ரவிஅண்ணா,,,,,,
புன்மொழி/ புண்மொழி !! எதுசரி.....?!!!....குதர்க்கம் என்பது எதற்குமே உதவாது!
Rishi's Reply >>>.>>>>> அன்புள்ள சகோ,
சுடுசொற்கள் என்ற பொருளில் எழுதினேன். எனக்கும் இதில் குழப்பமே. புண் (injury) என்ற சொல்லை வைத்து சொல்கிறீர்கள். பெரியவர்களே இதை யாராச்சும் தீர்த்துவிடுங்கள்.... <<<<<<<<<<<<<<<<<<<<<
Viji's query
ஆனால் இந்த உலகத்தில் இருந்து கொண்டு....வஞ்சகம் நிறைந்த வலைக்குள் அகப்பட்டுக் கொண்டு இவைகள் அனைத் தையும் கடைப்பிடிப்பது சாத்தியமா?!!.....கொஞ்சம் விளக்குவீர்களா?!!!
Rishi's Reply >>>.>>>>>
வஞ்சகம் நிறைந்த உலகம்...? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
பாதைகள் முழுதும் கற்கள்தான்
பார்த்து நடக்கவேண்டியது நாமன்றோ....?
அதற்குத் தெளிவான, விசாலமான மனம் மட்டுமே தேவை.
நாம் தொடர்ந்த மறதியில் இருக்கிறோம்.
நாம் எப்பொழுது நம்மை மறக்கிறோம்...?
தூக்கத்தில்...
கனவு எப்பொழுது வரும்...?
தூக்கத்தில்
விழிப்பு நிலையில் கனவு கலைகிறது. நினைவின்மை கலைகிறது...
தூக்கம் விரட்டி விழிப்பு நிலையைக் கைப்பெறவேண்டும்....
எப்பொழுதும் விழிப்பு நிலை கைப்பெற வேண்டும். இது கைவரப்பெற்றால் ஒரு மனிதன் ஜெயிலில் இருந்தால் கூட அந்த சூழ்நிலையையே மாற்றும் வல்லமை கொண்டவர்களாக செயல்படுகின்றனர். சூழ்நிலையை தங்களது அகத்தால் மாற்ற வல்லவராவார்கள் இவர்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒரு சிலர் வ.உ.சி, காந்தியடிகள், வினோபா என்று ஒரு பட்டியலே இருக்கிறது....அந்தப் பட்டியலில் சமீபத்தில் அருட்தந்தை வேதாத்திரி அவர்கள்....மிகப் பெரிய ஞானி...
நான் ஜேம்ஸ் ஆலனைப் பார்த்ததில்லை; வள்ளுவரைப் பார்த்தில்லை;
வ.உ.சி,வினோபா இவர்களுடன் பழகும் வாய்ப்பும் இல்லை. ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் பழகும் அருமையான வாய்ப்பு கிட்டியது....!
அவர் என்னிடம் கேட்ட காணிக்கை என்ன தெரியுமா....?
பேராசை, கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, சினம், வஞ்சினம் ஆகிய இந்த 6 தீய குணங்களையும் என்னிடமிருந்து தனக்குத் தானமாகக் கொடுக்கும்படிக் கேட்டார்....
குரு தக்ஷிணையில் கூட தன்னலம் கருதாத பொது நலம் கருதும் பெரியவர்கள்....வள்ளுவரை இவரின் மூலம் தரிசிக்கும் வாய்ப்பு....
அந்த மகான் வாழ்க வளமுடன்...
<<<<<<<<<<<<<<<<<<<<<
No comments:
Post a Comment