//எவர் ஒருவர் கடவுளை உணர்ந்திருக்கிறாரோ, அவரே குருநாதராவார்//
இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?
அதை நாம் அறிவதெப்படி?
ரிஷியின் பதில்....
>>>>>>>>. தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ எக்காலத்திலும் எண்ணம் சொல் செயலில் யாரொருவர் துன்பம் இல்லாமல் பார்த்துக்கொள்கின்றனரோ அவர் குருவிற்குரிய தகுதியினை அடைந்தவராவார். அசையாத நடுநிலை, அளவற்ற பொறுமை, நிஷ்காம்ய கர்மம் ஆகிய குணங்கள் அடிப்படையாய் அவரிடம் இருப்பவர் எவரோ அவர் குரு..
====================================================================================
Raveendran Krishnasamy
to nambikkai@googlegroups.com
date Sep 28, 2007 3:38 AM
subject Re: [NAMBIKKAI] Re: Today's Thought
mailed-by gmail.com
On 9/27/07, Tthamizth Tthenee
திரு ரவீந்த்ரன் கிருஷ்ணஸ்வாமி அவர்களே
அப்படியானால் கணிதம் ,அல்லது தமிழ், அல்லது ஆங்கிலம்
அல்லது வேறு ஏதாவது கற்றுக் கொடுக்கும் அறிஞ்ஞர்கள்
குருஸ்தானத்தை அடையமுடியாதா,அல்லது
குரு என்று அழைக்கப்படக் கூடாதவரா.....?
>>>>>...ரிஷியின் பதில்... >.>>>>>>>
எந்தப் பாடத்தினை போதிப்பவரானாலும் இதைக் கடைபிடிப்பவரே குருவாக இருக்க முடியும்.... அவ்விதம் இல்லாத பட்சத்தில் அது ஊதியத்திற்கான ஒரு வேலையாக மட்டுமே இருக்க முடியும்.... கடவுளை அறியத் தேவையில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லா குணங்கள் இன்றியமையாதவை ஒரு குருவிற்கு...
உதாரணமாக எனக்கு எட்டாம் வகுப்பில் கணிதம் சொல்லிக் கொடுத்த பால்ராஜ் என்ற வாத்தியார். அவருக்கு கடவுள் நம்பிக்கை அறவே இல்லை. ஆனால் நேர்மைவாதி. தன் கடமையைச் செவ்வனே செய்தார். தன் வேலையை பிடித்தமானதாக்கிக் கொண்டதனால் என்னைப் போன்ற மக்கு மாணவர்களெல்லாம் கணிதத்தில் 100 மார்க்குகள் வாங்க முடிந்தது. 8 ஆம் வகுப்பு வரை கணிதம் என்றாலே எனக்கு அலர்ஜி. அதுவும் எங்க அம்மா ஒரு கணித ஆசிரியராக இருந்தும் எனக்கு கணிதம் அலர்ஜி....
இத்தனைக்கும் அவர் பாடம் நடத்தும் விதம் ஒன்றும் இதமாக இருக்காது. எப்பொழுது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவருடைய வகுப்பு மிகவும் உற்சாகமாக செல்லும். நேரம் போவதே தெரியாது. கணக்கைச் சொன்னதும் இங்கே நோட்டில் போட்டு விடை சொல்லும் வேகம் அவர் ஏற்படுத்திட்டார்.
"நீ உருப்பட மாட்டாய்.... ஃபெயிலாகிவிடுவாய்...." என்று ஒரு மக்கு மாணவனை சபிப்பார். அந்த மாணவன்தான் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் 72 மார்க்குகள் வாங்கி கடைசி மாணவனாய் பாசானான் கணிதத்தில்...! நாங்கள் படித்ததோ அரசாங்க உயர்நிலைப் பள்ளி. அதுவும் ஒரு குக் கிராமத்தில்.... கணிதத்தில் மட்டுமே எங்களால் ஒழுங்காய் படிக்க முடிந்தது...
எங்காவது வரலாறு & புவியியலில் ஃபெயில் ஆன சரிதம் உண்டா...? எங்கள் பாடசாலையில் நடந்தது... நானும் வெறும் 39 மார்க்குகள் வாங்கி ஜஸ்ட் பாஸ்.... அவ்ளோ தான்.... ஒரே பாடசாலை... பெரும்பாலும் கணக்கில்தான் விழுவார்கள்... ஆனால் நாங்களோ வரலாறு & புவியியலில் சறுக்கினோம்.
இதில் கடவுள் நம்பிக்கையே இல்லாத அந்த கணக்கு வாத்தியார் தான் என்னைப் பொறுத்தவரை குரு....தன் கடமையை தெளிவாய் செய்தார்.... அநீதி கண்டு கொதிக்கும் அந்த குணம்.... சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லா அந்த நிலை.... தன் ஒவ்வொரு மாணவனும் கணக்கில் புலியாக வேண்டும் என்ற அந்த சுயநலமில்லா எண்ணம்.... மாணவர்களின் நலன் கருதி ஆசரியர்களுடன் எங்களுக்காக விவாதித்த அந்த மாமனிதரை இந்தக் கணத்திலும் நினைவு கூர்கின்றேன்...
வெறும் SSLC மட்டுமே முடித்துவிட்டு secondary Grade டீச்சராகவே தன் பணியினைத் தொடர்ந்தார், தன் முயற்சியால் B.Sc BT முடித்தார்... அப்படியே M.Sc தபாலில் முடித்தார்.... அக்கால கட்டத்தில் இவையெல்லாம் எட்ட முடியா உயரத்திலிருந்தன... 8 டூ 10 வரை... அவரிடம் பயின்ற கணிதமே System Simulation வரை கை கொடுக்க அடிப்படையாக அமைந்தது....
அவரிடம் ஆங்கிலமும் 9 B ல் பயின்றேன். ஆங்கில இலக்கணத்திற்கும் ஆங்கில பாடத்திற்கும் அவரே இன்சார்ஜ். ஏனெனில் யார் கிளாஸ் வாத்தியாரோ அவரே ஆங்கிலம் எடுக்கவேண்டும் என்ற எழுதப்படாத ஒரு சட்டம் அந்த ஸ்கூலில், அதுவும் Excellent ஆய் அமைந்தது.... குறிப்பாக ஆங்கிலக் கட்டுரையை மனப்பாடம் செய்தே எழுதுவது வழக்கம்... ஆனால் அவர் ஒருவரே சொந்தமாக ஆங்கிலத்தில் எழுத எங்களை ஊக்குவித்தார். அதிலும் அனைவரும் நல்லவிதமாய் வெளியேறினோம். பிரச்சினை வரலாறு & புவியியல், அறிவியல்...
குரு என்பவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராயும் இருக்கலாம். ஆனால் நேர்மையானவராகத் தான் சொல்வதிலும் செய்வதிலும் தெளிவுள்ளவராக இருக்கவேண்டும்....
இவர் எங்களுக்கும் தனக்கும் தீங்கு செய்யவில்லை, நன்மை செய்தார், ஆக நான் முதலில் சொன்ன விதி இங்கே பொருந்துகின்றது...
>>>>>>>>>>>>>>>>
கடவுளை அறிந்தவர் மட்டும் தான் குரு என்றால்
இவர்களெல்லாம் குரு இல்லையா?
தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ எக்காலத்திலும் எண்ணம் சொல் செயலில் யாரொருவர் துன்பம் இல்லாமல் பார்த்துக்கொள்கின்றனரோ அவர் குருவிற்குரிய தகுதியினை அடைந்தவராவார். அசையாத நடுநிலை, அளவற்ற பொறுமை, நிஷ்காம்ய கர்மம் ஆகிய குணங்கள் அடிப்படையாய் அவரிடம் இருப்பவர் எவரோ அவர் குரு....
//எவர் ஒருவர் கடவுளை உணர்ந்திருக்கிறாரோ, அவரே குருநாதராவார்//
இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?
நீங்கள் சொல்லிய இந்த தகுதிகளில் எதுவுமே
இல்லாத பலர் பாடங்கள் போதிப்பதில்லையா?
பள்ளிகளில் குருவாக இருப்பதில்லையா?
>>>>>>>>>>>
அதன்பின் அவர்கள் நம் வாழ்வில் வருவதில்லை... ஆனால் எனக்கு அந்த பழைய கணக்கு வாத்தியார் (10 ஆம் வகுப்பிற்குப் பின் அவரை பார்க்கவில்லை...) இந்த நொடி வரை என் வாழ்வோடு இணைந்திருக்கின்றாரே...? எப்படி...? எல்லோரும் போதித்தார்கள்... ஆனால் எங்கள் மாணவர்களின் மனதினில் உயரமாய் இன்றும் இவர் இருக்கின்றாரே....?
இவர் ஒரு குரு....
மற்ற பாடங்களைப் போதித்தவர்கள் 10 வருட வினாத்தாட்களை மனப்பாடம் பண்ணி எழுதி பாஸ் பண்ண வைக்க உதவியதால் அவர்கள் சம்பளம் பெற்ற கூலிகள்....அவ்வளவே...!
கூலி வேறு; குரு வேறு, குழப்பம் வேண்டாம்.
நான் சொன்ன இந்த கணக்கு வாத்தியாரின் உதாரணத்தில் நான் சொன்ன எல்லா குணங்களும் அடங்கிவிட்டன. என் அனுபவத்திலிருந்தே குருவின் வரையறையை எழுத முடிந்தது்....
====================================================================================
Tthamizth Tthenee
reply-to nambikkai@googlegroups.com
to nambikkai@googlegroups.com
date Sep 28, 2007 3:48 AM
subject [NAMBIKKAI] Re: Today's Thought
mailed-by googlegroups.com
மிக அருமை நண்பரே நான் உங்களைப் புண்படுத்த
அந்தக் கேள்வியைக் கேட்க்கவில்லை
என்னுடைய வாதமே
நமக்கு கற்றுக் கொடுப்பவர்கள் யாராயினும்
அவர் நம்மைவிட அறிவில்,வயதில், அனுபவத்தில்
குறைந்தவராக இருப்பினும்
நமக்கு கற்றுக் கொடுக்கும்போது அவர் குருவாகிறார்
பொதுவாக ரிஷி மூலம் ,நதி மூலம்
பார்க்கக் கூடாது என்று பெரியோர் சொல்வர்
குருவுக்கு என்ன தகுதி என்று நாம் பார்க்க வேண்டாம்
நமக்கு அவருடைய மாணாக்கனாக
இருக்கும் தகுதியை வளர்த்துக் கொள்வோம்
கற்றுக் கொள்ள அசைப்படுபவனுக்கு
உலகில் அனைவருமே குருதான்
அப்பனுக்கே பாடம் சொன்ன முருகன்
சிவனுக்கே குருவானான்
அன்புடன்
தமிழ்த்தேனீ