அன்புள்ள அர்ஜுன் அம்மா அவங்களுக்கு,
எனக்கும் இது மாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்கு... ஆனா கொஞ்சம் வித்தியாசம்...
நான் ஜப்பான் நாட்டு மேல என்னோட சின்ன வயசுலிருந்தே ஒரு தீராத காதல். அவங்களோட சுறுசுறுப்பு... பணிவு, மரியாதை, தவமும் புத்த மதக்கோட்பாடுகளும், அகிரா குரசாவாவின் படங்களும் ரொம்பவே கவர்ந்தன. அதனால அந்த மொழியக் கத்துக்கணும்னு போய் சேர்ந்தேன்...
அங்கின பெரியவங்கள்ளாம் வரலாம். எல்லா Software Company யில இருந்தும் அனுப்பியிருந்தாங்க... அந்த மேடம் எப்பப் பாத்தாலும் என்னயே கேள்வி கேட்டாங்க... ஏன்னா நா மூணாப்ல யே பாடத்தக் கவனிக்காம அணில் நுழைஞ்சத வேடிக்கப் பாத்தது அவங்களுக்கு தெரிஞ்சுடுச்சோ என்னவோ...?அங்கன நெறைய பெண் பிள்ளைகளும் இருந்தாங்க. காலேஜ் படிக்றவங்கள்ளாம் இருந்தாங்க...
இதென்னடா பாதரவே...? நம்மல நிம்மதியா யிருக்க விடமாட்டாய்ங்க போலிருக்கேனு நெனச்சேன்... ஆபீஸ்லதான் ஒரே போர் னா அட இங்கன கூடவா...? எப்டிட்ரா எஸ்கேப் ஆறது ன்னு யோசிச்ச்சேன்...
அவங்க எதோ சொல்றா மாதிரியே இருக்கும் ... எனக்கோ நம்ம பாக்யராஜ் படத்ல வர்ர மாரி, "ஏ கெள மீ... எ..கிஸ்ஸான்...ரகு தாத்தா..." (எனக்கு ஹிந்தி தெரியாதுங்க பெரியவங்களே...) இது மாரி தான் என்னோட படிப்பு இருந்துச்சு.
அப்றம் என்ன... நாயித்துக் கிழமை காலையில 8 மணிக்குத்தான் எப்பவும் கிளாஸ் ஆரம்பிக்கும்... அதனால நான் லேட்டா போனேன்... என்னோட ஃபிரண்டு போன் பண்ணி சொல்லிடுவான்... மாப்ள இன்னிக்கு டீச்சர் லீவுடா... வேற டீச்சர் வந்துரக்காகடா...கேள்வி எல்லாம் கிடையாதுடா... சும்மா தைரியமா வா..." என்றான்.
சரி ன்னு கிளாசுக்குப் போனா அதே டீச்சரே 70 MM ல சிரிக்கிறாங்க என்னப் பாத்து... எனக்கோ பக் பக் குனு ஆய்டிச்சு...
அன்னிக்கு எதோ தேதிகளை ஜப்பான் மொழியில எழுதிக் காட்டினாங்க. உடனே என்னப் பாத்து என்னோட டேட் ஆஃப் பர்த் என்னன்னு கேட்டாங்க...ஏன்னா அதுக்கும் காரணம் இருக்கு...
அப்ப (2003) நான் தாடி வெச்சி வெள்ளை ஜிப்பா போட்டு கழுத்ல ஒரு ருத்ராட்சம் போட்டு புருவ மத்தியில சின்னதா வட்ட வடிவுல ஒரு குங்குமப் பொட்டு வெச்சு காயகல்பம், தவம் னு பண்ணி கொஞ்சம் முகத்ல தேஜஸ் சேத்து ஒரு மார்க்கமாத்தான் இருந்தேனா... நான் எதோ ஹிமாலய சாமியார் னு நெனச்சுக் கேட்டாங்க...
அதுவும் காலேஜ் பொண்ணுங்கள்ளாம் என்னப் பாத்து சிரிக்றாங்க...இல்ல நானும் இந்த அண்ணா விட (என்னவிட பெரிய பெரியவங்கள்ளாம் வயசுலயும் சரி பதவியலும் சரி ஆண் பெண்ணுனு வந்திருந்தாங்க...Infosys, Satyam, இப்டி நிரைய கம்பெனி) சின்னப்பையந்தான் னு சொன்னா ஆரு நம்ப மாட்டாங்க.
நானும் ஜப்பான் மொழியில என்னோட டேட் ஆஃப் பெர்த் சொல்ல ஆரம்பிச்சேன். மொதல்ல தேதி கேட்டாங்க
15 னு சொன்னேன்...
அப்றம் மாசம் கேட்டாங்க...
ஆகஸ்டு ன்னு சொன்னேன்...
கிளாஸ்ல எல்லாருமே என்னயவே பாக்றாங்க.... கமெண்ட்ஸ், "ஆஹா சுதந்திரத் தினத்தன்னிக்குப் பொறந்த பய புள்ளடான்னு சொன்னாங்க...
அப்றம் வருஷம் கேட்டாங்க....அட்லீஸ்ட் நாகரீகமா அத யாரும் கேக்க மாட்டாங்க... ஆனா அந்த டீச்சருக்கோ என்ன எப்பவுமே ஒரு வழி பண்ணிட்டே இருப்பாங்க... நம்மள டீ.வி பெட்டி மாதிரி ஒரு எந்டெர்டெய்ன்மெண்ட்டா இல்ல நம்ம "ஙே..." ன்னு முழிக்றதப் பாத்தா காமெடி பண்ணனும் னு தோணுதோ இல்ல நம்ம கெரகமா ன்னு தெரியல....
இப்ப கிளாஸே பின் ட்ராப் சைலண்ட்... என்னோட பிறந்த வருஷம் தெரிஞ்சுக்கனும்னு அததன ஆர்வம் அல்லாருக்குமே...
நான் சொன்னேன்... 1947 னு...
எல்லோருமே கொல்னு சிரிச்சிட்டாங்க... டீச்சர் உட்பட...!. அன்னியலிருந்து நம்மள் அந்த ஜப்பான் கிளாஸ்ல எப்பவுமே ஏய்... சுதந்திரம்... ஏய் சுதந்திரம் னு சின்னப் புள்ளக எல்லாம் கேலி பண்ண ஆரம்பிச்சுடுச்சு...
இப்டித்தான் ரவீந்திரன் சுதந்திரன் ஆனான்... என்னத்தச் சொல்ல... நம்ம கெரகம் அப்டி.....!
அப்றம் ஒரு ஜப்பான் மொழியில கட்டுரைப் போட்டி இருந்துச்சு... அதுல நம்ம பிளாஸபி யை ஒரு 10 பக்கத்துக்கு எடுத்துவிட்டதுல அல்லாருக்கும் செம தலவலி ... யாருக்கும் எதுவுமே புரியலியாம்... அப்றம் கடைசியில அந்த போட்டி கேன்சல் னு நோட்டீசு போடுல் போட்டாங்க...
அட கெரகமே... அதுல ஜெயிச்சுருந்தா இன்ந்நேரம் ஜப்பான் டூர் போயி அங்கன இருக்ற புத்த பிட்சுக்கள ஒரு வழி பண்ணலாமுன்னுப் பாத்தா இப்டி ஆய்டிச்சே..னு நெனுச்சுக்கிட்டே நோட்டீசு போடயே "ஙே" னு பாத்துட்ருந்தேன்..