Wednesday, November 28, 2007

vselv.....@gmail.com>
reply-to muthth...@googlegroups.com,
to muthth.....@googlegroups.com,
date Nov 28, 2007 12:29 PM
subject [muththamiz] Re: ஆங்கிலம் தெரியாத மாணவர் தற்கொலை
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com

hide details 12:29 PM (2 hours ago)



Reply


ரிஷி அண்ணா,,

முத்தமிழ் குடும்பத்தின் சார்பிலேயே வாழ்த்துகின்றேன்...

நம்பிக்கை நம்பிக்கை தன் மேல் நம்பிக்கை விடா முயற்சி இதுவே நமக்கு வேண்டும்..

மிகப் பயனுள்ள கட்டுரை....எப்போதும் போலவே எழுதிய நடையும் உள்வாங்கிக் கொள்ளும் படி எளிமையாக இருக்கு அண்ணா...

வா...ழ்...த்...து....க....ள்!


- Hide quoted text -
On 11/27/07, Raveendran Krishnasamy wrote:

- Hide quoted text -
அந்த மாணவனை மட்டுமே குறை சொல்லிவிடமுடியாது....

நானும் தமிழ் வழிக் கல்விதான். கல்லூரியில் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்ததும் ஒரு மிரட்சி; பயம்....

நகர்ப்புற மாணவ மாணவிகளைக் கண்டு அஞ்சி விலகி ஓடினேன். எல்லாப் பய புள்ளைகளும் ஒரே ஒங்கிலீபிசுலேயே பேசி டார்ச்சர் பண்ணிட்டானுங்க. பயத்துனால சுத்தமா படிப்பே வர்லே....

ஆனா வீட்லயம் ஊர்லயும் திட்ரதை நான் அவ்வளவா சட்டை பண்ணல..டேக் இட் ஈஸியா எடுத்துட்டேன்.

அப்ப எனக்குள் நான் சொல்லிக்கொண்ட சமாதானம் இதுதான்...

ஆனானப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை பாலிடெக்னிக் எண்ட்ரன்ஸ்ல ரெண்டு தடவை ஃபெயிலாகித்தான் சீட்டு பிடிச்சார்... படிக்றப்ப அவர் ஒரு மக்கு ன்னு வாத்தியார் சொன்னார்....

எடிசனை சரியான மக்குன்னு சொல்லி ஸ்கூல்ல சேத்துக்கவே இல்லை...

டைனமோ கண்டுபிடிச்ச மைக்கேல் ஃபாரடே அவ்வளவா படிக்க வசதியில்லாததால் புத்தகம் பைண்டிங் பண்ணிட்ருந்தார்...

அதனால் நானும் அவங்கள மாதிரி மேலே வருவேன்....

இப்ப நான் இருக்ற நிலை...வாத்தியார்கள் மற்றும் யுனிவர்சிடியின் அபிப்ராயம். அது அவர்களின் கருத்து; ஆனால் என்னோட நிஜம் வேறு. பரீட்சையில் கூட 35 மார்க் வாங்கினால் பாஸ் னு ஒரு அளவுகோல் வச்சி என்னை எடைபோடுறாங்க.... அவங்க அளவுகோல் வேற; என்னோட அளவுகோல் வேற...

நான் ப்ளாட்ஃபாரத்துல இருந்தாலும் வாழ முடியும்...கோபுரத்து மேலேயும் ஏற முடியும்...

அப்டீன்னு ஒரு 1000 தடவை என்னை நானே சமாதானப்படுத்தியிருந்தேன்.

Physics Associationல் எல்லாரும் ஆங்கிலத்தில் பேச... நான் தைரியமாய் தமிழில் என்னோட கண்டுபிடிப்புக்களை அள்ளிவிட....

எல்லார் பார்வையும் என் மீது பட்டது....

அட.... இந்த அழுக்கு மஞ்சப் பைக்காரன் ட்ட எதோ ஒரு சரக்கு இருக்குடோய் னு ஒரு அபிப்ராயம் வந்துச்சி....

அப்றம் எல்லா மேடையிலயும் எல்லா துறையிலயும் வெளாசி வாங்கினேன்....

கவிதையரங்கம், பட்டிமன்றம். மேடைப் பேச்சு... நாடகம்...அப்டீன்னு... சில நாடகங்கள் ("வேதம் புதுமை செய்..." யுனிவர்சிடி அவார்ட் வாங்கிச்சி...) எல்லாராலயும் நல்லா கவனிக்கப்பட்டது. (இப்போ குறும்பட இயக்குனரா இருக்ற பாலாஜி கிருஷ்ணகுமார் ... தமுஎச வில் என்னோட நாடகங்கள்...)

நடைபாதை நாடகக்குழு ஆரம்பிச்சி ஊர் ஊரா கிராமம் கிராமமா போட முடிஞ்சது...

அப்றந்தான் தெரிஞ்சது இங்கிலீபீசு ஒன்னும் ஒரு பெரிய விஷயமே இல்லை... பொறக்றப்ப நமக்கு என்ன மொழி தெரிஞ்சது....? னு ஒரு ஞானம் வந்துச்சி....

அந்த பயபுள்ளைகளுக்கு இங்கிலிபீஷ் ல படிக்க ஒரு வாய்ப்பு இருந்துச்சி... நான் கிராமத்துல விவசாயம் பண்றதால அந்த வாய்ப்பு எனக்குக் கெடைக்காம போயிருச்சி... அதனாலென்ன...? படிப்பு ஒன்னுதானா வாழ்க்கை...?

ஜீடி நாயுடு எந்த யுனிவர்சிடியில படிச்சி விஞ்ஞானியானார்...?
மைக்கேல் ஃபாரடே என்ன படிச்சவரா,...?
ஐன்ஸ்டீனே பாலிடெக்னிக் எண்ட்ரன்ஸ் ல கோட்டடிச்சவர்... அப்றம் பாலிடெக்னிக்ல நிறைய அரியர்ஸ் வச்சிருந்தார்... அவர் பெரியாள் ஆகலையா...?

எடிசன் எங்கன படிச்சார்...?

அப்பத்தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது...

படிச்சவங்களால முன்னேற முடியாதுன்னு...!

ஏன்னா அவங்க முன்னேற்றம் னு நினைக்கிறது... வேளாவேளைக்கு சோறு; ஒரு ஃப்ளாட் ஒரு குடும்பம்; நல்ல அந்தஸ்து; பென்ஷன் நகர்ப்புற வாழ்க்கை... இதுக்கு மேலே அவங்களால உயரமுடியாது...னு பட்டுச்சி..

நீ யார்...? அந்த மாதிரி சராசரி மனிதனாகவா வாழ விரும்புகின்றாய்..?

தாண்டனும்.... தாண்டனும்.... தடைகளைத் தாண்டனும்....

இப்ப வேணா முடியாம இருக்கலாம்...

ஒரு காலத்துல நடக்க முடியாம தவழ்ந்துட்டு இருந்தோம்...
நடக்க முயற்சிக்றப்ப எத்தனை தடவை கீழே விழுந்துருப்போம்...? இப்ப எவ்ளோ ஓட்டமா ஓட முடியுது...? பி.டி. உஷா கூட சின்ன வயசுல முதன் முதலா நடக்கக் கத்துக்கிட்ட பொழுது எத்தனை தடவை விழுந்து அழுதிருப்பாங்க...? பிறகு ஓட்டத்துல தங்கப்பதக்கம் வாங்கலியா...?

ஒரு காலத்துல சைக்கிள் ஓட்றவங்களைப் பாத்தா ரொம்ப அதிசயமா இருந்துச்சி...

கத்துக்கிட்டதக்கப்பறம்...? சைக்கிள் யாத்ரா போகலியா....?

நீச்சலடிக்றவங்களைப்பாத்தா பொறாமையா இருந்துச்சி...அப்றம் தண்ண்மேலே மிதக்ற கலைய கத்துக்கலயா....?

தலைகீழா நின்னு சிரசானம் கத்துக்கலயா...? வெட்டவெளித் தரையில் நட்டநடுவில் பிடிமானமின்றி தலைகீழாய் நிற்கவில்லையா...?

எல்லாம் பழக்கம்; பழக்கம் வர பயிற்சி செய்யவேண்டும்....ஆயிரம் முறை முயன்று தோல்விகண்டாலும் 1001 வது முறை முயலுங்கள் னு விவேகாந்தர் சொன்னத வேதவாக்கா எடுத்துக்கிட்டோம்னா புரியும்...

1000 முறை பயிற்சி எடுங்கள்.... வெற்றி நிச்சயம்....

ஆங்கிலம் மட்டுமல்ல; கடினமான ஜப்பான் மொழி கூட கற்கலாம்...
ரஷ்யன் மொழியும் சரி; ஜப்பான் மொழியும் சரி முதன் முதலில் வகுப்பறையில் அமரும்பொழுது மிகவும் கடினமாகவே இருந்தது...(அது ரொம்ப வருஷத்துக்கு முந்தி படிச்சதுங்கோ...இப்ப சுத்தமா மறந்து போச்சு..!)

அவ்ளோதாங்க....

ச்யாவ்ஸ்... (குட்பை ன்னு ஜெர்மனில ...)







On Nov 27, 2007 8:22 PM, Kamesh wrote:

// என்னதான் இருந்தாலும் தற்கொலை தான் இதற்கு முடிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை!.கவலையாகத்தான் இருக்கிறது//

ஆமாங்க.. தற்கொலைக்கு தூண்டிய சூழலையும் கவனிக்க வேண்டும்..
அவனுக்கு Pressure இல்லையென்றால் ஏன் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும்.
10 அல்லது 12 வகுப்பு வரை எல்லா பாடங்களிலும் சிறந்து விளங்க்கிய
மாணவன் கல்லூரியில் பெயில் ஆவதை அவனால் தாங்க்கிக் கொள்ளவே
முடியாது..
அதனால் தான் மாணவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்ச்சியை
ஏற்படுத்த வேண்டுமென்பது எனது ஆசை..
அதை ஒரு பாடமாக கூட நடத்தலாம்.. அல்லது விளையாட்டு போன்றும்
நேரம் ஒதுக்கலாம்..

நான் படிக்கும் போது காலை முதல் Period நல்லொழுக்கத்துக்காக
ஒதுக்கப்பட்டது..அதில் எல்லா பெரியவர்க்ளின், மதங்களின்
கதைகள் மட்டுமே கற்றுத்தரப்படும்.. இப்பொழுது இருக்கிறாதா என தெரியவில்லை...


மாணவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது..
என் பள்ளி தோழர்கள் ஆங்கில வழி கல்விக்கு பயந்துக் கொண்டு
படிப்பை தொடரவில்லை.. இது உண்மை.
என்னுடன் தொடங்கியவர்கள்
சிலர் பாதியிலேயே நிறுத்தி விட்டனர்.
சிலர் தமிழ் புத்தங்க்களைப் படித்து பரிட்ச்சை மட்டும் எழுதினார்கள்.
அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை

இது மிகவும் வேதனைக்குரியது..











--------------------------------------------------------------
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்

www.rishiraveendran.com
www.rishiraveendran.tk

"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."


Remind Me My Lord Who I Am
I Am Om, I Am Om, Eternal Om
Through this Life of Distraction and of Illusion, Remind Me My Lord, Who I Am
I AM Truth, I Am Peace, Divine Bliss
Ananda Svaroopa, Hey Prema Svaroopa, Remind Me MY Lord Who I Am
I AM Love, I Am Love, Pure Love


--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

Wednesday, November 21, 2007

ஆண்கள் அழகாய் இருக்க....

ஆண்கள் அழகாய் இருக்க ....

1. தினமும் ஒரு முறை யோகா அல்லது எளியமுறை உடற்பயிற்சி செய்யவே ண்டும்.
2. காலை, மாலை காயகற்பம், தவம் செய்யவேண்டும்.
3. வாரம் ஒரு நாள் மெளன விரதம் இருத்தல் நல்லது.
4. சத்துள்ள இயற்கை நல்லுணவுகளை மேற்கொள்ளவேண்டும்.
5. உடலிலும் மனதிலும் மாசு களையவேண்டும்.
6. 6 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் வேண்டும்.
7. உடலுழைப்பு கண்டிப்பாக வேண்டும்.
8. நல்ல பழக்க ஒழுக்கங்களை மட்டுமே கடைபிடிக்கவேண்டும்
9. புகையிலை,மது, மங்கை, மாமிசம் கூடாது.
10. சத்திய தர்ம நெறிகளைக் கைக்கொள்ளவேண்டும்.
11. அளவான எளிதில் செறிக்கக்கூடிய சத்துள்ள உணவு உட்கொள்ளவேண்டும்.
12. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பசிக்கும்படி குறைவாக உணவு உட்கொள்ளவேண்டும்.
13. முகத்தில் தேஜஸ் குடியிருக்கவேண்டும்.
14. சுத்த சைவ உணவுகளையே உட்கொள்ளவேண்டும்.
15. எப்பொழுதும் அன்பாகவே இருக்கவேண்டும்.
16. கருணையுடன் நோக்கவோ அணுகவோ வேண்டும்.
17. எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கவேண்டும்.
18. எப்பொழுதும் மனதினை சமநிலையில் (எந்த உணர்வுகளுக்கும் ஆட்படாது) வைத்திருக்கவேண்டும்.

இதை மட்டும் ஒரு 6 மாசத்துக்கு கடைபிடிச்சிப் பாருங்க....
அப்பறமா வந்து சொல்லுங்க....ரிசல்ட் என்னான்னு...