Monday, June 9, 2008

செல்வனின் மடலுக்கு ரிஷியின் பதில்....

2008/6/9 செல்வன் :

ஷைலஜா என்ற பேரை சைலசா என்று தனித்தமிழ் ஆர்வலர்கள் எழுதுவார்கள்.


>>>>>> ஷைலஜா ----> மலைமகள்

ஸ்டாலின் என்பதை இசுடாலின் என்பார்கள்.மாஸ்கோ மாசுகோ ஆகும்.

பீட்டர் பேதுரு ஆவார்.தாம்ஸ் தோமைய்யர் ஆவார்.அர்னால்ட்

>>>> தோமைய்யர் என்பதில் ஐயர் என்பது தமிழ் வார்த்தை அல்ல.

ஷ்வார்சனேகர் என்னாவர்ன்னு தெரியலை.கூடிய விரைவில் அந்த பெயரும் தமிழ்படுத்தப்படலாம்:-)

>>>> இசுவார்சனேகர் என்றே அழைக்கலாமே...!

காமேஷ் என்றாம் காம சிவன்னு பொருளில்லை.ஏனப்பா அந்த அழகான பேரை இப்படி கொல்றீங்க?பெயர்சொல்லை மொழிபெயர்த்தால் விபரீதமாகிவிடும்யா.

டிக்சன் என்ற பேரை என்னன்னு மொழிபெயர்ப்பீங்க?ஆண்குறியின் மகன்னா?:-)

நிர்மலா = நிர்+மலம் என்பது வடமொழி சொல்.தமிழில் அதை மொழிபெயர்த்தா கந்தரகோளமாகிடும்யா :-)

>>>> நிர்மலம் ---> கசடுகளற்ற/மாசற்ற

காமேஷ் என்பது அழகான பொருள் பதிந்த பெயர்.அந்த பொருளின் அர்த்தத்தை விளக்கினா பத்தி பத்தியா எழுதலாம்.

காமராஜன் என்று நம்ம கர்மவீரர் காமராஜருக்கு பெயர் சூட்டினார்கள்.ஏன்?அவர் 'காமத்துக்கு மன்னனாக' இருக்கணும்னா?காமராஜன்,காமேசன் எல்லா பெயருக்கு ஒரே பொருள் தான்.அதாவது "காமத்தை வென்றவன்" தான் காமராஜனான காமேசன்.

மன்மதன் சிவனை காமவசப்பட வைக்கிறேன் என்று கிளம்பி ஈசன் மேல் மலர்க்கணைகளை எய்தான்.ஈசன் காமனை நெற்றிக்கணால் சுட்டெரித்தான்.அப்புறம் ரதியின் வேண்டுகோளுக்கு இணங்கி விஷ்ணு மன்மதன் ரதியின் கண்ணுக்கு மட்டுமே தெரிவான்னு வரம் கொடுத்தார்.

காமனின் கணைக்கு உலகமே அடிபணியும்போதும் சிவன் அடிபணியவில்லை.காம வசப்படவில்லை.காமனை இப்படி வென்றதால் தான் அவர் காமராஜன் எனவும் காமேசன் எனவும் அழைக்கப்பட்டார்.

இப்படித்தான்யா பொருளின் அர்த்தம் தெரியாமலும், வட மொழி எது தமிழ் எது என்று புரியாமலும் பலபேர் கும்மியடிக்கறாங்க.நம்ம முதல்வர் பேரு தட்சணாமூர்த்தி.வட மொழி பேரை மாத்தி தூய தமிழ் பேர் வைகக்றேன்னு கிளம்பி கருனாநிதின்னு பேரை மாத்திகிட்டார்.அப்புறம் பாத்தா கருணாநிதியும் வடமொழி சொல்தான்.
சூரியநாராயண சாஸ்திரி என்ற பெயரை தமிழ்படுத்தறேன்னு கிளம்பி பரிதிமாற் கலைஞர்ன்னு ஒரு தமிழறிஞர் பேர் வெச்சுகிட்டார்.அப்புறம் பாத்தா பரிதி, மால் என்பதே வடமொழி சொற்கள் தான்.


>>>>>

என் பெயரினை நான் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புப் படிக்கும் காலங்களில் 'பகலதியன்' என தமிழ்ப் படுத்தி எழுதிக்கொண்டிருந்தேன்.

இரவீந்திரன் ----> இரவி + இந்திரன்

இரவி ---> பகல்
இந்திரன் ---> தேவர்களின் தலைவன் ---> அதியன் (இது சரியா தப்பான்னு அப்ப எனக்குத் தெரியாது....)

தேர்வில் கேட்கப்படும் தமிழ்க் கட்டுரைகளுக்கு நான் என் சொந்தக் கருத்துக்களை அள்ளிவிட்டு '......' என்று பகலதியன் என்ற கவிஞர் கூறுகின்றார்.... பகலதியன் என்ற அறிஞர் கூறுகின்றார் என சரடு விட்டுக்கொண்டிருந்தேன்.

விடைத்தாள் திருத்தும் தமிழாசிரியரும் பலமுறை அவர் யாரோ மிகப்பெரிய அறிஞரோ... நமக்குத்தான் தெரியவில்லையோ என விழிபிதுங்கிடுவதைக் கண்டு ரசித்திருக்கின்றேன்.

அவருக்கு என்னிடம் நேரடியாகக் கேட்கவும் பயம்.... யாரந்த பகலதியன் என்ற அறிஞர்.....?

மற்ற மாணவர்களிடம் தன்னுடைய அறியாமை வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம்....!

எனவே எனக்கு மார்க்குகள் கணிசமாகவே வந்துகொண்டிருந்தன...!!!!! அரசுப் பொதுத்தேர்விலும் இதையே கடைப்பிடித்தேன்....!!!!!

நான் என்னுடைய சொந்தக் கருத்துக்களை தேர்வில் பகலதியன் என்ற அறிஞர் சொல்வது போல் சொல்லும்பொழுது ஏறக்குறைய வள்ளுவர், ஒளவையார் இவர்களெல்லாம் நன்கு பரிச்சயமானதால் அதனை ஒரு அறிஞர் சொல்வது போல் அமைக்க முடிந்தது.....


உதாரணமாக ஒழுக்கம் என்று ஒரு கட்டுரை எழுதவேண்டும்.....

நான் வள்ளுவரை அங்கே கொஞ்சம் இழுப்பேன்... ஒளவையாரைக் கொஞ்சம் இழுப்பேன்.

அப்றம் ஒழுக்கம் என்பது, ‘'தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ எந்தக் காலத்திலும் எண்ணம் , சொல், செயல் இவைகளில் தீங்கு இல்லாமல் அமைத்துக்கொள்வதே ஒழுக்கம்...' என்று பகலதியன் என்ற தமிழறிஞர் செப்புகின்றார்.... என கலர் கலராய் ரீல் விட்டுக்கொண்டிருந்தேன்....!!!!!!

திருடனுக்குத் தேள் கொட்டியது போலிருக்கும்...!!! இந்த வரைமுறையை மறுதலிக்கவும் முடியாது; என்னுடைய சரடு என்றும் அவரால் புரிந்துகொள்ளவும் முடியாது.... ஒரு வேளை பகலதியன் என்ற தமிழறிஞர் மு.வா மாதிரி இருந்திருப்பாரோ அந்தக் காலத்தில் என சிண்டைப் பிய்த்துக்கொள்வார்கள்.

பி.கு: இங்கே ஒழுக்கத்திற்கு நான் கையாண்ட அந்த வரையறை என்னுடையது அல்ல; என் குருவினுடையது.


--
செல்வன்

www.holyox.tk

No comments: