைடவர்.
துறைத் தலைவரைவிட நான் பாடம் நடத்துவதில் மாணவர்கள் அதிகமாய் ஆர்வம் காட்டலானார்கள். எந்த வாத்தியாராவது வராவிட்டால் என்னை அழைத்துச் சென்று அறிவியலைப் பற்றி பேசச் சொல்வார்கள்.
நானும் இதுதான் சமயம் என பிரபஞ்ச இயக்கத்திலிருந்து எடுத்துவிடுவேன். ஆகாயம், விண்வெளி, கோள்கள், பால்வளி மண்டலம், ஆண்ட்ரமீடா கேலக்ஸி, எம்80, எ89 காலக்ஸி, இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கின்றோமா....? நாம் பிறப்பிற்கு முன்னால் எங்கிருந்தோம்...? மரணத்திற்குப் பின் நிலை என்ன...? உயிர் என்றால் என்ன...? இப்படி படிப்படியாக சுவாரஸ்யமாக யோகா தவம் என்று கொண்டு வந்துவிடுவேன்...
ஏறக்குறைய என் மாணவ மாணவிகள் என் தாக்கத்தின் காரணமாக சினம் கொள்வதைத் தவிர்த்தனர். நட்பு நலம் பாராட்டினர். வீட்டில் கூட அவர்களது பெற்றோர்கள் என்னைத் தனியாகத் தேடி வந்து, "என் பையன் இப்போ ரொம்ப நல்ல பையனா மாறிட்டான்... உங்களைத் தான் சொல்றான்" என்றோ அல்லது "என் பொண்ணு இப்போ அம்மாவுக்கு சொல்லாமலே ரொம்ப உதவி செய்றா...நல்ல மாற்றம்..." என்றோ சொல்லிப் பாராட்டிவிட்டுச் செல்லும்பொழுது, "அட நம்மால் கூட 4 பேருக்கு ப்ரயோஜனமா இருக்கும் போலிருக்கே.." ன்னு ஒரு நோபல் பரிசு கிடைச்ச சந்தோஷம் கிடைக்கும்...
Science Forum ஒன்னு ஆரம்பிச்சி மாணவ மாணவிகளை முழுமையாக ஆராய்ச்சி மனப்பான்மைக்கு மாறி ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எங்கள் ஊரில் எங்கள் பேராசிரியர்களின் உதவியால் தொடங்கி வெவ்வேறு துறையைச் சார்ந்த வெவ்வேறு கல்லூரி பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் என ஒரு பெரிய பரபரப்பே பண்ணினோம்...
சென்னையிலுள்ள சில Film Society யில் மெம்பராகி விஞ்ஞான ஆராய்ச்சி டாக்குமெண்டரிகளை Audio-Visual Education என்னும் துறையையும் கையெலெடுத்துக்கொண்டு அங்கே மாதத்திற்கு இரண்டு மூன்று படங்களைத் திரையிட்டோம்....
அது ஒரு கனாக் காலம்....!
அருப்புக்கோட்டை மாணவ மாணவிகளும் எனக்கு நல்விதமாய் ஒத்துழைத்தனர். ஆனால் சென்னையில் நேர் எதிரான அனுபவம் ஏற்பட்டது.
அதுவே என்னை மேலே மேல் படிப்புப் படிக்கத்தூண்டி எண்ட்ரன்ஸ் எக்ஸாமில் நல்ல ஸ்கோர் வாங்கி சீட் பிடிக்க தூண்டுகோலாய் அமைந்து கணணித் துறைக்கு இழுத்துச் சென்றது....
இப்பொழுதும் எனக்குக் கணிப்பானியலைவிட பெளதிகமே ஆழ்மனதில் அமர்ந்திருக்கின்றது... இப்படித்தான் நமக்கு எது பிடிக்கின்றதோ அதில் ஈடுபட முடியாமல் கேவலம் சமுதாய ரெக்ககனைசைனுக்காக நாம் தடம் புரள வேண்டியிருக்கின்றது.....!
பேராசானுக்குரிய ஒரு மதிப்பும் முழு ஊதியமும் வேலை நிரந்தரமும் இருந்திட்டால் நான் ஏன் சிலிக்கான் வேலிக்குப் பயணிக்கப்போகின்றேன்...?
சிவசிவா என்று
Properties of Matter by Raveendram Krishnasamy
Heat and Thermodynamics by Raveendran Krishansamy
Electro Magnetic Theory by Raveendran Krishansamy
ABC of Electronics by Raveendran Krishanasamy
Introduction to Micro Processor by Raveendran Krishnasamy
Computer Organisation and Assembly Language Programming by RK
Industrial Electronics by Raveendran Krishnasamy
Physics in Day to Day Life by Raveendran Krishnasamy
Plasma Physics by Raveendran Krishnasamy
என்று எத்தனையோ புத்தகங்கள் படைத்திருப்பேனே.... ! என்றாவதொரு நாள் படிப்படியாய் ஐன்ஸ்டீனாய் மாறி உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருப்பேனே...!
நாலு பேருக்காக நாம் தடம் புரள வேண்டியிருக்கின்றது....வீட்டிலோ அமெரிக்காவில் பணம் சம்பாதிப்பதையே பிறவிப்பயனாய் கருதும் சமுதாயம்... அவ்வளவு ஏன் கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும் போது கூட பையன், "அமெரிக்காவா....?"
என்ன உலகமடா இது... நான் நல்லவன்; குடி இல்லை; சிகரெட் இல்லை; சூதுவாது இல்லை; கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை; கெட்ட எண்ணங்கள் எதுவும் இல்லை என்றால் தரகன் கூட ,"இது தேறாத கேஸ்..." என கமெண்ட் அடிக்கின்றானே....?
அட நான் எதையோ ஆரம்பித்து எழுத்து கன்னாபின்னா வென எங்கெங்கோ கட்டுப்பாடின்றி செல்கின்றதே....?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..
On
--
என்றென்றும்
சுதனின் விஜி
--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---
- Hide quoted text -
--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன் www.rishiraveendran.tk
"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."
Sunday, February 18, 2007
எல்லோரையும் திருப்திப்படுத்துவது எப்படி...?
On 2/18/07, Raveendran Krishnasamy wrote:
On 2/18/07, Viji wrote:
விளக்கம் த்ந்த நாயன்மாருக்கு மிகுந்த நன்றி...
ரவி அண்ணா, அந்த அத்தனை மந்த குணங்களையும் தானமாகக் கொடுத்தாலே நாம் மிகுந்த நல்லவர்களாகி விடுவோம்.
ஆனால் பல சமயங்களில் தர்ம சங்கடம் என்பார்களே அப்படியான நிலைகள் ஏற்படும் போது எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாதே!!.
>>>>>>>>>> Rishi's Reply
நம் அகமே புறம் தொடரில் உயர்தர வாழ்வு அத்தியாயம் (சென்ற மடலில் வெளியானது) மூன்றாம் பாடத்தில் அசையாத நடுநிலை என்று ஒன்றைக் குறிப்பிட்டுள்ளேனே...?
எல்லோரையும் திருப்திப்ப்டுத்திக்கொண்டிருந்தால் நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறுமா...? அதுவும் சரியாக இருக்காது....எல்லைகள் மாற மாற எல்லாமே மாறுகிறது....
மது அருந்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது என்று சொல்லிக்கொண்டே மதுக்கடைகளை அரசாங்கமே நடத்தி 'குடி'மக்களைத் திருப்திப் படுத்திக் கொள்வதைப்போல;
சினிமாவில் சிகரெட் பிடிப்பது தடை; ஆனால் சிகரெட் விற்பது தடையல்ல.
இப்படி சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருந்தால் அவரின் நட்பைத் தொடரவேண்டாம். எச்சரிக்கையாய் இருங்குள்....
என்ன உங்களுக்கு நட்பு வட்டாரம் குறையலாம்; அதனால் ஒன்றும் இழப்பு இல்லை... லாபம்தான்...
இறை நிலையுடன் மட்டும் நிலைத்திருங்கள்...
>>>>>>>>>>>>
Viji's query...
ஒருவருக்கு நல்லதெனில் இன்னொருவருக்கும் அதனால் நன்மை ஏற்படும் பட்சத்தில் சரி"...ஆனால் எதிர் மறையான விளைவுகளைக் கொண்டுவரும் சூழலுக்குள் நீங்கள் சிக்கியதில்லையோ என்னவோ? !! எனக்கு பல நேரங்களில் அப்படி நேர்ந்திருக்கின்றது....!!...
அதனால் தான் அப்படிக் கேட்டேன். ...! .
>>>>>>>>>. Rishi's Reply
எல்லா மனிதர்களும் சிக்கலில் சிக்கிக்கொள்ளத்தானே வேண்டும்... உடலில் உயிர் சிக்கிக்கொண்டிருக்கும் வரை சிக்கல்கள் தொடர்வது சகஜமே...அதிலிருந்து மீண்டு வருவது தவ வலிமையால் (இறையருள்) மட்டுமே முடியும்.
<<<<<<,
On 2/18/07, Viji
விளக்கம் த்ந்த நாயன்மாருக்கு மிகுந்த நன்றி...
ரவி அண்ணா, அந்த அத்தனை மந்த குணங்களையும் தானமாகக் கொடுத்தாலே நாம் மிகுந்த நல்லவர்களாகி விடுவோம்.
ஆனால் பல சமயங்களில் தர்ம சங்கடம் என்பார்களே அப்படியான நிலைகள் ஏற்படும் போது எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாதே!!.
>>>>>>>>>> Rishi's Reply
நம் அகமே புறம் தொடரில் உயர்தர வாழ்வு அத்தியாயம் (சென்ற மடலில் வெளியானது) மூன்றாம் பாடத்தில் அசையாத நடுநிலை என்று ஒன்றைக் குறிப்பிட்டுள்ளேனே...?
எல்லோரையும் திருப்திப்ப்டுத்திக்கொண்டிருந்தால் நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறுமா...? அதுவும் சரியாக இருக்காது....எல்லைகள் மாற மாற எல்லாமே மாறுகிறது....
மது அருந்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது என்று சொல்லிக்கொண்டே மதுக்கடைகளை அரசாங்கமே நடத்தி 'குடி'மக்களைத் திருப்திப் படுத்திக் கொள்வதைப்போல;
சினிமாவில் சிகரெட் பிடிப்பது தடை; ஆனால் சிகரெட் விற்பது தடையல்ல.
இப்படி சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருந்தால் அவரின் நட்பைத் தொடரவேண்டாம். எச்சரிக்கையாய் இருங்குள்....
என்ன உங்களுக்கு நட்பு வட்டாரம் குறையலாம்; அதனால் ஒன்றும் இழப்பு இல்லை... லாபம்தான்...
இறை நிலையுடன் மட்டும் நிலைத்திருங்கள்...
>>>>>>>>>>>>
Viji's query...
ஒருவருக்கு நல்லதெனில் இன்னொருவருக்கும் அதனால் நன்மை ஏற்படும் பட்சத்தில் சரி"...ஆனால் எதிர் மறையான விளைவுகளைக் கொண்டுவரும் சூழலுக்குள் நீங்கள் சிக்கியதில்லையோ என்னவோ? !! எனக்கு பல நேரங்களில் அப்படி நேர்ந்திருக்கின்றது....!!...
அதனால் தான் அப்படிக் கேட்டேன். ...! .
>>>>>>>>>. Rishi's Reply
எல்லா மனிதர்களும் சிக்கலில் சிக்கிக்கொள்ளத்தானே வேண்டும்... உடலில் உயிர் சிக்கிக்கொண்டிருக்கும் வரை சிக்கல்கள் தொடர்வது சகஜமே...அதிலிருந்து மீண்டு வருவது தவ வலிமையால் (இறையருள்) மட்டுமே முடியும்.
<<<<<<,
Saturday, February 17, 2007
குரு தக்ஷிணை
On 2/17/07, Viji wrote:
ரவிஅண்ணா,,,,,,
புன்மொழி/ புண்மொழி !! எதுசரி.....?!!!....குதர்க்கம் என்பது எதற்குமே உதவாது!
Rishi's Reply >>>.>>>>> அன்புள்ள சகோ,
சுடுசொற்கள் என்ற பொருளில் எழுதினேன். எனக்கும் இதில் குழப்பமே. புண் (injury) என்ற சொல்லை வைத்து சொல்கிறீர்கள். பெரியவர்களே இதை யாராச்சும் தீர்த்துவிடுங்கள்.... <<<<<<<<<<<<<<<<<<<<<
Viji's query
ஆனால் இந்த உலகத்தில் இருந்து கொண்டு....வஞ்சகம் நிறைந்த வலைக்குள் அகப்பட்டுக் கொண்டு இவைகள் அனைத் தையும் கடைப்பிடிப்பது சாத்தியமா?!!.....கொஞ்சம் விளக்குவீர்களா?!!!
Rishi's Reply >>>.>>>>>
வஞ்சகம் நிறைந்த உலகம்...? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
பாதைகள் முழுதும் கற்கள்தான்
பார்த்து நடக்கவேண்டியது நாமன்றோ....?
அதற்குத் தெளிவான, விசாலமான மனம் மட்டுமே தேவை.
நாம் தொடர்ந்த மறதியில் இருக்கிறோம்.
நாம் எப்பொழுது நம்மை மறக்கிறோம்...?
தூக்கத்தில்...
கனவு எப்பொழுது வரும்...?
தூக்கத்தில்
விழிப்பு நிலையில் கனவு கலைகிறது. நினைவின்மை கலைகிறது...
தூக்கம் விரட்டி விழிப்பு நிலையைக் கைப்பெறவேண்டும்....
எப்பொழுதும் விழிப்பு நிலை கைப்பெற வேண்டும். இது கைவரப்பெற்றால் ஒரு மனிதன் ஜெயிலில் இருந்தால் கூட அந்த சூழ்நிலையையே மாற்றும் வல்லமை கொண்டவர்களாக செயல்படுகின்றனர். சூழ்நிலையை தங்களது அகத்தால் மாற்ற வல்லவராவார்கள் இவர்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒரு சிலர் வ.உ.சி, காந்தியடிகள், வினோபா என்று ஒரு பட்டியலே இருக்கிறது....அந்தப் பட்டியலில் சமீபத்தில் அருட்தந்தை வேதாத்திரி அவர்கள்....மிகப் பெரிய ஞானி...
நான் ஜேம்ஸ் ஆலனைப் பார்த்ததில்லை; வள்ளுவரைப் பார்த்தில்லை;
வ.உ.சி,வினோபா இவர்களுடன் பழகும் வாய்ப்பும் இல்லை. ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் பழகும் அருமையான வாய்ப்பு கிட்டியது....!
அவர் என்னிடம் கேட்ட காணிக்கை என்ன தெரியுமா....?
பேராசை, கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, சினம், வஞ்சினம் ஆகிய இந்த 6 தீய குணங்களையும் என்னிடமிருந்து தனக்குத் தானமாகக் கொடுக்கும்படிக் கேட்டார்....
குரு தக்ஷிணையில் கூட தன்னலம் கருதாத பொது நலம் கருதும் பெரியவர்கள்....வள்ளுவரை இவரின் மூலம் தரிசிக்கும் வாய்ப்பு....
அந்த மகான் வாழ்க வளமுடன்...
<<<<<<<<<<<<<<<<<<<<<
ரவிஅண்ணா,,,,,,
புன்மொழி/ புண்மொழி !! எதுசரி.....?!!!....குதர்க்கம் என்பது எதற்குமே உதவாது!
Rishi's Reply >>>.>>>>> அன்புள்ள சகோ,
சுடுசொற்கள் என்ற பொருளில் எழுதினேன். எனக்கும் இதில் குழப்பமே. புண் (injury) என்ற சொல்லை வைத்து சொல்கிறீர்கள். பெரியவர்களே இதை யாராச்சும் தீர்த்துவிடுங்கள்.... <<<<<<<<<<<<<<<<<<<<<
Viji's query
ஆனால் இந்த உலகத்தில் இருந்து கொண்டு....வஞ்சகம் நிறைந்த வலைக்குள் அகப்பட்டுக் கொண்டு இவைகள் அனைத் தையும் கடைப்பிடிப்பது சாத்தியமா?!!.....கொஞ்சம் விளக்குவீர்களா?!!!
Rishi's Reply >>>.>>>>>
வஞ்சகம் நிறைந்த உலகம்...? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
பாதைகள் முழுதும் கற்கள்தான்
பார்த்து நடக்கவேண்டியது நாமன்றோ....?
அதற்குத் தெளிவான, விசாலமான மனம் மட்டுமே தேவை.
நாம் தொடர்ந்த மறதியில் இருக்கிறோம்.
நாம் எப்பொழுது நம்மை மறக்கிறோம்...?
தூக்கத்தில்...
கனவு எப்பொழுது வரும்...?
தூக்கத்தில்
விழிப்பு நிலையில் கனவு கலைகிறது. நினைவின்மை கலைகிறது...
தூக்கம் விரட்டி விழிப்பு நிலையைக் கைப்பெறவேண்டும்....
எப்பொழுதும் விழிப்பு நிலை கைப்பெற வேண்டும். இது கைவரப்பெற்றால் ஒரு மனிதன் ஜெயிலில் இருந்தால் கூட அந்த சூழ்நிலையையே மாற்றும் வல்லமை கொண்டவர்களாக செயல்படுகின்றனர். சூழ்நிலையை தங்களது அகத்தால் மாற்ற வல்லவராவார்கள் இவர்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒரு சிலர் வ.உ.சி, காந்தியடிகள், வினோபா என்று ஒரு பட்டியலே இருக்கிறது....அந்தப் பட்டியலில் சமீபத்தில் அருட்தந்தை வேதாத்திரி அவர்கள்....மிகப் பெரிய ஞானி...
நான் ஜேம்ஸ் ஆலனைப் பார்த்ததில்லை; வள்ளுவரைப் பார்த்தில்லை;
வ.உ.சி,வினோபா இவர்களுடன் பழகும் வாய்ப்பும் இல்லை. ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் பழகும் அருமையான வாய்ப்பு கிட்டியது....!
அவர் என்னிடம் கேட்ட காணிக்கை என்ன தெரியுமா....?
பேராசை, கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, சினம், வஞ்சினம் ஆகிய இந்த 6 தீய குணங்களையும் என்னிடமிருந்து தனக்குத் தானமாகக் கொடுக்கும்படிக் கேட்டார்....
குரு தக்ஷிணையில் கூட தன்னலம் கருதாத பொது நலம் கருதும் பெரியவர்கள்....வள்ளுவரை இவரின் மூலம் தரிசிக்கும் வாய்ப்பு....
அந்த மகான் வாழ்க வளமுடன்...
<<<<<<<<<<<<<<<<<<<<<
Tuesday, February 13, 2007
தேவசேனா ஆட்டோகிராஃப்
On 2/13/07, gnaniyar rasikow wrote:
இந்தக்குளத்தில் காதல் எறிந்தவர்கள் (10)
ஒரு தலைக் காதல்
எனது கல்லூரியில் படித்த அந்தப்பெண்ணிற்கு பூர்வீகம் செங்கோட்டை. அவளது தந்தை
அரசாங்க அலுவலராக திருநெல்வேலியில் வேலைபார்த்து வந்ததால் இங்கேயே அவளது குடும்பம் செட்டிலாகியது. அவளது பெயர் சமானா.
அவளது கல்லூரியில் படித்த ஒரு சீனியர் பையனை நேசித்தாள். அந்தச் சீனியர் பையன் பெயர் சுபைர். அவன் கல்லூரியில் கவிதை மேடைப்பேச்சு இலக்கியப்பற்றோடும் கிண்டல் - கேலி என்று விளையாட்டுத்தனமாகவும் திரிந்தவன்.
அந்த ஆட்டோகிராப் கூட அவனிடம் நேரடியாக சென்று வாங்க முடியாமல் தன் வகுப்பு தோழனை விட்டு தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல் வாங்கியிருக்கிறாள்.
>>>>>>>>>>Rishi' Reply இந்த இடத்தில் என் கல்லூரி வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்....
நாம் கல்ல்லூரியின் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை என் சிறு வயதிலேயே என்னை அறியாமல் பெளதிகத்தில் அளப்பரிய ஆர்வம். + 2 ல் பெளதிகத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருந்தேன்....பொறியியல் வேண்டாம் (?) என்று கூறிவிட்டு என் விருப்பப் பாடமான இயற்பியலை நிஜமாகவே நேசத்துடன் எடுத்து பயின்றேன்....
உதாரணமாக ஒரு செமஸ்டரில் Heat and Thermodynamics என்ற ஒரு பேப்பர். அதில் Heat க்கும் Temperature க்கும் உள்ள வேறுபாடு என்ன என்று ஆழ்ந்து ஆராய்ச்சி பண்ணியதில் D.S.Mathur ம் Brijlal Subrahmanyam ம் ஆடிப்போனார்கள். (அந்த செமச்டர் முழுக்க இப்படியே ஆராய்ச்சிசெய்ததலால் தேர்வில் மார்க் போனது என்பது சொல்லியா தெரியணும்...?)
கோவிலும் பெளதிகமும், கராத்தேக் கலையும் பெளதிகமும், இப்படி நிரைய ஆராய்ச்சி செய்து Physics Association ல் உரையாற்றியதில் அந்த பல்கலை முழுதும் பிரபல்யமானேன்....
இளம் விஞ்ஞானி என்றும், Hi Scientist என்றும் ,"இதோ ஐன்ஸ்டினோட வாரிசுடா...." என்றும் அழைக்கப்பட்டேன்....
முதலாம் ஆண்டு முடியும் தருவாய்.
நானும் என் நன்பர்களும் Physics Lab க்குக் கீழே நின்றுகொண்டு Meissner Effect எப்படி Super Conductivity யில் அற்புதமாய் வேலை செய்கிறது என்று விளக்கிக்கொண்டிருந்தேன்....
அப்பொழுது என் வகுப்பறைத் தோழி ஒருத்தி இன்னொரு பெண்ணுடன் எங்களை நோக்கி வந்தாள்.
(நானும் ஒன்னாப்ல இருந்து கடேசியா படிச்ச பெரிய படிப்பு வரைக்கும் எல்லாமே Co-Ed ன்னாலும் ஒரு தடவ கூட எந்தப் பெண்ணோடயும் (College வரைக்கும் தான்) பேசினதே இல்லை...ஏன்னா அப்டியே வளத்துத் தொலச்சிட்டாங்க. என்ன பண்ண...? (அப்றமா மேல படிக்க Univ அப்றம் அதுக்கு மேல ஒரு Ph.D join பண்ணி டிஸ்கண்ட்யூ பண்ணி அப்றம் அதுக்கு மேல ஒரு பெரிய இடத்ல படிப்பு ன்னு போனப்பதான் சரி பெண்களோட பேசலாம் போல.... ன்னே தெரிஞ்சது. ஆனாலும் கூச்சம் மட்டும் போகவே இல்லை... கொஞ்சம் பரவாயில்லாம முன்னேறியாச்சி...
அங் கதைய எங்க விட்டேன்....?
என்னோட கிளாஸ்மேட் பொண்ணு, "இந்த அக்கா உங்களோட பேசணுமாம்.." னு இங்கிலிபீசுல ரொம்ப ஸ்டைலா சொல்லிச்சு.
அவங்கள நான் பாத்த மாதிரியே ஞாபகமில்லை.
கிளாஸ்மேட் பொன்ணுதான், " இவங்க III Year Maths. உங்க ஆட்டோகிராஃப் வேணுமாம்...'னு சொன்னாங்க. எதோ பேர் சொன்னாங்க..சரியா எனக்கு சுழயல்ல.
எனக்கோ ஒரே உற்சாகமும் படபடப்புமா இருந்துச்சு.... பசங்க எல்லாம், "மாப்ளே உனக்கு மச்சம் டா...." னு சொன்னாங்க...
நானும் அவங்க ஆட்டோகிராஃப் ல ," முகம் நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகம் நக நட்ப்தே நட்பு..." னு எழுதினேன். (இது மட்டும் இன்னும் பசுமையா ஞாபகம் வருது...)
அடுத்த செமஸ்டர் வரைக்கும் ஏன் ஃபைனல் வரைக்கும் வாத்தியார் வரைக்கும் ஒரே கேலிதான்...!
கணக்கும் பெளதிகமும் எனக்கு இலகுவாக இருந்தன. படிக்காமலேயே மார்க் வாங்கக்கூடிய பாடங்கள். என்னைப் போல சோம்பேறிகளுக்கு அதுதான் எளிது.
கிராமத்திலிருந்து தமிழ் மீடியம் படித்து வந்தவன். கல்லூரியில் நுழையவும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாம் ஆங்கிலம். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாந்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்...(!?). ஆனாலும் இவர்கள் ஆங்கிலத்தில் பண்ணும் அலப்பறை என்னை வெகுவாய் கவலையடையச் செய்தது....
- Hide quoted text -
>>>>>>>>>>>>......
பின் அந்த சுபைரும் சுமார் ஒரு வருடம் கழித்து அந்த கல்லூரிக்கு ஒரு கவிதைகள் விழா சம்பந்தமாக வந்தபொழுது தன் காதல் சொல்லும் தருணம் இதுதானென்று நினைத்து அவனிடம் தன் வகுப்புத் தோழர்கள் மூலமாக அவள் தன் காதலைத் தெரியப்படுத்த சுபைர் திருப்தியளிக்கும் விதமாய் அவளுக்கு பதிலளிக்கவில்லை.
அவளுடைய காதலின் தீவிரம் அறிந்து அவளது வகுப்புத் தோழன் சுபைரிடம் வந்து அவள் அவனைத் தீவிரமாக விரும்புவதாகவும் உணரச்சிவசப்பட்டு தவறாக முடிவு கூட எடுத்துவிடக்கூடும் என்றும் கூறி சுபைரை அவள் சந்திக்க விரும்புவதாகவும் கூறினான்.
ஆனால் சுபைரோ இன்னொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கின்றான் அவளிடம் தன் காதலை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிப்புகளில் போராடிக் கொண்டிருந்தான்
காதலை எடுத்துச் சொன்னால்
மறுத்திடுவாளோ என்று
அவள் காதலிப்பாள் என்ற
கற்பனையிலேயே
உயிர்வாழ்கின்றான்.
அந்தச் சூழ்நிலையில் அவனுக்கு தெரியாலையே ஒரு பெண் அவனை தீவிரமாக காதலிப்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
காதலித்த பெண்ணுக்காய்
காத்திருந்தான் !
காத்திருந்து ஒருத்தி
காதலித்தாள் !
சுபைரும் அவளை ஒரு நண்பனின் வீட்டில் வைத்து சந்தித்து தான் வேறொரு பெண்ணைக் காதலிக்கின்றேன் என்று முகத்திற்கு நேராக கூறினால் எங்கே மனமொடிந்து தவறான முடிவு எடுத்து விடுவாளோ என்று அவளிடம் நாசூக்காக தனக்கு பல பொறுப்பு இருப்பதாகவும் ஆகவே வாழ்க்கையில் செட்டில் ஆக நாட்கள் ஆகும் எனவும் சில சால்ஜாப்பு காரணங்களை கூறி காலம் சம்மதித்தால் பார்ப்போம் என்று தெளிவாய்க் குழப்பி விட்டு சென்றுவிட்டான்.
பின் வெளிநாட்டில் சுபைருக்கு வேலை கிடைத்துவிட அவன் பறந்துவிட்டான். ஆனால் சமானாவின் காதலோ கசாப்புக்கடைக்குள் சிக்குண்ட ஆடாய் தவித்துக்கொண்டிருந்தது.
சுபைர் சொல்லிவிட்டுப்போன - காலம் சம்மதித்தால் பார்க்கலாம் - என்ற ஒற்றை வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவன் தன்னை காதலிப்பதாக நினைத்துக்கொண்டு அவனது வீட்டிற்கு தொலைபேசி அடிக்கடி செய்து பேசியிருக்கின்றாள் சுபைரின் நண்பனிடம் அவன் எப்பொழுது திரும்பி வருவான் என்று நச்சரித்திருக்கிறாள்.
இதற்கிடையில் சமானாவின் வீட்டில் அவளின் திருமண ஏற்பாடு செய்யப்பட்டபொழுது அதனை ஒதுக்கி வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையைக் கூற அவர்களோ சமானாவை அவமானப்படுத்தி அவளின் கண்ணீரை ஒட்டு மொத்தமாய் உருவியிருக்கின்றார்கள். அவளும் முடிந்தவரை போராடியிருக்கின்றாள். சுபைரை தொடர்பு கொள்ள அவளால் முடியவில்லை.
இறுதியாக அவள் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்திருக்கின்றாள். இன்னும் 2 மாதங்களில் அவளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.
கடைசியாக அவள் சுபைருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கின்றாள்.
வாழ்வின் எல்லா சந்தர்ப்பத்திலும் சுபைரைக் காண விரும்பியவள்
தன் வாழ்நாளில் இனிமேல் எந்த சந்தர்ப்பத்திலும் இறந்து போனால் கூட அவனை சந்திக்கவே விரும்பவில்லை என்று கடிதம் எழுதி யிருக்கின்றாள்.
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்த சுபைர் அதனை படித்து மிகவும் நொறுங்கிப்போய்விட்டான். தன்னால் ஒரு பெண் இந்த அளவிற்கு மனம் கொதித்துப் போயிருக்கின்றாள் என்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளைக் கண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என துடித்திருக்கின்றான் .
ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள அவளை மறுபடியும் சென்று சந்திப்பது புத்திசாலித்தனமல்ல என நினைத்து அமைதியாயிருந்திருக்கின்றான் மனதில் எழுந்த காயங்களின் சுனாமி அலைகளை தனக்குள்ளே வாங்கிக்கொண்டு..
அவள் தவறான முடிவு எடுத்துவிடக்கூடாதென்று அவளின் காதலை நாசூக்காய் தவிர்த்த சுபைரின் மீது தவறு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் அந்தப் பெண்ணிடம் தான் இன்னொரு பெண்ணைக் காதலிப்பதாக முதலிலையே கூறியிருந்தால் அவள் தனது காதலை இந்த அளவிற்கு வளர்த்திருக்கமாட்டாள்.
விளையாடிக் காதலியுங்கள்
தயவுசெய்து
காதலோடு விளையாடாதீர்கள்
(இன்னமும் காதலிப்போம்)
- ரசிகவ் ஞானியார்
--
K.Gnaniyar
Dubai
www.nilavunanban.blogspot.
இந்தக்குளத்தில் காதல் எறிந்தவர்கள் (10)
ஒரு தலைக் காதல்
எனது கல்லூரியில் படித்த அந்தப்பெண்ணிற்கு பூர்வீகம் செங்கோட்டை. அவளது தந்தை
அரசாங்க அலுவலராக திருநெல்வேலியில் வேலைபார்த்து வந்ததால் இங்கேயே அவளது குடும்பம் செட்டிலாகியது. அவளது பெயர் சமானா.
அவளது கல்லூரியில் படித்த ஒரு சீனியர் பையனை நேசித்தாள். அந்தச் சீனியர் பையன் பெயர் சுபைர். அவன் கல்லூரியில் கவிதை மேடைப்பேச்சு இலக்கியப்பற்றோடும் கிண்டல் - கேலி என்று விளையாட்டுத்தனமாகவும் திரிந்தவன்.
அந்த ஆட்டோகிராப் கூட அவனிடம் நேரடியாக சென்று வாங்க முடியாமல் தன் வகுப்பு தோழனை விட்டு தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல் வாங்கியிருக்கிறாள்.
>>>>>>>>>>Rishi' Reply இந்த இடத்தில் என் கல்லூரி வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்....
நாம் கல்ல்லூரியின் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை என் சிறு வயதிலேயே என்னை அறியாமல் பெளதிகத்தில் அளப்பரிய ஆர்வம். + 2 ல் பெளதிகத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருந்தேன்....பொறியியல் வேண்டாம் (?) என்று கூறிவிட்டு என் விருப்பப் பாடமான இயற்பியலை நிஜமாகவே நேசத்துடன் எடுத்து பயின்றேன்....
உதாரணமாக ஒரு செமஸ்டரில் Heat and Thermodynamics என்ற ஒரு பேப்பர். அதில் Heat க்கும் Temperature க்கும் உள்ள வேறுபாடு என்ன என்று ஆழ்ந்து ஆராய்ச்சி பண்ணியதில் D.S.Mathur ம் Brijlal Subrahmanyam ம் ஆடிப்போனார்கள். (அந்த செமச்டர் முழுக்க இப்படியே ஆராய்ச்சிசெய்ததலால் தேர்வில் மார்க் போனது என்பது சொல்லியா தெரியணும்...?)
கோவிலும் பெளதிகமும், கராத்தேக் கலையும் பெளதிகமும், இப்படி நிரைய ஆராய்ச்சி செய்து Physics Association ல் உரையாற்றியதில் அந்த பல்கலை முழுதும் பிரபல்யமானேன்....
இளம் விஞ்ஞானி என்றும், Hi Scientist என்றும் ,"இதோ ஐன்ஸ்டினோட வாரிசுடா...." என்றும் அழைக்கப்பட்டேன்....
முதலாம் ஆண்டு முடியும் தருவாய்.
நானும் என் நன்பர்களும் Physics Lab க்குக் கீழே நின்றுகொண்டு Meissner Effect எப்படி Super Conductivity யில் அற்புதமாய் வேலை செய்கிறது என்று விளக்கிக்கொண்டிருந்தேன்....
அப்பொழுது என் வகுப்பறைத் தோழி ஒருத்தி இன்னொரு பெண்ணுடன் எங்களை நோக்கி வந்தாள்.
(நானும் ஒன்னாப்ல இருந்து கடேசியா படிச்ச பெரிய படிப்பு வரைக்கும் எல்லாமே Co-Ed ன்னாலும் ஒரு தடவ கூட எந்தப் பெண்ணோடயும் (College வரைக்கும் தான்) பேசினதே இல்லை...ஏன்னா அப்டியே வளத்துத் தொலச்சிட்டாங்க. என்ன பண்ண...? (அப்றமா மேல படிக்க Univ அப்றம் அதுக்கு மேல ஒரு Ph.D join பண்ணி டிஸ்கண்ட்யூ பண்ணி அப்றம் அதுக்கு மேல ஒரு பெரிய இடத்ல படிப்பு ன்னு போனப்பதான் சரி பெண்களோட பேசலாம் போல.... ன்னே தெரிஞ்சது. ஆனாலும் கூச்சம் மட்டும் போகவே இல்லை... கொஞ்சம் பரவாயில்லாம முன்னேறியாச்சி...
அங் கதைய எங்க விட்டேன்....?
என்னோட கிளாஸ்மேட் பொண்ணு, "இந்த அக்கா உங்களோட பேசணுமாம்.." னு இங்கிலிபீசுல ரொம்ப ஸ்டைலா சொல்லிச்சு.
அவங்கள நான் பாத்த மாதிரியே ஞாபகமில்லை.
கிளாஸ்மேட் பொன்ணுதான், " இவங்க III Year Maths. உங்க ஆட்டோகிராஃப் வேணுமாம்...'னு சொன்னாங்க. எதோ பேர் சொன்னாங்க..சரியா எனக்கு சுழயல்ல.
எனக்கோ ஒரே உற்சாகமும் படபடப்புமா இருந்துச்சு.... பசங்க எல்லாம், "மாப்ளே உனக்கு மச்சம் டா...." னு சொன்னாங்க...
நானும் அவங்க ஆட்டோகிராஃப் ல ," முகம் நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகம் நக நட்ப்தே நட்பு..." னு எழுதினேன். (இது மட்டும் இன்னும் பசுமையா ஞாபகம் வருது...)
அடுத்த செமஸ்டர் வரைக்கும் ஏன் ஃபைனல் வரைக்கும் வாத்தியார் வரைக்கும் ஒரே கேலிதான்...!
கணக்கும் பெளதிகமும் எனக்கு இலகுவாக இருந்தன. படிக்காமலேயே மார்க் வாங்கக்கூடிய பாடங்கள். என்னைப் போல சோம்பேறிகளுக்கு அதுதான் எளிது.
கிராமத்திலிருந்து தமிழ் மீடியம் படித்து வந்தவன். கல்லூரியில் நுழையவும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாம் ஆங்கிலம். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாந்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்...(!?). ஆனாலும் இவர்கள் ஆங்கிலத்தில் பண்ணும் அலப்பறை என்னை வெகுவாய் கவலையடையச் செய்தது....
- Hide quoted text -
>>>>>>>>>>>>......
பின் அந்த சுபைரும் சுமார் ஒரு வருடம் கழித்து அந்த கல்லூரிக்கு ஒரு கவிதைகள் விழா சம்பந்தமாக வந்தபொழுது தன் காதல் சொல்லும் தருணம் இதுதானென்று நினைத்து அவனிடம் தன் வகுப்புத் தோழர்கள் மூலமாக அவள் தன் காதலைத் தெரியப்படுத்த சுபைர் திருப்தியளிக்கும் விதமாய் அவளுக்கு பதிலளிக்கவில்லை.
அவளுடைய காதலின் தீவிரம் அறிந்து அவளது வகுப்புத் தோழன் சுபைரிடம் வந்து அவள் அவனைத் தீவிரமாக விரும்புவதாகவும் உணரச்சிவசப்பட்டு தவறாக முடிவு கூட எடுத்துவிடக்கூடும் என்றும் கூறி சுபைரை அவள் சந்திக்க விரும்புவதாகவும் கூறினான்.
ஆனால் சுபைரோ இன்னொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கின்றான் அவளிடம் தன் காதலை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிப்புகளில் போராடிக் கொண்டிருந்தான்
காதலை எடுத்துச் சொன்னால்
மறுத்திடுவாளோ என்று
அவள் காதலிப்பாள் என்ற
கற்பனையிலேயே
உயிர்வாழ்கின்றான்.
அந்தச் சூழ்நிலையில் அவனுக்கு தெரியாலையே ஒரு பெண் அவனை தீவிரமாக காதலிப்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
காதலித்த பெண்ணுக்காய்
காத்திருந்தான் !
காத்திருந்து ஒருத்தி
காதலித்தாள் !
சுபைரும் அவளை ஒரு நண்பனின் வீட்டில் வைத்து சந்தித்து தான் வேறொரு பெண்ணைக் காதலிக்கின்றேன் என்று முகத்திற்கு நேராக கூறினால் எங்கே மனமொடிந்து தவறான முடிவு எடுத்து விடுவாளோ என்று அவளிடம் நாசூக்காக தனக்கு பல பொறுப்பு இருப்பதாகவும் ஆகவே வாழ்க்கையில் செட்டில் ஆக நாட்கள் ஆகும் எனவும் சில சால்ஜாப்பு காரணங்களை கூறி காலம் சம்மதித்தால் பார்ப்போம் என்று தெளிவாய்க் குழப்பி விட்டு சென்றுவிட்டான்.
பின் வெளிநாட்டில் சுபைருக்கு வேலை கிடைத்துவிட அவன் பறந்துவிட்டான். ஆனால் சமானாவின் காதலோ கசாப்புக்கடைக்குள் சிக்குண்ட ஆடாய் தவித்துக்கொண்டிருந்தது.
சுபைர் சொல்லிவிட்டுப்போன - காலம் சம்மதித்தால் பார்க்கலாம் - என்ற ஒற்றை வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவன் தன்னை காதலிப்பதாக நினைத்துக்கொண்டு அவனது வீட்டிற்கு தொலைபேசி அடிக்கடி செய்து பேசியிருக்கின்றாள் சுபைரின் நண்பனிடம் அவன் எப்பொழுது திரும்பி வருவான் என்று நச்சரித்திருக்கிறாள்.
இதற்கிடையில் சமானாவின் வீட்டில் அவளின் திருமண ஏற்பாடு செய்யப்பட்டபொழுது அதனை ஒதுக்கி வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையைக் கூற அவர்களோ சமானாவை அவமானப்படுத்தி அவளின் கண்ணீரை ஒட்டு மொத்தமாய் உருவியிருக்கின்றார்கள். அவளும் முடிந்தவரை போராடியிருக்கின்றாள். சுபைரை தொடர்பு கொள்ள அவளால் முடியவில்லை.
இறுதியாக அவள் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்திருக்கின்றாள். இன்னும் 2 மாதங்களில் அவளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.
கடைசியாக அவள் சுபைருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கின்றாள்.
வாழ்வின் எல்லா சந்தர்ப்பத்திலும் சுபைரைக் காண விரும்பியவள்
தன் வாழ்நாளில் இனிமேல் எந்த சந்தர்ப்பத்திலும் இறந்து போனால் கூட அவனை சந்திக்கவே விரும்பவில்லை என்று கடிதம் எழுதி யிருக்கின்றாள்.
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்த சுபைர் அதனை படித்து மிகவும் நொறுங்கிப்போய்விட்டான். தன்னால் ஒரு பெண் இந்த அளவிற்கு மனம் கொதித்துப் போயிருக்கின்றாள் என்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளைக் கண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என துடித்திருக்கின்றான் .
ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள அவளை மறுபடியும் சென்று சந்திப்பது புத்திசாலித்தனமல்ல என நினைத்து அமைதியாயிருந்திருக்கின்றான் மனதில் எழுந்த காயங்களின் சுனாமி அலைகளை தனக்குள்ளே வாங்கிக்கொண்டு..
அவள் தவறான முடிவு எடுத்துவிடக்கூடாதென்று அவளின் காதலை நாசூக்காய் தவிர்த்த சுபைரின் மீது தவறு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் அந்தப் பெண்ணிடம் தான் இன்னொரு பெண்ணைக் காதலிப்பதாக முதலிலையே கூறியிருந்தால் அவள் தனது காதலை இந்த அளவிற்கு வளர்த்திருக்கமாட்டாள்.
விளையாடிக் காதலியுங்கள்
தயவுசெய்து
காதலோடு விளையாடாதீர்கள்
(இன்னமும் காதலிப்போம்)
- ரசிகவ் ஞானியார்
--
K.Gnaniyar
Dubai
www.nilavunanban.blogspot.
Subscribe to:
Posts (Atom)